Total Pageviews

Friday, 29 April 2011

ரஜினிக்கு வயிற்று போக்கு, காரணம் தமிழன் வடிவேலு!


வடிவேலு வடிவேலு வடிவேலு .... இரவு பகல் என எந்த நேரமானாலும் எல்லாவித மக்களையும் சிரிக்க வைக்கும் டாக்டர். சின்ன குழந்தைகளின் நண்பன்.வயதான பெரியவர்களின் செல்ல மகன். நடுத்தர வயதினரின் அன்றாட சர்வைவல் பிரச்சனைகள தன் நகைச்சுவையால்  தற்காலிகமாக தள்ளி வைக்கும் தோழன். பொது எதிரி என எவரும் இல்லை. சிங்கமுத்து  போன்ற ஏமாற்றுகாரர்களிடம் ஏமாந்து போனதால் பொதுமக்களிடம் இன்னும் கொஞ்சம் அனுதாபமும் கூட. அவருடைய நகைச்சுவை கூட மற்றவர்களை அடித்து குரூர இன்பம் காணும் சைக்கோத்தனமானது அல்லது அவ்வகையான குரூரத்தை சிரிப்பு என்கிற பெயரில் அதை காண்பவர்களிடமும் அத்தகையான குரூர வக்கிர எண்ணத்தை வளர்க்கும் வகையிலான நகைச்சுவை அல்ல. அப்படிப்பட்ட வடிவேலு சமீபமாக அதிகமாக விமர்சனத்துக்கு ஆளானதன் காரணம் அரசியல். தமிழக அரசியல்.

அரசியல்வாதியும்,  ஹீரோ நடிகருமான விஜய்காந்தின் வீட்டின் அருகே தான் வடிவேலுவின் வீடும். சாதாரண கார் பார்க்கிங் சண்டை இப்போது அந்த ஹீரோவை சீரோ ஆக்கும் வரை கொண்டு வந்து விட்டிருக்கின்றது. பக்கத்து வீட்டில் இருக்கும் சக நடிகன் வீட்டில் சண்டை போடுவதே தவறு. அதிலும் அந்த நடிகனின் மகள் மண்டையை உடைத்ததும் அப்பா நிலையில் இருந்த அந்த நடிகன் உடைந்து போனான். ஆவேசம் வரத்தானே செய்யும். பின்னே என்ன? சாதாரண குடிமகனாக இருந்தால் சாபம் விட்டு விட்டு போயிருப்பான். இவன் தான் புகழான நடிகனாயிற்றே. பேட்டி கொடுத்தான். "இதே விஜய்காந்தை நான் தேர்தலில் எதிர்து நின்று தோற்கடிப்பேன்". எல்லாம் முடிந்தது. காலம் ஓடியது. அவனும் அதை மறந்து விட்டான். ஆனால் பத்திரிக்கையாளன் மறப்பானா?

தேர்தல் வந்தது. ஓடிப்போய் அந்த நகைச்சுவை நடிகனிடம் ஞாபகமாய் கேட்டான். "விஜய்காந்தை எதிர்த்து தேர்தலில் நிற்பதாக சொன்னீர்கள். நிற்பீர்களா?" அதற்கு அந்த நடிகன் சொன்னான். "முதலில் அவர் தள்ளாடாமல் நிற்கட்டும். பின்னே அவரை எதிர்த்து நான் நிற்பதா வேண்டாமா என்பதை தீர்மானித்து கொள்கிறேன்". விடுவார்களா பத்திரிக்கைகாரர்கள். இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுத வந்தது வினை. மீண்டும் அதே ஹீரோ நடிகரின் ரசிகர்களால் மிரட்டப்பட்டான்.

இதை திமுக சரியாக பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தது. இந்த நகைச்சுவை நடிகர் தீர்மானமாக ஒரு நிலையான முடிவை எடுத்தார். தனக்கும் பாதுகாப்பு வேண்டும். தன் எதிரியையும் வீழ்த்த வேண்டும்.

எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பதில் ஆணித்தரமாக இருந்தார். திமுக தலைமையில் அமைந்த கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய முடிவெடுத்து கலைஞரின் முன்னிலையில், மருத்துவர் ராமதாஸ், திருமா, தங்கபாலு, கொமுக பெஸ்ட் ராமசாமி, ஸ்ரீதர்வாண்டையார், சுபவீ அய்யா, ஆசிரியர் வீரமணி, பேராசிரியர் காதர் மொய்தீன் ஆகியோர் முன்னிலையில் அது வரை யாரும் தொடாத பொருளை எடுத்து தன் கன்னிப்பேச்சை பேசப்பேச கூட்டம் ஆர்பரித்தது. மீடியாக்கள் கூர்ந்து கவனித்தன. அடுத்த நாள் அனைத்து பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சிகளும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து காட்ட காட்ட திமுக தலைமை மட்டும் தினமலர், தினமணி, ஜெயா தொலைக்காட்சி, துக்ளக் எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கூட்டணியின் பிரதான நம்பிக்கை நட்சத்திரமான ஒரு அரசு சார்பு கழகம் ஆகியவை என்ன சொல்கின்றது என பார்த்தது. அப்பட்டமாக அவர்களின் பயத்தை தங்களின் வடிவேலுவின் மீதான விமர்சனம் வழியாக பார்த்தது திமுக. எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் கமிஷன் அவதூறு வழக்கு பதிவு செய்தது வடிவேலு மீது.

உடனே திமுக வடிவேலுவை தனக்கான பிரம்மாஸ்திரமாக பயன் படுத்திக்கொள்ள தீர்மானித்தது. வடிவேலுவும் அவதூறு வழக்கினால் துவண்டு போய் விடவில்லை. தன் எதிரியை கண்மூடித்தனமாக எதிர்க்க தொடங்கினார். மேடை போட்டு கொடுத்தது திமுக. முழங்கினார் வடிவேலு. வடிவேலு வெடிவேலுவாக மாறினார். திமுக தலைமை  ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு நிமிடமும் வடிவேலுவுக்கான பேச்சை கூர் தீட்டி கொடுத்தது. மக்களின் நாடி பிடித்து பேசினார் வடிவேலுவும். இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியா? உடனே விஜய்காந்து இஸ்லாமியர்களை மட்டுமே தீவிரவாதியாக தன் படங்களில் சித்தரித்ததை பேசினார். 108 ஆம்புலன்ஸ் அந்த வழியே போனதா? உடனே அது பற்றி விவரித்தார். பள்ளி குழந்தைகளை கண்டால் வாரம் 5 முட்டை போடுவதை பேசினார். காவடி தூக்கி செல்லும் பக்தர்களை கண்டால் அவர்கள் தாளத்துக்கு ஆடினார்.

இங்கே ஒன்று மட்டும் நன்றாக கவனிக்க வேண்டும். காசுக்கு மாரடித்தல் இப்படி அடிக்க முடியாது. எடுத்த காரியம் ஜெயம் ஆக வேண்டுமெனில் அதற்கான உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதை வடிவேலு நன்கு அறிந்திருந்தார். அவர் செல்லும் இடமெல்லாம் எம் ஜி ஆருக்கு அடுத்தபடியாக கூட்டம் அலைமோதியதை முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் தினமணியில் அரைப்பக்க கட்டுரையாக வடித்தார்.  தேர்தல் நாள் முடியும் வரை தன் உழைப்பை கொஞ்சமும் குறைத்துக்கொள்ளவே இல்லை. தேர்தல் நாள் அன்று ஓட்டு போட்டு தன் கடமையை செய்தார். பின்னர் திமுக தலைவரை கண்டார். ஆசி வாங்கினார்.

ஆனால் திரையுலகம் விக்கித்து நின்றது. ஒரு முன்னாள் நடிகர் சங்க தலைவர், ஏகப்பட்ட கட்ட பஞ்சாயத்து செய்து பிரச்சனைகளை தீர்த்து வைத்தோ நீர்த்து போக வைத்தோ செய்திருந்த விஜய்காந்தையே இவர் எதிர்த்ததால் இவர் ஹீரோ ஆகிப்போனார். அந்த நடிகர் தன் மீது இப்படி கல் விழும் சொல்விழும் என நினைத்து பார்க்காமையால் சதா சர்வகாலமும் குடிக்க தொடங்கினார். போதையில் பேசுவது என்ன என தெரியாமல் உளற ஆரம்பித்தார். கடைசியில் அவர் காமடியனாகிப்போனார்.

அதன் பின்னர் நடந்தது தான் வேடிக்கை. வடிவேலு நடிக்க இருந்த படங்களில் இருந்து கழட்டி விடப்பட்டார் என செய்திகள் வரத்தொடங்கின. பிரபு தேவா தன் படத்தில் இருந்து வடிவேலுவை கழட்டி விட்டார். அதற்கு காரணம் பெரியதாக தோண்டி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இல்லவே இல்லை. பிராமண சமூகத்தை மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பிரபுதேவா இரு வழிகளிளும் ஜெயலலிதாவின் விசுவாசியாக அபிமானியாக ஜெயலலிதாவுக்கு ஆதரவு கொடுப்பது என்பது இயற்கையே. ஏனனில் ஜெயலலிதாவும் கர்நாடக நாடு. ஜெயாவும் பிராமண குலம். வடிவேலு என்ற தமிழன்  தன் இனத்தை சேர்ந்த தன் நாட்டை சேர்ந்த ஜெயாவின் வெற்றிக்கு ஆப்பு வைத்ததை அவர் மனம் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.

ஆனால் பிரச்சனை அதுவல்லை. தமிழர்களின் வியர்வை காசை மகாராஷ்டிராவில் முதலீடாக ஆக்கும் ரஜினி தான் இப்போதைய பிரச்சனை. ரஜினியை ஆரம்பம் முதலே நன்கு கவனித்து வந்தால் ஒன்று மட்டும் நிச்சயமாக தெரியும். கர்நாடககாரனுக்கு முழு ஆதரவும் தருவார். கர்நாடகாவில் இருந்து பிழைக்க தமிழ்நாடு வந்து நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாத நடிகை நடிகருக்கு கூட சின்ன சின்ன காட்சிகளில் கூட முக்கியத்துவம் கொடுத்து பிழைக்க வழி வகை செய்வார். போகட்டும். தன் கர்நாடக பாசம் இருக்க வேண்டியது தான். அதே போல தான் மனம் முடித்த பிராமண சமூகத்துக்கும் தன்னால் ஆன அத்தனை ஆதரவுகரத்தையும் நீட்டி முழங்குவார். போகட்டும். கூட வாழும் மனைவிக்கான ஜாதிப்பாசம் என்றே கூட வைத்துக்கொள்வோம்.

ஆனால் தான் நடிக்கும் "ராணா" படத்தில் இருந்து வடிவேலுவை நீக்க காரணம் என்ன? ஈகோ தான். ஒரு காமடி நடிகன் தன்னை போன்ற ஒரு  ஹீரோவை பூஜ்ஜியம் ஆக்கியது கண்டு பயம். ஏற்கனவே பாபா படம் தோல்வியில் முடிந்த போதும் அதன் பின்னர் வந்த சந்திரமுகி படம் ரஜினியின் எந்த வித பார்முலாவின் படியும் எடுக்கப்படாவிடினும் வடிவேலுவின் நகைச்சுவை தான் படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது என்பதை பலரும் பத்திரிக்கையில் எழுதி விட்ட பிறகு, இப்போது விஜய்காந்தை வடிவேலு என்னும் தமிழன் பூஜ்ஜியம் ஆக்கிவிட்ட நிலையில் ராணா படத்தில் வடிவேலுவை வைத்திருக்க பயம் வந்து விட்டது அந்த மாஸ் ஹீரோ ரஜினிக்கு. தவிர  தேர்தல் நாள் வரை திமுக தலைமையோடும் திமுகவினரோடும் நெருக்கமாக இருப்பதை போல காட்டிக்கொண்டாலும், பாட்ஷா படத்தின் போது ரஜினிக்கு ஜெயா சொல்ல முடியாத இன்னல் பல கொடுத்து இருந்தாலும் ரஜினியின் தாய்நாட்டு பாசம் மற்றும் தான் மணமுடித்த மனைவியின் ஜாதிப்பாசம் ஆகியவைகள் எப்போதுமே ரஜினி உள்ளுக்குள் ஒரு அதிமுக என்பதையே அவரை அதிகம் நெருங்கியவர்கள் உணர்ந்த ஒரு விஷயம். அது தேர்தல் தினத்து அன்று பத்திரிக்கையாளர்களின் பிளாஷ் வெளிச்சத்தில் வெட்ட வெளிச்சம் ஆகியது. அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போடுவது தெரிந்து போனது. அதையே ஜெயா விடியில் திரும்ப திரும்ப காட்டி அன்றைக்கு ரஜினி ரசிகர்களிடம் வாக்கு கேட்ட நிகழ்வும் தேர்தல் கமிஷன் முன்னிலையிலேயே நடந்தது.

யார் வேண்டுமானாலும் யாருக்கு ஓட்டு போட்டாலும் தவறு இல்லை. ஆனால் ரஜினி தன் நடிப்பு திறனை இந்த இடத்தில் திமுக தலைமைக்கு காட்டியது தான் எரிச்சலின் உச்சகட்டம் திமுக தொண்டனுக்கு. "ஆமாம் நான் அதிமுகவுக்கு ஓட்டு போட்டேன்" என தைரியமாக சொல்ல கூடாது, அது தேர்தல் கமிஷன் விதி. ஆனால் திமுக தலைமையிடம் சென்று எதற்காக மன்றாட வேண்டும். இதோ கீழே இருக்கும் செய்தியை பாருங்கள்.

\\\\Superstar Rajinikanth has reportedly given an explanation to Tamil Nadu Chief Minister and DMK president M Karunanidhi on some television channels showing him voting for the AIADMK during the polling for Assembly elections on Wednesday.

When the top actor came to the Stella Maris College polling booth, lensmen literally chased him and even captured the visuals of Rajini doing his democratic duty. And some television channels aired the footage too, saying he voted for the ‘two leaves’, the symbol of the AIADMK.

This resulted in the Election Commission issuing a stern warning to the channels, saying “it is a poll violation and telecasting such a visual is a crime. Both the videographer and broadcaster will be punished”. Following this, the visuals were taken off from the air.

Meanwhile, Rajini, who met Karunanidhi during a special show of ‘Ponnar Sankar’, told the Chief Minister that the cameramen had insisted him to go for a ‘retake’ while pressing the EVM button and accidentally his hands pressed the two leaves symbol.

The DMK leadership seems to have accepted the explanation, with Karunanidhi exchanging pleasantries with the Superstar during the ‘Ponnar Sankar’ show.\\

இப்படி மன்றாட வேண்டிய அவசியம் என்ன ரஜினி என்னும் மாஸ் ஹீரோவுக்கு? பயம். திமுக வெற்றி பெற்றால் என்ன செய்வது என்கிற பயம். இந்த பயம் தேவையே இல்லாதது. அதற்காக திமுக என்ன உங்களை கடித்து குதறவா போகின்றது? அப்படி திமுகவுக்கு அஞ்சினால் பின்னர் எப்படி நீங்கள் மாஸ் ஹீரோ? அப்படி என்றால் ரோபோ படம் இயக்குனர் ஷங்கரால், தயாரிப்பாளர் கலாநிதிமாறனால், நடிகை ஐஸ்வர்யாவினால் மட்டுமே ஓடியது என்று ஒத்து கொள்கின்ரீகளா ரஜினி? அன்புமணி ராமதாசுக்கு பயந்து தானே சிகரட் பிடிப்பதை உங்கள் படத்தில் வைப்பதில்லை? உங்கள் மாஸ் ஹீரோத்தனம் உண்மை என்றால் அப்படி செய்திருக்க கூடாது தானே? சிகரட் பிடிப்பது குற்றம் என உண்மையிலேயே நீங்கள் உணர்ந்து அன்புமணி ராமதாஸ் சொல்வதில் இருக்கும் உண்மையை நீங்கள் நிஜமாகவே உணர்ந்து இருந்தால் நிஜ வாழ்க்கையிலும் அதை விட்டிருக்க வேண்டும். அதை விடுத்து உங்கள் வியாபாரம் மாத்திரம் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் சிகரட்டை படங்களில் மாத்திரம் விட்ட நீங்கள் மாஸ் ஹீரோ என இனி சொல்லிக்கொள்ள வேண்டாம்.

இதோ இன்று வடிவேலு திமுக தலைவரை சந்தித்து விட்டு வரும் போது கேட்ட கேள்வி ஒன்றில் \\ ராணா படமாக இருக்கட்டும், காணா  படமாக இருக்கட்டும், எந்தப் படமாக இருந்தாலும் என்னை தூக்குவதைப் பத்தி நான் கவலைப்படவில்லை. மக்களை சென்றடைந்த திட்டங்களை பற்றி நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இதனால் என்னை சினிமா கேரியரில் இருந்து தூக்கினாலும், தூக்காவிட்டாலும் நான் அதைப்பற்றி கவலைப்படமாட்டேன். வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். காட்சிகள் மாறும்\\  என்றார். இப்படி ஒரு நகைச்சுவை நடிகர் ஒரு மாஸ் ஹீரோ படத்தை பற்றி மீடியாவில் சொல்லி அது இன்று முழுவதும் எல்லா தொலைக்காட்சியிலும் மாறி மாறி ஒளிபரப்பு ஆகின்றது தலைப்பு செய்தியாக. மேலும் " எல்லாம் மே 13ம் தேதி மாறும். இங்க வந்து ஆசி வாங்கிட்டு போயிட்டாங்க" என்றார்.  ஆக வடிவேலு என்னும் தமிழ் பாம்பு, ரஜினி என்னும் கர்நாடக மற்றும் ஜாதி பற்றாளனை தீண்ட  லொக்கேஷன்  பார்த்து விட்டது.நேரம் குறித்து விட்டது.  ரஜினியே அந்த பயத்தில் தான்  இன்று உங்களுக்கு வயிற்றுப்போக்கு வந்தது. இனி தமிழன் மீது உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டினால் வடிவேலு போன்ற பலதமிழ் நாகங்கள் உங்களை தீண்ட தயாராக இருக்கின்றது என்பதை சீக்கிரம் உணர்வீர்கள். நல்லபடியாக உடல்நிலையை கவனித்து கொண்டு வீடு வந்து சேருங்கள். சீக்கிரம் தமிழனோடு யுத்தம் செய்ய புதிய திரைக்கதையோடு வாருங்கள். எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம்!

ரஜினிக்கு வயிற்று போக்கு, காரணம் தமிழன் வடிவேலு!

Monday, 25 April 2011

சாய்பாபாவினால் பளீர் பகுத்தறிவாளர்கள் உதயம்!


சத்யசாய்பாபா இறந்து விட்டார் அல்லது மறைந்து விட்டார் அல்லது இறைவனடி சேர்ந்தார் அல்லது காக்காய் தூக்கிப்போய் விட்டது எது வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இறந்து போயிருக்க கூடாது என்பதே நேற்று முதல் என் எண்ணமாக ஆகிவிட்டது. காரணம் தமிழ் வலைப்பதிவர்கள். நவதானியத்தை ஊற வைத்து அடுத்த நாள் பார்த்தால் முளை விட்டு பீறிட்டு கிளம்புமே அது போல பளீர்ன்னு ஒரு பகுத்தறிவு ஒளிப்பிழம்பு தமிழ் வலைப்பதிவர்கள் இடையே பீறிட்டு கிளம்பியிருக்கின்றது. போறவன் வர்ரவன் புண்ணாக்கு பருத்தி கொட்டை பதிவர்கள் அதாவாது கோவிகண்ணன், ஆர் கே சதீஷ்குமார் என பளீர் பகுத்தறிவாளர்களும் இடையே புகுந்து ஸ்ரீசாந்த் உலகக்கோப்பையை தூக்கிகிட்டு குதிப்பது போல கொண்டாட்டம்.அதாவது ஆதாம் ஏவாள் காலம் முதலே கடவுள் எதிர்ப்பு பற்றி எழுதிக்கொண்டு இருக்கும்  டாக்டர் ருத்ரன், தமிழ் ஓவியா ஆகிய பதிவர்ளை விட இந்த குஞ்சு குளுவான்களின் குதியாட்டம் டோனியே சும்மா இருக்கும் போது ஸ்ரீசாந்த் குதித்தது போலத்தான்.  (இன்னும் எங்க அண்ணன் உண்மை தமிழன் எழுதவில்லை,  ஜூவி இன்னும் வெளியாகவில்லை) இந்த கொடுக்கு எல்லாம்  இப்ப கிளம்பி இருக்குதுன்னா அதுக்கு ஒரே காரணம் சாய்பாபா மேலே இருக்கும் வெறுப்பு அல்லது பகுத்தறிவு இதல்லாம் காரணமில்லை.  அண்ட் ஒன்லி கலைஞர் தான். உலகமே வந்து தரிசித்துவிட்டு போன ஒரு ஆன்மீகவாதி கலைஞரை வீடு தேடி வந்து சந்தித்ததை சகித்துக்கொள்ளா ஜென்மங்கள் இந்த குஞ்சுகள். வேறு எந்த சிறப்பான காரணங்களும் கிடையவே கிடையாது. ஆக இந்த மட்டிலாவது இந்த குச்சுகளை பகுத்தறிவு பேச வைத்த கலைஞருக்கே ஒட்டு மொத்த கிரடிட்டும் போய் சேருகின்றது.

இதே ஜெயாவை வந்து சாய்பாபாவை சந்தித்து இருந்தாலோ அல்லது ஜெயா போய் சாய்பாபாவை சந்தித்து ஆசி வாங்கி இருந்தாலோ இந்த பளீர் பக்குத்தறிவாளர் கூட்டம் இப்போது சாய்பஜன் பாடிக்கொண்டு இருந்திருக்கும். பாவம் சாய்பாபாவுக்கு வட போச்சே!

இதிலே சதீஷ்குமார் தம்பி தான் என்ன எழுதுகிறோம்னு தெரியாமலே எழுதும் ஜென்மம்.

\\திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் ,மஞ்சள் துண்டு பெரியார் தம்பி,அண்ணாவின் நாத்திக நயாகரா...கடவுள் மறுப்பு சிங்கம் கலைஞர் ,தன் மகன் ஸ்டாலினை புட்டர்பர்த்திக்கு அனுப்பி வைத்ததுதான் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது....\\

தம்பி! கிருஷ்ணா தண்ணீரை கொண்டு வர 200 கோடி வரை நன்கொடையாக கொடுத்த ஒருவரின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவதும் துணை முதல்வரை அனுப்புவதும் அதே தண்ணீரை குடித்து கொண்டிருக்கும் உனக்கு இத்தனை வலி குடுக்குதுன்னா ஓடிப்போய் அந்த தண்ணீரை உச்சா போயிட்டு வந்து உன் ஜெயா  மேல சத்தியம் பண்ணி இனி அந்த தண்ணீரை குடிக்க மாட்டேன் என சபதம்  போட்டிருந்தா நீ மனுஷன். சும்மா கலைஞர் ஸ்டாலின்னு பேசிகிட்டு இருப்பதை விட்டு விட்டு நீ குடிச்ச  குடிச்சுகிட்டு இருக்கும் தண்ணிக்காவது கொஞ்சம் நன்றி காட்டு.

\\சாய்பாபா எனும் ஒரு பிரபல மாயாஜால வித்தைகாரர் மரணம் என தொப்பி தொப்பி கலைஞரின் அனுதாபி பதிவு போட்டிருக்கிறார்...இந்த நாள் ஞாபகம் வெச்சுக்கோங்க நண்பரே....நான்வருங்காலத்தில் முக்கியமான நாளில், பரபரப்பு பதிவு போடுவேன்..அது இன்னும் தலைப்பு,உங்கள் தலைப்பை விட,கேவலமாக இருக்கும்.\\\

ஹி ஹி இது போல பல மிரட்டல் பார்த்தாச்சு. மிரட்டியவன் எல்லாருக்கும் கலைஞர் தான் சமாதி கட்டினார் என்பதை ஞாபகம் வச்சுக்கோ. முதல்ல உன் ஜாதகத்தை பார்த்துக்கோ. ஆயுள் ரேகை கெட்டியா இருக்குதான்னு பார்ட்துக்கோ. பின்ன நீ கலைஞர் மரணத்துக்கு அநாகரிக தலைப்பு வச்சு பதிவு போடுறியா இல்லாட்டி  வேண்டாம் விட்டுடு..

\\நாத்திகரான கலைஞர் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கினார்.கதவை சாத்திவிட்டு சாய்பாபாவின் காலில் சாஸ்டாங்கமாக விழுந்து கும்பிட்ய்டார்..என்பதெல்லாம் நமக்கு தெரிந்ததுதான்..\\ 

அடச்சே.... நீ கதவை மூடின இடத்திலே நடந்தது எல்லாம் சொல்லும் சோசியக்காரனா இருந்து தொலைச்சுட்டு போ. அதுக்காக நீ சொல்வது எல்லாம் உண்மை என நம்பும் அறிவிலிகள் தான் இங்க எல்லாரும் என நினைப்பது உன் முட்டாள் தனம் என்பதை உணர்.அப்படியே போயஸ் கார்டனில் மூடிய கதவுக்கு பின்னால நடக்கும் விஷயங்களை கொஞ்சம் வெத்தலைல மை போட்டு சொல்லேன்ப்பா சதீசு வெளக்கெண்ணெய்!

அடுத்து கோவிகண்ணன். பாவம் ஒரு 50 வயசு மனுசனா நடந்துக்குறாரா இந்த ஆளு.  சாய்பாபா பரட்டை தலையாம், குழந்தைகள் பார்த்தா பயந்துடுமாம். சரி இருந்து தொலைக்கட்டும். அதை யார் யார் பேசுவது என்று வரைமுறை இல்லியா? முதல்ல டாக்டர் ருத்ரன் கிட்டே இந்த ஆளை பிடிச்சுகிட்டு போய் காட்டனும். பகுத்தறிவு பேச ஆசை. ஆன்மீகம் பேச ஆசை. இலக்கியம் பேச ஆசை. சினிமா பேச ஆசை. சமூகம் பேச ஆசை. வலைப்பூ எழுத ஆசை, அதையும் நல்லா எழுத ஆசை... ஆனா சரியா வருவது என்னவோ கலைஞரை குடைவது மாத்திரமே. இவரு குத்துவதும் குடைவதும் கலைஞருக்கு ரீச் ஆகி அவரு இனிமே திருந்தி இதல்லாம் நடக்கும் காரியமா? போங்கய்யா போய் பேரன் பேத்தியை படிக்க வைய்யுங்க!

Wednesday, 20 April 2011

கொக்கரக்கோ.......... கொடுத்த காசுக்கு மேல கூவுறார்யா......................

கொக்கரக்கோ என்னும் பதிவர் கூவுவது திமுகவுக்கு எதிராக கொடுத்த காசுக்கு மேல இருக்கு. இன்றைக்கு எழுதின பதிவிலே ஒரு பின்னூட்டத்தில்  .........................\\\வாருங்கள் யோகன் பாரிஸ். இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட, பல்வேறு மதங்கள், இனங்கள், ஆயிரக்கணக்கான சாதிகள், கோடிக்கணக்கான பாமர மக்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தில் ஜனநாயக ரீதியில் அரசுகள் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது, இதைவிடச் சிறப்பாக நாம் எதையும் எதிர்பார்த்துவிட முடியாது.\\\\

\\\ஏதேனும் முன்னேற்றம் இந்த நிகழ்வுகளில் ஏற்பட வேண்டும் என்று நினைத்தால், படித்தவர்களும், அறிவுஜீவிகளும் முழு அளவில் கீழிறங்கி வாக்களிக்க முன் வர வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக சென்னையில் மற்ற பகுதிகளைவிட 12 சதவிகிதத்திற்கும் குறைவாக வாக்களிக்கப் பட்டுள்ளது. பிறகு எப்படி மாற்றம் வரும் என எதிர்பார்க்கின்றீர்கள்?\\\\
*************************************
அய்யா கொக்கரக்கோ!  நீங்க எதை வச்சு படித்தவர் பாமரர் என்ற அளவு கோலை கையில் எடுத்தீர்கள் என தெரியவில்லை. அதாவது நகரத்தில் இருப்பவன் படிச்சவன். கிராமத்தில் இருப்பவன்  தற்குறி. அப்படித்தானே? ஆக இன்றைக்கு பி எஸ் எல் வி விட்ட அண்ணாசாமி மயில்வாகணன் கிராம பள்ளி தானே? மன்னிக்கவும் அப்துல்கலாமை சொல்ல மாட்டேன். அதிஷ்டமும் வாப்பும் கூடிய மனிதர் என்கிற ரீதியில் அவரை வேண்டுமானால் முதலிடத்தில்சொல்லலாம்) மன்னிக்கவும் கிராமத்தில் இருப்பவன் எல்லாரும் தற்குறி இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் தெரியும். ஐன்ஸ்டீன் விதி அவனுக்கு தெரியாது. ஆனால்  அவனுக்கு உங்க ஆயுளை நிர்ணயிக்கும் விதி புரியும். நாம கடினமா உழைச்சா தான் அவன் சாப்பிட முடியும். அத்தனை ஏன்? நாம கடினமா உழைச்சா தான் அரசாங்கமே ஒரு ரூவாய்க்கு அரிசி போட முடியும் என அவனுக்கு தெரியும். உழைச்ச காசை கோவணத்தில் முடிந்து கொண்டு போக தெரியும். உங்களைப்போல  ஏடிஎம்ல காசை வச்சுகிட்டு ஐடி பசங்க மாதிரி ஆட்டோகாரனிடம் கொடுக்க தெரியாத அவன் முட்டா பயலா? அல்லது " if arunpandiyan is standing in my tohithi i will vote for him"   என அறைகுறை ஆங்கிலம் பேசும் சென்னைவாசிகள்  போல முட்டாளா அவன்?

உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா? கேரளாவில் 100 சதம் படித்தவர்களாம். ஆனால் தமிழ்நாட்டில் 75 சதம் தானாம். அடப்பாவிகளா? உங்களுக்கு படித்தவன் கணக்கை எப்படி எடுக்கிறான் என தெரியுமா? அதாவது இந்தியா முழுமைக்கும் பத்து வருட காலம் படித்தால் கண்டிப்பாக அவன் அவன்  தாய் மெழியாவது கற்று தொலைந்து இருப்பான் என நினைத்த இந்திய அரசாங்கம் அதையே பின்பற்றியது. இதை எல்லா மாநிலமும் சரியாக புரிந்து கொள்ளாமல் பத்தாவது படிச்சா தான் புத்திசாலி படிச்சவன் என்கிற ரீதியில் செயல்படுத்தியது.

அங்க தான் இருக்கான் மலையாளி. பத்தாவது வரை பாஸ் தான். நீ என்னா எழுதினாலும் பாஸ் தான். அதை தான் மயிராண்டி எம்ஜிஆரும் பின்னர் செஞ்சான். 3 ம்பு வரை பாஸ். பின்ன இப்ப இருக்கும் மயிராண்டியும் போட்டி போட வேண்டி 8ம்பு வரை பாஸ். அட பாவிங்களா? இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை 500 ஆச்சு. அதே சதவீதப்படி கேரளாவில் எத்தனை இருக்க வேண்டும்? 62 இருக்க வேண்டும் அல்லவா? எத்தனை இருக்கின்றது? மெடிக்கல் காலேஜ் எத்தனை இருக்கின்றது. கலை அறிவியல் கல்லூரி எத்தனை? நர்சிங் கல்லூரி மாத்திரம் அதிகம். கேட்டரிங் காலேஜ் மாத்திரம் அதிகம். இப்ப சொல்லுங்கடா? அவனுங்க டீ கடை வைக்க மாத்திரமே லாயக்கு. இல்லாட்டி.... போங்கய்யா ....   இப்ப சொல்லுங்க...

அங்க கேரளாவிலே தற்குறி எல்லாம் படிச்சவன் லிஸ்டுல வர்ரான். ஆனா இங்க படிச்சவன் எல்லாம் தற்குறியா இருக்கான். இங்க இணையத்துல இருக்கும் எத்தனை ஐடி மகான்கள் வந்து ஓட்டு போட்டான்னு சொல்லுங்க பார்ப்போம்? மச்சினிச்சி கல்யாணத்துக்கு லீவ் எடுத்துட்டு வரும் எத்தனை பேர்  லீவ் எடுத்துட்டு ஓட்டு போட  வர்ரானுங்க சொல்லுங்க? எவன் தற்குறி? ஆனா கிராமத்தான் அப்படி இல்லை. அறுவடையை விட்டுட்டு வந்து ஓட்டு போடுவான். ஆனா சென்னையிலே இருக்கும் எத்தனை பேரு "எங்க அபார்ட்மெண்டிலே காசு வரலை"ன்னு ஓட்டு போட வராம இருந்தானுங்கன்னு தினமலர், தினமணி படிங்க கொக்கரக்கோ சார் புரியும்.

அத்தனை ஏன் உண்மை தமிழனும், ஆர் கே சதீஷ்குமாரும், கே ஆர் பி செந்திலும் கூட படிச்சவங்க தானே?சென்னையிலே தான இருக்காங்க? உங்க கருத்தை தயவு செய்து மாத்திகுங்க  கொக்கரக்கோ!

Saturday, 9 April 2011

கே ஆர் பி செந்திலை விட பெரிய புலாசுலாக்கி ஒருத்தன் இருக்கான்.....


கே ஆர் பி செந்தில் தான் பெரிய புலாசுலாக்கின்னு நினைச்சேன். ஆத்தா! அதுக்கும் ஏகப்பட்ட போட்டி. இங்க பாருங்க ராஜா ( the king) ன்னு ஒருத்தன். புச்சா கெலம்பிட்டான். வக்காலி என்னமா கேள்வி கேட்கிறான் பாருங்க. ஆனா அது எல்லாத்துக்கும் அங்க நம்ம வடிவேலு அண்ணன் பேர்லயே ஒரு அனானி அண்ணன் பதில் சொல்லிட்டாரு. நான் அதை எதும் செய்யாம இங்க தருகின்றேன். 1.விஜயகாந்த் மண்டபத்தை இடித்ததால் தான் அரசியலுக்கு வந்தார் என கூறும் நீங்கள் , எந்த காரணத்துக்காக அரசியலுக்கு வந்திர்கள். அவருடன் ஏற்ப்பட்ட மோதல் தானே காரனம். மக்களுக்கு சேவை செய்யவா வந்திர்கள்.

பதில்:அய்யா என் ராசா.. மொத கேள்விலேயே நீ ரிஜெக்ட்டு.. என்ன இப்படி ஒன்னும் தெரியாத புள்ளைய இருகீயே ... நான் எங்கய்யா அரசியலுக்கு வந்தேன்.. வெறும் பிரச்சாரத்துக்கு தான்பா வந்தேன்.. நான் கட்சி ஆரம்பிச்சு.. இல்லை எதாச்சும் கட்சில உறுப்பினர் கார்டு வாங்கின அப்புறமா இந்த கேள்வியா கேளுப்பா .. உன் புள்ள குட்டி , பொண்டாட்டிய வீட்டுக்கு உள்ளே வெச்சு ஒருதன் அடிசான்காட்டிகு நீ என்ன பண்ணுவியோ அதே தானே நான் பண்ணேன்.. உன்னை மாதிரி மெத்த படிச்சவன் இல்லப்பா நானு , அதான் எனக்கு தெரிஞ்ச வழில நான் பழி வாங்க வந்துட்டேன்.. தப்பா சாமீமீமீமீ . நெக்ஸ்ட் குஸ்டின்...


2.உங்களுக்கு குடிப்பழக்கம் இல்லை என உங்கள் குழந்தை மீது சத்தியம் செய்ய தயாரா?
பதில்: விஜயகாந்த் ஆளுங்க அடிச்சு மண்டைல ரத்தம் வர வெச்ச என் பொண்ணு மேல சத்தியமா சொல்றேன் ராசா , நான் குடிப்பேன் நான் குடிப்பேன்.. ஆனா இவரு மாதிரி எப்பவும் இல்லப்பா.. அதுவும் ஒரு கட்சி ஆரம்பிச்சு, நான் தான் முதலமைசுருனு , நான் தான் ப்ளாக் எம்ஜிஆருநு சொல்லிடு இப்படி கட்சி மாநாடுல , பொது இடத்துல குடிச்சிட்டு ஒளரமாட்டேன்பா.. சாப்டமா , வீட்ல படுதமானு இருப்பேன் .
எம்ஜிஆரு நு சொல்லிக்கிட்டு இந்த ஆளு குடிக்கறது தான் வவுறு எரியுது.. அதன் பாடினேன்.. தைரியமாக சொல் நீ மனிதன் தான??? இல்லை நீ தான் ஒரு மிருகம்... அவ்வ் வ்


3.நடிகை தொப்புளில் பம்பரம் விட்டார் என கிண்டல் செய்கின்றிற்களே, நிங்கள் மனைவியை அடிப்பது போல, ஒரு பென்னை கெடுப்பது போல நடிக்கவில்லையா ?
பதில்:குட் கொஸ்டின் .. எதோ ஒரு புலோல சொல்லிட்டேன்.. இனிமே கேட்டா என் வாயிலையே நீ வந்து வெட்டுபா


4.சொந்த தொகுதில் நிற்காமல் ஒடி வேறு ஊரில் நிற்ப்பது ஏன்? என கேட்டிர்கள், 5 முறை சொந்த தொகுதியிலா உங்கள் தலைவர் போட்டியிட்டார்? ஸ்டாலின் ஏன் தொகுதி மாறினார் ?
பதில்:என்னய்யா கேள்வி இது.. முடியல.. யார் எங்க நின்ன எனக்கு என்ன.. எனக்கு இந்த கருப்பு காமெடி பீச பிச்சி போடணும்.. அவ்ளோ தான் விடு .. அப்புறம் ஸ்டாலின், கலைஞ்சர் எல்லாம் எதுக்கு தொகுதி மாருனங்கநு அவங்களே சொல்லிட்டாங்க. பேப்பர் படிச்சு தெரிஞ்சுகோ .. அம்மா வருஷத்துக்கு ஒரு இடத்துல நிக்குதேய்னு என்னை கீடுக்ட கஈட்டுட போற.. திருவாரூர் இதுவரைக்கு தனி தொகுதி.. அங்கே கலைஞ்சர் நிக்க அனுமதி இல்ல.. இப்பதான் அது பொது தொகுதி.. அயோ அயோ , அரசிய அடிப்படையே தெரியலையேபா உனக்கு


5.விஜய்காந்த் எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என வீரவசனம் பேசிவிட்டு இப்பொழுது ஒரு கட்சியிடம் போய் மண்டியிட்டது ஏன்?
பதில்:என்னனென்னமோ சொல்லிட்டு என்னென்னமோ செய்யுறவக எல்லாம் வுட்டுட்டு இந்த கைப்புள்ளைய மட்டும் கேளு ராசா.. மக்களோட கூட்டணி நு 41ku அம்மா காலடில விழுந்த யாரோ ஒருத்தரு . சரி சரி விடு விடு .. நான் அவர எதிர்த்து போட்டி போட்டா மட்டும் நீ மத்த 10 கேள்விய கேட்கமையா இருக்க போற ... ஸ் அப்பா . முடியல.. இந்த கேள்விக்கு நான் எத்தன வாட்டி தான் பதில் சொல்றது


6.நடிகர்கள் அரசியலுக்கு வரகூடாது என கூறிய ராமதாஸ் அவர்களின் கட்சிக்கு ஆதரவாக பேசுவது செய்யும் தொழிலுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
பதில்:எதிரிக்கி எதிரி நண்பன்பா..



7.விஜய்காந்தை எதிர்க்கும் அளவுக்கு ஜெயலலிதவை எதிர்பதிலையே ஏன்? பயமா?
பதில்:எனை விட நீங்க தான் பெரிய கமெடிய இருப்பீங்க போலே.. அதன் தெளிவா சொல்லிட்டேனே.. எனக்கு இந்த கருப்பு அசிங்கத்தை எதிர்க்கணும் ..அதான் வந்தேன்னு.. ஒரு வேலை நான் அந்தம்மா பத்தி சொல்லி இருந்த .. உன்னோட இந்த கேள்வி எப்படி இருக்கும் தெரியுமா.. ? விஜயகாந்த எதிர்க்க தானே வந்த. ஏன் எங்க அம்மாவை பத்தி பேசுற.. ??

8.கேப்டன் என்ற வார்தையை கிண்டல் செய்கின்றிர்கள், வைகை புயல் என உங்களை அழைகின்றார்கள், புயலால் சேதம் தான் தவிர நன்மை ஏதும் இல்லையே
பத். ஆமாம் நான் வைகை புயல் நு போஸ்டர் போட்டு , பாணர் கட்டி, டி வி ஆரம்பிக்கலையே.. அதான் மேட்டரு. அப்படி என்ன தப்ப சொல்லிட்டேன்.. தோனி தான் கேப்டன் நு சொன்னேன்.. அது கார்ரெட் தானே? தண்ணில மேதக்கரத ஓட்டறவன் தான் கேப்டன் நு சொன்னேன் , அது உண்மை தானே?


9.கருப்பு நாகேஷ் என பட்டம் தந்ததும் இளித்துகொண்டு இருந்திற்களே, நாகேஷ்ல் ஏது கருப்பு, சிவப்பு என கேட்காதது ஏன்?
10.அவர் நடித்து சம்பாதித்ததை கட்சிக்காக செலவு செய்தார், உங்கள் தலைவர் சொந்த காசில் என செய்தார்.
கொஸ்டின் 9 - 10 - ஒன்னும் தேறாத புள்ளையா கேள்வி கேட்டிருகீய. ரிஜெக்டெட்

11.அரசியலுக்கு வரும் முன்பு கூட விஜய்காந்த் அலுவலகம் சென்றால் இலவசமாக சாப்பிடலாம், நிங்கள் நன்றாக சம்பாதிக்கும் பொழுது யாருக்கு உதவி செய்திற்கள் ? பேராசையில் நிலங்களாக வாங்கி போட்டிற்கள்.(அதையும் ஒருத்தன் ஏமாத்திடான்)

பதில்:. கலைஞ்சர் இலவசமா தந்தா பத்திட்டு வருது.. இப்போ இலவச சோறுக்கு இப்படி பேசுறீங்க.. ஐய்ய்ய்யி

ஓகே விடு ஜூட் , இப்போ உங்களுக்கு கேள்வி

1. என் வீட்டை ஆள் விட்டு அடிச்சான், என் பொண்ணு மண்டைய ஓடைசான்.. அவன எதிர்த்து நான் வந்தேன்.. பாவம் நீங்க ஏன் இப்படி ராப்பகலா தூக்கம் இல்லாம பெனாதுறீங்க .. ??

2.இந்த காமெடி பீச எல்லாம் ஒரு ஆளா நெனைச்சு இம்புட்டு கேள்வி கேட்கறீங்களே.. உங்களுக்கு ஆணி புடுங்கற வேலையே இல்லையா?? இதான் வேலையா?

3. உங்க அம்மா / கேப்டன் பாசத்துல என்ன இவ்ளோ. கேள்வி கேட்டீங்களே .. அந்த கருப்பு காமெடி பீசுக்கு ஒரு 2 கேள்வி கேட்கமுடியுமா? நான் எடுத்து கொடுக்கவா?

4. சரி கருப்ப்பு விடுங்க.. இப்போ ஒருத்தன் வந்திருக்கான் . சிங்கமுத்து .. அவன் என்ன பொது நலத்துக்க வந்தான் ? என்கிட்டே கேட்டா மொத கேள்விய அவன் கிட்ட கேளுங்க.
ஓகே ரைட்..

லாஸ்டா ஒரு மேட்டர்.. நாக்க முக்க கட்சி ஜெயக்குதோ தொக்குதோ.. ஆனா எனக்கு 2 சந்தோசம் ..

1. நான் வந்ததால தானே அந்த அம்மா சிங்கமுத்துவ எல்லாம் ஒரு மனுஷன மதிச்சு சரிசமமா ஒக்கார வெச்சு பேசுச்சு .. ? மனசாட்சி தொட்டு சொல்லுங்க.. இல்லன அது நடந்திருக்குமா ?

அப்புறம் நீங்க.. இவ்ளோ மெனக்கெட்டு இப்படி எல்லாம் மண்ட கொடஞ்சு கேள்வி கேட்குறீங்களே ராசா.. வேற யாருக்காச்சும் கேட்டீங்கள.. அப்போ என்ன தெரியுது??? ஏன் பிரசாரம் நல்ல ரீச் ஆகுதுன்னு ..சில பேரு வவுறு எரியுதுன்னு தெரியுது..

சரி ராஜா , அப்ப்பீத்த்தூ... நான் எலேச்டின் முடிச்சு அந்த கருப்பு ஆள் ஜெயச்சா , தோத்தா என்னனு பொழைப்ப பார்க்க போய்டுவேன்.. நீ கூட போய்
வேற வேலை பாரு, புள்ள குட்டிய படிக்க வெயப்பா .. வரட்டா

அப்புறம் வரேன்.. நீ சிங்கமுதுக்கு , கருப்புக்கு எதாச்சும் கேள்வி கேட்டிருகீயனு பார்க்க.. நீ கேட்க மாட்டா .. எல்லாம் அம்மா பாச்ம்.. குட் குட் விடுறா விடுறா சூனா பானா..++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ அடேய் புலாசுலாக்கிங்களா, நாங்க ஜெயிச்சாச்சு, இன்னும் எங்க திமுக பதிவர்கள் திரும்பி வரனும் அதை தான் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன்.... களப்பணியில் இருக்கும் எங்கள் கழக கண்மணிகள் வரட்டும். அது வரை கட் பேஸ்ட் பண்ணுங்க!


Thursday, 7 April 2011

"பய"டேட்டா செந்தில் என்னும் கிண்டாமணி...


..
நாங்கள்  வெற்றிக்கோட்டை தொட்டாகிவிட்டது. இன்னும் வெற்றியை அறிவிக்காமை ஒன்று தான் மீதி. எங்கள் உடன்பிறப்புகள் களப்பணியில் இருக்கின்றனர். இந்த வலையுலக கழக கண்மணிகளும் களப்பணியில் நின்று போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றனர்.  என்னைப்போல சிலர் மட்டுமே இணைய அட்டைகத்திகளை வெட்டி வீழ்த்தும் பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர். அதிலும் இப்போது காங்கிரசை வேரறுக்க கிளம்பி இருக்கும் சில அரைபிளேடுகள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் அந்த வேலையை செய்து கொண்டு இருக்கும் போதே "திமுகவை ஆதரிக்கும் பதிவுலக குஞ்சாமணிகள்" என்கிற தலைப்பில் போகிற போக்கில் எங்கள் மீதும் சேறு பூசிய பின்னர் இந்த தலைப்பிட்டு உங்களுக்கு பதில் சொல்லவில்லை எனில் இந்த தமிழகம் எங்களை மன்னிக்காது நண்பரே! இருங்க சிறிது விளையாடிவிட்டு வருகின்றேன்.

****************************************************************
\\சமீப காலமாக தி.மு.க குஞ்சாமணிகள் பஸ்சிலும்(GOOGLE BUZZ) பதிவுலகிலும்  ஒரே தி.மு.க  ஆதரவு கோஷங்களைப் போடுகின்றன. அடிமைகளே!\\

யார் அடிமை? எது அடிமை? விட்டுக்கொடுத்து தட்டிப்பறிப்பது பற்றி உனக்கு தெரியுமா செந்தில்? நீ வெறும் உணர்சிக்கு அடிமையான கூட்டத்தை சேர்ந்த சாதாரண நபர். இலங்கை பிரச்சனையின் காரணமாக நீ காங்கிரசை அழிக்க நினைப்பது பற்றி திமுகவினருக்கு கவலை இல்லவே இல்லை. ஆனால் இந்தியா முழுக்க இருக்கும் காங்கிரசை 50 பேர் கொண்ட கூட்டம் "நான் கிழிச்சிடுவேன்" என நா கூசாமல் சொல்லி கொண்டு பிதற்றுவதும் அதை நாங்களும் கேட்டு தலையாட்ட வேண்டும் என எதிர்பார்ப்பதும் உனக்கு புத்திசாலித்தனாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு தமிழ்நாட்டின் வளர்சி மட்டுமே கண்ணுக்கு தெரிகின்றது. இந்தியாவை ஆளும் ஒரு கட்சி, அத்தோடு இனக்கமாக இருந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் அவ்வளவு ஏன் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தை விட அதிக நிதி பெற்று வளம் கொழிக்க செய்யும் நாங்கள் அடிமைகளா? அல்லது விட்டுக்கொடுத்து தட்டிப்பறிக்கும் சூத்திரதாரிகளா?
 \\\ உங்கள் பக்தி என்னை மெச்சவைக்கிறது. ஆனால் நீங்கள் அத்துடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை இல்லாதொழிக்க போராடிக்கொண்டு இருக்கும் \\\ கிழிச்சீங்க. முதல்ல  வலையிலே கத்தாம இங்க வந்து களத்திலே இறங்குங்க\\\
\\இப்புடி எழுதுனா ஒடனே அடடா! ரெட்டை இலைக்கு ஓட்டு கேக்குறானுகன்னு கூவுறது. கொழந்தைகளா உங்களுக்கு மனசாட்சி அப்படின்னு ஒன்னு இருந்தாக்க, கடந்த ஐந்தாண்டில் தாத்தாவும், அவரின் குடும்பமும் அடித்த கூத்துகளை எப்படி இவ்வளவு சொலபமா பாராட்ட முடியுது. கேட்டா ஒரு ரூவாய்க்கு அரிசி போட்டோம், கோமணத்தோடு இருந்தவனுக்கு வேட்டி கொடுத்தோன்னு கூவுறீங்க. மொத்த தமிழ்நாடும் ஒரு லட்சம் கோடிக்கும் மேலே ஒலக வங்கில கடன் வச்சிருக்கு, இதெ தாத்தாதான் அடைக்கப் போறாரா???\\ 

அடங்கொய்யால , கடனைப்பத்தி நீ பேசக்கூடாது. பெரிய பொருளாதார மேதை இவரு. இவரு கடனை பத்தி எல்லாம் பேசுறாரு. இரு விளக்கம் தர்ரேன்.செந்தில் கொஞ்சம் அமைதியா படி. நீ உன் மனசாட்சிப்படி சரின்னு பட்டுச்சுன்னா நீ உன் பதிவில் கூட பதில் சொல்ல வேண்டாம். உனக்கு மட்டுமே தெரிந்தால் கூட போதும். சும்மா சிவப்பு துண்டு பலே பாண்டியன் மாதிரி கத்தி கிட்டு இருக்காம உன்னை நம்பி உன் பதிவை படிக்கும் சிலரை, நீ உண்மையை தான் சொல்வாய் என நம்பும் அந்த நபர்களுக்காக இனிமேலாவது பொய் சொல்லி ஏமாற்றாதே தம்பி.கொஞ்சம் போர் அடிக்கும். ஆனாலும் படி.

இந்தக் கேள்விக்கு பலமுறை தமிழக அரசின் சார்பில் விளக்கம் கூறப்பட்டு விட்டது. இருந்தாலும் வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் கூறுவதற்கு இல்லாததால் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். இலவசத் திட்டங்களை வழங்குவதற்காக தமிழக அரசு கடன்களை வாங்கவில்லை.
அ.தி.மு.க. 2001 2002 ம் ஆண்டு முதல், 2005 2006 ம் ஆண்டு வரை ஆட்சியிலே இருந்த போது வாங்கிய கடன் தொகை 28,772 கோடி ரூபாய். இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவு மட்டும் 15,614 கோடி ரூபாய். மூலதனச் செலவு என்றால், சாலைகள், பாலங்கள், குடிநீர் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக செய்யப்படும் செலவுகளாகும்.
2006 2007 ஆண்டு முதல் 2010 2011 (திருத்த மதிப்பீடு) ஆகிய ஐந்தாண்டுகளில் தி.மு.கழகம் ஆட்சியிலே வாங்கிய கடன் தொகை 44,084 கோடி ரூபாய். ஆனால் இந்த ஐந்தாண்டுகளில் இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவாகச் செலவிட்டது 44,667 கோடி ரூபாய். இதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கடன்களை வாங்கி இலவசத் திட்டங்களுக்காகச் செலவிடவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இதைத்தான் இடைக்கால நிதி நிலை அறிக்கை பக்கம் 55 ல், 2006 2007 முதல் 2010 2011 வரையான ஐந்தாண்டுகளில் கடன் பொறுப்புகளின் உயர்வு ரூபாய் 44,084 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே கால அளவில் மொத்த மூலதனச் செலவினங்கள் ரூபாய் 44,667 கோடியாக இருந்துள்ளது. திரட்டப்பட்ட கடன் பொறுப்புகள் அனைத்தும் பயன் அளிக்கக் கூடிய நோக்கங்களுக்காகச் செலவிடப்பட்டதை இது காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மத்திய நிதிக் குழுவும், மத்திய அரசும் ஒவ்வொரு மாநிலமும், அதன் மொத்த உற்பத்தியில் 25 சதவிகிதம் வரை கடன் பொறுப்புகளை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதித்துள்ளது. மேலும் 2005 2006 ஆண்டின் இறுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு 2010 2011 ல் தி.மு.கழக ஆட்சியின் இறுதியில் 19.58 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தப் புள்ளி விவரங்களிலிருந்து தமிழகத்தின் கடன் பொறுப்பு அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உள்ளதைத் தெரிந்து கொள்ளலாம்.

. எதற்குக் கடன் என்பதையும் சொல்ல வேண்டுமென்றால், உலக வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூபாய் 2442 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அபிவிருத்தி திட்டம், ரூபாய் 1224 கோடி மதிப்பீட்டில் சுகாதாரத் திட்டம் போன்ற மூலதனப் பணிகளை மேற்கொண் டுள்ளது. அதே போல் ஜப்பான் நாட்டு நிதியுதவி பெற்று ரூபாய் 1928 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், நபார்டு வங்கியின் மூலம் ஊரக சாலைகள், நீர்ப்பாசன நிலைகள் அபிவிருத்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்ற பணிகளுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் ரூபாய் 4113 கோடியும் கடன் பெற்று மூலதனப் பணிகளைத்தான் இவ்வரசு மேற்கொண்டுள்ளது. எனவே பொறுப்போடுதான் கடனைப் பெற்று இந்த அரசு மூலதனப் பணிகளுக்காக செலவு செய்து வருகிறது.

 ஒரு மாநிலம் செலுத்துகின்ற கடன் மீதான வட்டித்தொகை, அதன் மொத்த வருவாயில் 15 சதவீதத்திற்குக் குறைவாகவே இருக்க வேண்டும். கடந்த 2005 2006 ம் ஆண்டில், அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில் மொத்த வரி வருவாயில் செலுத்தப்பட்ட வட்டியின் சதவீதம் 13.42 ஆகும். ஆனால் 2010 2011 ம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியிலே மொத்த வரி வருவாயில் செலுத்தப்படும் வட்டியின் சதவீதம் 11.15 ஆக குறைந்துள்ளது. இதிலிருந்து தமிழ் நாட்டினுடைய நிதி நிலைமை 2005 2006 ம் ஆண்டினைக் காட்டிலும் தற்போது திருப்திகரமாகவே உள்ளது என்பதை  பய'டேட்டா செந்தில் புரிந்து கொள்ளலாம்.
கடன் பொறுப்புகள் அதிகரித்துள்ள போதிலும், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும் நிலையிலேயே தமிழ்நாடு உள்ளது.இதற்காக கலைஞர் தாத்தாவோ அல்லது செந்திலின் தாத்தாவோ கடனை அடைக்க வேண்டாம்.

அடுத்து உபரி என்பது வருவாய் தனி. சிறப்பாக செயல்படுகின்ற மாநில அரசு வருவாய் உபரி நிலையை எட்ட வேண்டும். அதாவது வருகின்ற வரி வருவாயில், வருவாய் செலவினம் போக உபரி நிதியை மாநில அரசுகள் திரட்ட வேண்டும். அதற்கு மேல் செய்யப்படுகின்ற மூலதனச் செலவுகளுக்கு, மாநில அரசுகள் கடன் பெறுவது அவசியம் ஆகிறது. இது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொள்கையாகும். இவ்வாறு கடன் பெறுவது வளர்ச்சித் திட்டங்களுக்காக இருக்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட அளவுக்குள் நிதிப் பற்றாக்குறை இருப்பதில் தவறில்லை.
தி.மு.கழக அரசு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகின்ற அதே நேரத்தில், சமூகப் பொருளாதார கட்டமைப்புகளையும், திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறது. கல்வி, சுகாதாரம் ஆகிய சமூகக் கட்டமைப்புகளை உருவாக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் சமூகக் குறியீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் 2005 2006 ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் 3.81 சதவீதமாக இருந்தது, 2009 2010 ல் கழக ஆட்சியில் 1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இடைநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அ.தி.மு.க. ஆட்சியில் 7.58 சதவீதமாக இருந்தது, 2009 2010 ல் 1.79 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2005 2006 ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 802. 2010 2011 ல் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 9 ஆயிரத்து 421. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் மகப்பேறு கடந்த ஐந்தாண்டுகளில் 277 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே கால கட்டத்தில் குழந்தை பிறப்பு விகிதம் 1000 க்கு 37 லிருந்து 31 ஆகவும் பேறு காலத்தில் பெண்கள் இறப்பு விகிதம் லட்சத்திற்கு 111 லிருந்து 79 ஆகவும் குறைந்துள்ளது.
569 புதிய பள்ளிகள் 168 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 12 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 12 புதிய பொறியியல் கல்லூரிகள் 6 புதிய மருத்துவக்கல்லுநுரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதிதாக 5 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 5 மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க 2,568 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரக் கட்டமைப்புகளான சாலைகள், பாசனம், போக்குவரத்து, குடிநீர் போன்ற எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் சாலை மற்றும் பாலங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 14 ஆயிரத்து 748 கோடி ரூபாய். பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக செலவிடப்பட்ட தொகை 2 ஆயிரத்து 822 கோடி ரூபாய். தென்னகநதிகளை இணைக்கும் திட்டத்தின்கீழ் கட்டளைக் கதவணை, தாமிரபரணி நம்பியாறு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து கட்டமைப்புகளுக்காக 1 ஆயிரத்து 440 கோடி ரூபாய் இந்த ஐந்தாண்டுகளில் செலவிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் ரயில் போக்குவரத்துத் திட்டம் இந்த அரசு தொடங்கியுள்ள ஒரு மகத்தான திட்டம். குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக கடந்த ஐந்தாண்டுகளில் செலவிடப்பட்ட தொகை 3 ஆயிரத்து 320 கோடி ரூபாயாகும். இந்த அரசால் 616 கோடியில் முடிக்கப்பட்ட மிகப் பெரிய கூட்டுக் குடிநீர் திட்டமான இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 1929 கோடி ரூபாய் செலவில் வேகமாக நடைபெற்று வருகிறது. வளர்ச்சித் திட்டங்கள் எதையும் இந்த அரசு புறக்கணிக்கவில்லை.

அடுத்து செந்திலு சமூக திட்டங்கள் பத்தி பாரு.  2006 2007 முதல் 2010 2011 வரை முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக தி.மு.கழக அரசில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை 61 ஆயிரத்து 727 கோடி ரூபாய். இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை 20 ஆயிரத்து 304 கோடி ரூபாய்.

செந்திலு, 2011 2012 ம் ஆண்டிற்கு இலவச காங்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்திற்காக 3 ஆயிரத்து 497 கோடி ரூபாயும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் போன்றவற்றுக்காக 1 ஆயிரத்து 106 கோடி ரூபாயும் கல்வி உதவித் தொகை, இலவச சைக்கிள், இலவசபுத்தகம் போன்ற திட்டங்களுக்காக 6 ஆயிரத்து 73 கோடி ரூபாயும் முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்திற்காக 1 ஆயிரத்து 471 கோடி ரூபாயும் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித் திட்டத்திற்காக 247 கோடி ரூபாயும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி போன்ற பல்வேறு திட்டங்களுக்கும், சத்துணவு போன்ற நலத் திட்டங்களுக்கும் சேர்த்து 495 கோடி ரூபாயும், வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் போன்ற வைகளுக்காக 860 கோடி ரூபாயும் என்ற வகையில் 20 ஆயிரத்து 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செந்திலு, இதான் தமிழ்நாட்டின் கடன் நிலவரம். ஆனா கேரளாவிலே அதாவது கேரளாவிலே  சிவப்பு சட்டைக்காரன் ஆட்சியிலே ஒரே கலவரம். அதையும் பார் இங்கே.
அங்கே உள்நாட்டுக் கடன், சிறு சேமிப்புகள் மற்றும் வருங்கால வைப்புநிதி மற்றும் மத்திய அரசிடமிருந்து கடன்கள் மற்றும் முன்பணங்கள் உள்ளடக்கிய கேரளாவின் ஒட்டுமொத்தக் கடன், 1999 2000 ம் ஆண்டு ரூ.20,176 கோடியிலிருந்து 2004 05 ம் ஆண்டில் ரூ.41,878 கோடியாகவும், 2009 2010 ம் ஆண்டு ரூ.70,969 கோடியாகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதுவும் ஏறத்தாழ 3.4 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு மாநிலத்தில் 2010 2011 ம் ஆண்டுக்கான பட்ஜெட் உத்தேச மதிப்பீடுகளில் கடன் தொகை கவலை அளிக்கும் அளவுக்கு ரூ.78,329 கோடி என்று காட்டப்பட்டுள்ளது.


சில ஆண்டுகளாக கேரளாவின் தனிநபர் கடனளவு மிகப் பெரும்பாலான இதர மாநிலங்களைவிட மிக அதிகமாகவும் தேசிய சராசரிக்கு மேலும் உள்ளது. 2008 ம் ஆண்டில் கேரளாவின் தனிநபர் கடனளவு ரூ.16,074. அதே ஆண்டில் ஆந்திராவில் ரூ.9,991, தமிழ்நாட்டில் ரூ.9,692, கர்நாடகாவில் ரூ.8,901, அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.10,018 ஆகவும் தனிநபர் கடனளவு இருந்தது.

இப்பவாச்சும் என்ன நடக்குது நாட்டிலேன்னு புரிஞ்சுக்க செந்திலு. உனக்கு பதில் சொல்லி சொல்லியே என் விரல் எல்லாம் வலிக்குது. அதனால மீதி கச்சேரியை அடுத்த பாகத்திலே வச்சுக்கறேன். நீ பேயாம பயடேட்டா போட்டு பிழைப்பை ஓட்டப்பாரு தம்பி. இனி இது போல தலைப்பு வச்சு திமுக பதிவர்களை இழுக்கும் முன்னே பேசும் விஷயங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பேசவும். இல்லாவிட்டால் நீயும் எங்கள் அண்ணன் உண்மைதமிழன், சதீசுகொமாரு மாதிரி காமடிபீஸாக ஆகும் அபாயம் காத்திருக்கு செந்திலு. உனக்கு இரண்டாம் பாகத்தில் மீதிக்கான பதிலை சொல்கிறேன். உன் பதிவில் பின்னூட்டம் இட்ட விஜேஆர், திருச்சி ராஜேஷ் ஆகியோர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.  .....................தொடரும்..............

Monday, 4 April 2011

காமடிப்புயல் விஜயகாந்து! சொல்வது விருச்சிககாந்து!!!


எனக்கு ஒரு விஷயம் மாத்திரம் நன்றாகவே தெரியும். அதாவது  இந்த வார ஜூனியர் விகடனில் விஜயகாந்து அவர் தனது வேட்பாளரை அடிக்கும் காட்சி பற்றி என் கோடம்பாக்கம் சகாக்கள் கூட " விஜய்காந்து கொசு அடித்தார் அதை நயவஞ்சக டிவிக்கள் மாற்றி போட்டது"  என சொல்லும் என சொன்னேன். ஆனால் அவர்கள் என்னை விட பல மடங்கு புத்திசாலிகள். அங்கே ஏதோ மைக் சரியில்லையாம், அதை சரி செய்தா ராம். போகட்டும். அது மைக்காகவே இருந்தாலும் கூட இப்படியா சரி செய்வாரு?

அது நமது கேள்வி அல்ல. ஆனால் ஜூனியர் விகடன் சேலம் மாநாட்டில் விஜயகாந்து குடித்து விட்டு உளறியதை சொல்லவே இல்லை. ரிப்போர்டர் சொல்லவே இல்லை. ஆனால் நக்கீரன் கூட இலை மறைவு காய் மறைவாக சொன்னது. ஏனனில் ஒரு கட்சி தலைவரை இப்படி எல்லாம் திடீரென சொல்லலாமா என்கிற பயம். ஆனால் அதை முதலில் உடைத்தது வடிவேல் என்கிற எங்கள் கதாநாயகன். இன்று காமடியனாகிப்போன விஜயகாந்தின் முகத்திரையை கிழித்த கதாநாயகன். இன்று சொல்கிறான் ( இனி குடிகாரனுக்கு ர் விகுதி அதிகம்) "அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஜெயிலில் இருக்கின்றது.. அய்யோ நான் உளறுகின்றேனா?  சாரி ராஜா ஜெயிலில் இருக்காரு.. அட போங்கப்பா" இது விஜயகாந்த்.  ஆக விஜயகாந்தின் நடுநிலை ஓட்டு என்பது சைபருக்கு வந்தாகிவிட்டது.

ஆக செத்த பாம்பை அடிப்பது திமுக வீரனுக்கு அழகில்லை. ஆனால் வழக்கம் போல உயிர் பாம்பு இரண்டு ஓடுது. அதாவது  ஆர் கே சதீஷ் குமார் பாம்பு, அது இன்னும் உயிரோடு இருக்கின்றது.அடுத்து உண்மை தமிழன். அதாவது என் அண்ணன் உண்மை தமிழன் பற்றி இப்போது எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். அவருக்கு யார் நல்லா இருந்தாலும் பிடிக்காது. இந்தியா ஜெயித்தாலும் பிடிக்காது. காரணம் அவர் வாழ்கையில் தோல்வி அடைந்தவர். தவிர அவர் மன உளைச்சல் அப்படி. யாராவது நன்றாக இருந்தால் குமுறி குமுறி அழுவார். அவரை விட்டு விடலாம்.

ஆனால் சதீசு குமாரு, சன் டிவில விஜய்காந்து குடித்து விட்டு உளறியதை தப்பா சொல்லிட்டாங்களம், அதுக்காக ஒரே அழுகை. அடப்பாவி! அதான் அவனே ஒத்து கிட்டானே, அவன் பொண்டாட்டி கட்டின பாவத்துகாக அதை ஒத்துக்கலை, ஜூவியின் பாலுவின் பையன் கொஞ்சம் ஷோக்காலி பேர்வழி, விஜய்காந்து கிட்டே கொஞ்சம் அப்படி இப்படி தான் இருப்பான், அதிலும் சினிமா பேர்வழின்னா அதிகமா கூட வழிவான். உனக்கு என்னடா ஆச்சு சதீசு?

நான் இதனால என்ன சொல்ல வர்ரேன்னா, திமுக பதிவர்கள், இனி விஜயகாந்தை பத்தி ரொம்ப அலட்டிக்க வேண்டாம். ஏன்னா லாலு பிரசாத் மேடைக்கு பின்னால வழிச்சுகிட்டு உச்சா போவதை முதலில் விஷயமா பேசினாங்க மக்கள், பின்னர், அவரு இப்படித்தான்னு சொல்லிட்டாங்க. அது போல மூப்பனார் பான்பராக் போடுவதை கூட சொல்லி பார்த்தாங்க. பின்னர் அவரு இப்படித்தான்னு விட்டுட்டாங்க. அது போல இவன் குடிப்பதை "இவன் இப்படித்தான்"ன்னு விட்டுடும் அளவுக்கு செஞ்சுடாதீங்க.

அப்படியே விடுங்க. மக்கள் பார்த்து கொண்டு இருக்காங்க. இத்தோடு விட்டால்  மீதியை அவங்க பார்த்துப்பாங்க. இனி தைரியமா ஜெ அம்மையார்  பற்றி பேசலாம். நான் அதிக பட்ச ஷூட்டிங் இருந்ததால் இங்கே வர முடியவில்லை. இனி வருவேன்.. மீண்டும் பார்ப்போம்..