Total Pageviews

Tuesday 10 May 2011

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்...குழலி அண்ணன் ஸ்பெஷல் பதிவு!


நான் ஒன்றும் திமுகவை காக்க வந்த தேவதூதன் இல்லை. நான் வந்து தான் திமுக காப்பாற்றப்பட வேண்டிய நிலையிலும் திமுக இல்லை. ஆனாலும் திமுகவை சாடுபவர்களை நான் சாடுகிறேன். கேட்டால் தனிமனித தாக்குதல் என்கிறீர்கள். நான் கூகிள் பஸ்ஸில் இதுவரை வெளியிட்டது ஒரே ஒரு பஸ் மட்டுமே. ஆனால் பல பஸ்கள் பார்க்கும் படிக்கும் சந்தர்ப்பம் வாய்த்து வருகின்றது. மூன்று நாட்களுக்கு முன்னர் அண்ணன் குழலி என்கிற தீவிர திமுக எதிர்ப்பாளர் ஒரு buzz ல் "விருச்சிககாந்த்" என்னும் அனானிக்கு யாரும் ஆதரவு அளிக்க வேண்டாம்" என்கிற ரீதியில் எழுத அதில் மேலும் எனக்கு என்னவோ அகில உலகில் இருக்கும் அத்தனை திமுக பதிவர்களும் ஆதரவு கரம் நீட்டுவதாகவும் அதற்காக அவர்களுக்கும் சேர்த்து ஒரு ஒப்பாரி வைத்திருந்தார். நான் அங்கு சென்று என் தரப்பு வாதங்களை ஒரு ஆறு பின்னூட்டமாக போட்டிருந்தேன். ஆனால் அதில் மூன்று மட்டும் பிரசுரம் ஆனது. மீதி பின்னூட்டங்கள் அண்ணன் குழலி அவர்களால் நீக்கப்பட்டு விட்டது.

எனக்கு மனதில் பட்டதை எழுதுகின்றேன். எனக்கு எந்த திமுக பதிவர்களும் ஆதரவு கொடுப்பது இல்லை. அப்படி கொடுக்கும் பட்சத்தில் வாசகர் பரிந்துரையில் தமிழ்மணத்தில் நிரந்தரமாக இருந்து கொண்டு இருப்பேனே. அதிலிருந்தே தெரியவில்லையா? அது போகட்டும். உடனே அண்ணன் உண்மைதமிழன் அந்த பஸ்ஸில் வந்து "நான் திருவாளர் விருச்சிககாந்தை என் பஸ்ஸில் தடை செய்து விட்டேன். அவர் எழுதுவது என் பார்வைக்கு வராது. தொடர்சியாக எல்லோரும் அதே போல செய்தால் அவர் எழுதாமல் ரஜினி போல இமயமலைக்கு போய்விடுவார்" என சொல்ல உடனே குழலி, அத்திவெட்டி ஜோதிபாரதி,  பின்னர் அரசியல் பதிவுகள் எழுதும் மா.சிவகுமார் ஆகியோர்  என்னை பஸ்ஸில் இருந்து தடை செய்வதாக அறிவிப்பு செய்து விட்டனர். எனக்கு சர்வமும் அடங்கி போய்விட்டது. இனி நான் பிழைப்புக்கு என்ன செய்வேன். அய்யகோ... இந்த வலைப்பூவை வைத்து தான் நான் மூன்று வேளை உணவும், இருக்க இருப்பிடமும், கட்டிக்கொள்ள வேட்டியும் பெற்று வருகின்றேன். இதை கேட்க நாதி இல்லையா இந்த வலையுலகில்.

என்னை அவர்கள் தடை செய்தமைக்கு கூறிய காரணங்கள் மிகவும் அருமை, அதாவது நான் தனிமனித தாக்குதல் நடத்துகின்றேனாம். சரி இருக்கட்டும். நான் ஆர் கே சதீஷ்குமார் என்னும் பதிவரை கூட அரசியல் கருத்துகளோடு மட்டுமே தம்பி என்றே விளித்து கட்டுரை எழுத தொடங்கினேன். ஆனால் அவர் என் குடும்பத்தை விமர்சித்து எனக்கு மெயில் அனுப்பினார். பின்னர் இருவரும் தனி மெயிலில் திட்டிக்கொண்ட சம்பவம் நடந்தது. பின்னர் தான் நான் தம்பி என அழைப்பதை விடுத்தேன். அதே போல உண்மை தமிழனை அண்ணன் என்றே அழைத்து அவர் கருத்துகளை எதிர்த்தேன். ஆனால் நான் எப்போதும் எந்த பதிவரின் குடும்பத்தை இழுத்தது கண்டிப்பாக  கிடையவே கிடையாது. ஆனால் அதே நேரம் அந்த பதிவர்கள் தனிமனித தாக்குதல் செய்யாதவர்கள் மிகவும் நாகரீகமாக எழுதுபவர்கள் என உங்கள் நெஞ்சில் வை வைத்து சொல்லுங்கள் பார்ப்போம்.

இதே உண்மைதமிழன் அண்ணன் அவர்கள் என் கட்சி தலைவர் கலைஞரை சாக வேண்டும் என சொன்ன போது அது தனிமனித தாக்குதல் இல்லையா? இதே குழலி அண்ணன் கலைஞரை பேசாத பேச்சா? இதோ பாருங்கள்
. \\\\Purushothaman Ponusamy  •  Nov 16, 2010  •  Buzz  •  Public
17,60,00,00,00,000 
ரூபாய் மிச்சமாயிருக்கும். புரிகிறதா.. ஆம் ஆண்டிமுத்து, ஆ.ராசாவின் தந்தை. 1962ம் ஆண்டு, அவர் இரவுக் காட்சிக்கு போயிருந்தால், இந்தியா இந்த வரலாறு காணாத ஊழலை சந்தித்திருக்காது. 


--- சவுக்கு பாணி சரவெடி, உடன்பிறப்புகள் படித்தால் ஹை பிபி உறுதி :-)
ஆண்டிமுத்து அன்று இரவுக் காட்சிக்கு போயிருந்தால்….
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

இப்படி ஒரு பஸ். அதை லைக் செய்திருப்பது யார் யார்? இதோ என்னை பஸ்ஸில் தடை செய்ய சொன்ன அண்ணன் உண்மைதமிழன், அதை ஒப்புக்கொண்டு தடை செய்த அத்திவெட்டிஜோதிபாரதி, ...  என்ன ஒரு வக்கிரம் பாருங்கள். ஆண்டிமுத்து அவர்கள் 1962 ல் இரவு காட்சிக்கு போயிருந்தால் என சொல்வது தனிமனித தாக்குதல் இல்லையா? அதற்கும் மேலாக ஒரு படி மேலாக " முத்துவேலர் இரவு காட்சிக்கு போயிருந்தால்" என அடுத்தது சொல்கிறார் குழலி அண்ணன். பின்னர் "அந்த கொடுப்பினை தமிழகத்துக்கு இல்லாமல் போய்விட்டது" என்றும் சொல்கிறார். இதே பஸ்ஸில் அண்ணன் அபிஅப்பா வந்து "நீங்க ஒன்னும் சிங்கை பிரஜை இல்லையே. இந்தியன் தானே, தமிழ்நாட்டு தமிழன் தானே. தமிழக முதல்வர் இந்திய அமைச்சர் அப்பனை கண்டமேனிக்கு திட்டுவது தான் உங்களுக்கு நகைச்சுவையா போயிடுச்சா. சரி நீங்க ஓட்டு போடலைய்யா. சரி இந்த ஜனநாயக ஆட்சியிலே அவங்க மெஜாரிட்டில தான வந்திருக்காங்க. அவங்களை விமர்சிப்பப்ப எதும் சொல்லலையே. அவங்க அப்பா அம்மாவை விமர்சிக்க உங்களுக்கு உரிமை கொடுத்தது யாரு? மிகவும் தரம் தாழ்ந்த விமர்சனம். இதை நகைச்சுவைன்னு வேற சப்ப கட்டு அசிங்கமா இருக்கு குழலி!" என சொல்கிறார். பின்னர் அண்ணன் புதுகை அப்துல்லா அவர்கள் "அமைச்சர் தவறு இழைத்தாகவே இருக்கட்டும். அதற்காக அவர் தந்தையின் இல்வாழ்வு உறவை கொச்சைப்படுத்தி அதில்  மகிழ்வதும்,.இரசிப்பதும்..??? நாம் மனிதர்கள்.வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை :((" இப்படி சொல்கின்றார்.  என்னை பஸ்ஸில் இருந்து தடை செய்த கோவிகண்ணன் சொல்கிறார் அங்கே " தலைப்பு சூப்பர்". என்னை பஸ்ஸில் இருந்து தடை செய்த மற்றும் ஒரு பதிவர் மா. சிவக்குமார் "  தலைப்பு in bad taste :-( '' என்று சொல்லிவிட்டு  போகின்றார். அங்கே குழலி அண்ணன் பஸ்ஸில் தலைப்பு பேட் டேஸ்ட் என்று சொன்ன மா.சிவகுமார் நான் தனிமனித தாக்குதல் நடத்துகிறேன் என சொல்லி தடை கோரும் தீர்மானம் எழுதிய உண்மை தமிழன் தமிழக முதல்வரை சாக சொல்லி தனிமனித தாக்குதல் செய்த போது அவரை தடை விதிக்க சொல்லவில்லை, அதே பதிவில் எனக்கு எதிராக பேசிய கபீஷ் அம்மையார் இப்போது குழலியின் இந்த தனிமனித தாக்குதலுக்காக குழலி அண்ணனை பஸ்ஸில் இருந்து தடை செய்வாரா?

இதே குழலி அண்ணன் மார்ச்  31ம் தேதி ஒரு பஸ் விடுகின்றார். அதிலே \\\\\\\சிங்கமுத்து on the march...வடிவேலு அம்பிகாவை வச்சிருந்த கதையெல்லாம் மேடையில் நாறுமோ? :-)\\\\  இது தனிமனித தாக்குதல் இல்லையா?

இதே குழலி அண்ணன் டிசம்பர் 8, 2010ல் ஒரு பஸ். அதிலே
 \\இன்றைய அரசியல் ஜோக் 
தலைவரின் அல்லக்கை: தலைவரே உங்களுக்கு "போபால புரம் வீடு" மட்டும் தான் சொந்தம்னு நீங்க சொத்துகணக்கு காண்பிக்கும்போது சொன்னது தப்பா போயிருச்சி.. 
தலைவர் : ஏன்யா என்ன ஆச்சி? 
தலைவரின் அல்லக்கை: எவனோ "பிஐடி காலணி" வீட்ல பூந்துட்டானாம் தலைவரே\\

இந்த பஸ் யாரால் எல்லாம் லைக் செய்ய படுகின்றது என பாருங்க. அதே உண்மைதமிழன், அதே அத்திவெட்டிஜோதிபாரதி. இவர்கள் எல்லாம் முழங்குகின்றனர் "விருச்சிககாந்து என்னும் பதிவர் தனிமனித தாக்குதல் நடத்துகின்றார். அவரை தடை செய்வோம்" என !

இந்த பதிவை படிக்கும் நடுநிலைவாதிகளே! நீங்கள் முடிவெடுங்கள். யார் தடை செய்யப்பட வேண்டிய நபர் என்று. உண்மை தமிழன், குழலி கோஷ்டிகளா? அல்லது நானா?

இதோ பாருங்கள்! எனக்கு திமுகவை பிடிக்கும். திமுகவை மட்டுமே பிடிக்கும். திமுகவை வசைபாடினால் பதிலுக்கு லாவணி பாடுவேன். இப்போதும் எப்போதும் சொல்கிறேன். எனக்கு தனிப்பட்ட விரோதி என யாரும் இல்லை. என்னை பார்த்து நான் சகபதிவர்களை வசைபாடுவதாக குற்றம் சுமத்தும் முன்பாக நீங்கள் "தமிழக முதல்வரையே தனிப்பட்ட முறையில் அவரது சொந்த வாழ்க்கை பற்றி அவர் மனைவியை பற்றி, அவரது மகள் பற்றி அவரது தாயார் தந்தையார் பற்றி கேவலமாக பேசுகின்றீகளே, அது எல்லாம் தனிமனித தாக்குதல் இல்லையா? நான் எப்போதாவது நான் எதிர்க்கும் பதிவர்களின் குடும்பத்தை எதுவும் சொன்னது உண்டா என நினைத்துப்பார்க்கவும்.

இனி இது போல தனிப்பட்ட முறை விளக்கங்கள் என்னிடம் இருந்து வராது. என் கட்சிப்பணி மட்டுமே செய்வேன். மே 13ம் தேதி வெற்றிப்பதிவு இடுகின்றேன். வாருங்கள்!


Saturday 7 May 2011

கோவிகண்ணனின் அருவெறுப்பான முகம்... உண்மை தமிழனின் காபி பேஸ்ட் முகம்...


யாரும் தொடாத பொருளை தொடும் தைரியம் திமுககாரனுக்கு உண்டு. அங்கே உண்மை இருந்தால்....

கனிமொழி கைதா இல்லையா என பட்டி மன்றம் நடத்தும் என் அன்பு உண்மை தமிழன்களே, திமுகவின் கொடூர முகம் என புலிப்பாய்ச்சல் பாயும் கோவி கண்ணன் வகயறாக்களே, தினமலமே மற்றும் ஆசையாய் துடிக்கும் ஜீவி, ரிப்போர்டர்களே!

உங்கள் தலையில் சாணியை கரைத்து ஊற்றி விட்டாகி விட்டது. சம்மந்தபட்டவர்கள் எல்லோரும் கைதாகிவிட்ட நிலையில் கனிமொழி கைது ஏன் இன்னும் நடக்கவில்லை என கொந்தளித்து பேசும் உண்மை தமிழன் அண்ணே, உனக்கு பதில் சொன்னா என்ன சொல்லாவிட்டால் என்ன? நீயாகவா எழுதுகின்றாய்? நீ வயிறு எரிச்சல் உள்ளவன். "அய்யோ எல்லோருக்கும் எல்லாமே கிடைக்குதே அப்பன் முருகா எனக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை" என பொறாமை தீயில் உழலும் உனக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? நீயே ஜூவியை காபி பேஸ்ட் அடிக்கும் சாதாரண மனிதன். சினிமா உலகில் யார் யாரை வைத்து இருக்கின்றனர் என பேசும் ஒரு சாதாரண ஆள். உனக்கு அரசியல் ஆசை வந்ததே வயிறு எரிச்சல் மட்டுமே காரணம். உதாரணம் சொல்லவா?

===========================================

\\பாவம் டோர்ஜி காண்டு.. 23 கோடி ரூபாய் சொத்துக்களோடு இந்தியாவின் 3-வது பணக்கார முதலமைச்சராக இருந்தவர்.. அவருடைய 4 மனைவிகளுக்கும், 5 பிள்ளைகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்\\..

ஒரு மாநில முதல்வர் இறந்து போனதுக்கு ஒரு ஆறுதல் அஞ்சலி பஸ் விடுகின்றார். அதாவது  \\பாவம் டோர்ஜி காண்டு.. 23 கோடி ரூபாய் சொத்துக்களோடு இந்தியாவின் 3-வது பணக்கார முதலமைச்சராக இருந்தவர்.. அவருடைய 4 மனைவிகளுக்கும், 5 பிள்ளைகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..\\\

இதில் நீங்கள் நன்றாக  கவனிங்க வேண்டும்.
1. டோர்ஜி காண்டுவுக்கு 24 கோடி சொத்து இருக்கின்றது.
2. இந்தியாவின் 3 வது பணக்கார முதல்வர். (அனேகமாக  கலைஞர் தான் முதல் பணக்கார முதல்வர் என்று மறை முகமாக கூட சொல்ல நினைட்து இருப்பார் போல)
3.அவருக்கு 4 மனைவிகள்
4. அவருக்கு 5 பிள்ளைகள்

. இதிலே ஹிட்டன் வயித்தெறிச்சல் தான் பிரதான எரிச்சல் அதாவது

 5. இது எதுவுமே எனக்கு இல்லியே முருகா முருகா..

மேற்கண்ட அவரது பஸ்ஸில் எங்கேயாவது அஞ்சலி வாக்கியம் இருக்குதா? இல்லையே? அண்ணே, நீ இன்னும் 50 வருஷம் எழுதி கிட்டே இருந்தாலும் முன்னேற முடியாது அண்ணே! உனக்கு ஏன் டோண்ஜி காண்டு மேலே இத்தனை காண்டு? உன்னால சகிச்சுக்க முடியாது அண்ணே, ஒரு பொண்ணாட்டி வச்சிருக்கவனையே உன்னால ஏத்துக்க முடியாது. அதிலும் அந்த ஆள் 4 பொண்டாட்டி வச்சிருந்தா விட்டுடுவியா? உனக்கு உன்னை போல மொட்டை பையனா இருக்கனும், ஜெயா போல மொட்டை பொண்ணா இருக்கனும். அதான் பிடிக்கும். போண்ணே போ! இதிலே கனிமொழி சார்பா வாதாடின ராம்ஜெத்மலானி மேல உனக்கு கோவம் கோவமா  வருது. உனக்கு இங்கிலீசும் தெரியாது. சட்டமும் தெரியாது. அந்த ஆள் என்ன சொன்னாருன்னு ஹிண்டு பேப்பர்ல படிச்சு தெரிஞ்சுக்கவும் முடியாத நிலை.

நாங்க என்ன சொன்னோம். சட்டப்படி நாங்க இந்த நிலையை எதிர் கொள்வோம் என சொன்னோம். சட்டம் யாருக்கு நல்லா தெரியுமோ அவங்க கிட்ட சொல்லி வாதாட வைப்பதில் என்ன தப்பு? சரி உன் பேச்சுக்கே வர்ரேன். கோவி கண்ணன் பேச்சுக்கே வர்ரேன். "கனிமொழி கலைஞர் டிவியின் சூத்திரதாரி. ஆனா கேஸ்ல சி பி ஐ என்ன சொல்லுச்சு? கலைஞர் டிவில தினமும் அவங்க தான் ஆட்சி பண்ணிகிட்டு இருக்காங்கன்னு தானே. எப்படி திடீர்ன்னு பணம் 240 கோடி வந்துச்சுன்னு தானே? எப்படி திடீர்ன்னு 240 கோடி வந்துச்சுன்னு கேட்க வேண்டிய ஆள் அமலாக்க துறை தானே தவிர ஸ்பெக்ரம் பாட்டியாலா நீதிமன்றம் இல்லைன்னு தானே ராம்ஜெத்மலானி வாதாடினாரு? அமலாக்க துறை என்ன கேஸ் போட்டாலும் அதை சந்திக்க தயார்ன்னு தானே நாங்க அதாவது கனிமொழி தரப்பு சொல்லுது. அது பொருளாதார குற்றப்பிரிவிலே தானே வரும். அங்க நாங்க பார்த்துக்கறோம். ஆனா 2 ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ராஜா சம்மந்தப்பட்டது. அதுக்கு அந்த துறையின் மந்திரி "raja is the only person for all its responsibility"ன்னு தானே ராம்ஜெத்மலானி சொன்னாரு. உடனே இதை நேரிடை மொழிபெயர்பு செய்துவிட்டு நீங்க "கனிமொழியை காப்பாத்த ராஜா பலிகடா"ன்னு பீலா விட்டுகிட்டு இருக்கீங்க. ராஜா அடிப்படையிலே ஒரு வக்கீல். அவருக்கு இதல்லாம் தெரியும். இது எங்க உட்கட்சி பிரச்சனை. நீங்களே அன்றைக்கு ஜூவி சொன்னதா சொன்னீங்க, அதாவாது இடியாய் இறங்கிய அழகிரி"ன்னு அட்டை படம் போட்டு எழுதினீங்க. ஆக திமுக உட்கட்சி பிரச்ச்னை இதல்லாம். இங்க ராஜாவை காட்டி கொடுத்து கனிமொழியை காப்பாத்தினதா பீலா விட்டுகிட்டு திரியுறீங்க. சட்டம் பத்தி உங்களுக்கு தெரியுமா தெரியாதா? அதன் வாத பிரதிவாதம் பத்தி எதாவது தெரியுமா?

நீங்க எவனும் யோக்கிய சிகாமணி இல்லை. முதல்ல உங்க மூஞ்சியை கண்ணாடில பார்த்துகுங்க. தான் போட்ட கையெழுத்து தன்னுது இல்லைன்னு ஜெ சொன்னப்ப அதிமுகவின் அகோர முகம்னு கோவிகண்ணன் எழுதவில்லை. அதே போல குழந்தைவேலு அமைச்சராக அதிமுகவிலே இருந்த போது கலைஞரை பற்றி அவதூறு பேசிய போது கலைஞர் தொடை தட்டி சவால் எழுப்பிய போது அதிமுகவின் கோர முகம் என எந்த பன்னாடையும் எழுதவில்லை. அதல்லாம் அந்த பன்னாடைகளுக்கு தெரியவும் தெரியாது. ஆனால் இதே சட்டரீதியாக எல்லாம் நாங்கள் செய்யும் போது கோவிகண்ணன் என்னும் பதிவருக்கு திமுகவின் கோர முகம் கண்ணுக்கு தெரியுதா? இன்னும் எத்தனை கோரமுகம் காண்பிக்க வேண்டும் அதிமுகவுக்கு? அதல்லாம் கண்ணுக்கு தெரியாது உங்களுக்கு. ஆனால் சதா சர்வகாலமும் கனிமொழியை பற்றி மட்டுமே உங்கள் நினைவுகள். அண்ணன் உண்மை தமிழன் மொட்டை பையன். ஆனா கோவிகண்ணன் பேரன் பேத்தி எடுத்த ஒரு பழுத்த ஆனால் மூளை வளர்சி இல்லாத திமுக எதிர்பு ஆள். மூளை வளர்சிக்கும் பேரன் பேத்தி எடுப்பதற்கும் கிஞ்சித்தும் சம்மந்தம் இல்லாவிடினும் நான் சொல்லித்தானே ஆக வேண்டி இருக்கின்றது. கோவிகண்ணனின் அகோர முகம் என நான் தலைப்பு வைத்ததால் "தனிமனித தாக்குதல்" என அவருடைய பிசிக் வைத்து நான் சொல்வதாக நினைத்து கொண்டால்  மன்னிக்கவும் .. அது உண்மையாகவே இருக்கும் பட்சத்திலும் நான் அந்த வகையில் சொல்லவில்லை. அப்படி நினைத்து கொண்டால் நானும் இந்த வலைப்பூவும் பொறுப்பு ஏற்க மாட்டோம் என்பதையும் இங்கே தெரிவித்து கொள்கின்றேன்.

இதோ இரு தரப்பு வாதமும் கேட்ட பின்னர் மே 14க்கு ஒத்தி வைக்கப்பட்டது தீர்ப்பு. அதனால் ஜூவி முதல் அதை காப்பி அடிக்கும்  உ. தமிழன், சதீச்சு எல்லாரும் மாட்டு சாணியை ஒரு பக்கெட்ல கரைத்து வைத்து கொண்டு தன் தலையிலேயே உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டே என சொல்லிகொண்டு தலையில் ஊற்றி கொண்டு பிஞ்ச வெளக்குமாறால் அடித்து கொள்ளுங்கள். ஏனனில் திமுக என்பது ஒரு மாபெரும் இயக்கம். பல சட்ட மேதைகளுக்கு கூட பாடம் புகட்டும் வித்தகர்கள் உள்ள இடம்.

சம்மந்தபட்ட எல்லோரும் கைது ஏன் கனிமொழி மாத்திரம் கைது இல்லை என சொல்லும் கோவிகண்ணா! சி பி ஐ வாதத்தில் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் பேசியது கனிமொழி என சொன்னது. அப்படியெனில் நீராராடியா ஏன் கைது செய்யப்படவில்லை என உண்மைதமிழனோ, ஜூவியோ, ரிப்போர்டரோ கேட்கவில்லை. சம்மந்தபட்ட ரத்தன் டாட்டா ஏன் கைது செய்யபடவில்லை? சம்மந்த்பட்ட அனிலம்பானி ஏன் கைது செய்யப்படவில்லை? கேட்டால் உடனே அவர்கள் தொழிலதிபர்கள். அவர்களால் வேலை வாய்பும் அரசுக்கு  வரியும் வருகின்றது என சொல்வீர்கள். ஆனால் அப்படி வரி செலுத்தினால் மட்டும்  யோ க்கியன் பட்டம் தானாக வந்து ஒட்டி கொள்ளுமா?

உங்களுக்கு ஒன்று தெரியுமா உலகின் மிகப்பெரிய நிறுவனம் சாம்சங் இதன் உரிமையாளர் ஒரு பொருளாதார குற்றத்தில் கடந்த ஏழு வருடமாக சிறையில் இருக்கின்றார். ஆனால் அவரது நிறுவனமும் அதன் வேலையாட்களும் அதனால் பாதிக்கப்படவும் இல்லை. கொரிய அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலும் இல்லை. அப்படி இருக்க ரத்தன் டாட்டாவை உள்ளே வைய்யுங்கள், அனில் அம்பானியை உள்ளே வையுங்கள். அதான் சி பி ஐ நீதிமன்றம் சொல்லிவிட்டதே? யார் எந்த பதவியில் இருந்தாலும் விட மாட்டோம் என. அத்தனை ஏன் அவர்கள் ஆசைநாயகி நீராராடியா கூட விசாரணை வளையம் மட்டுமே. ஆனால் கைது இல்லை என்றால் கனிமொழி கைது என்பது அரசியல் சம்மந்தப்பட்டது தானே உண்மை தமிழன் அண்ணே, நான் இங்கே கோவிகண்ணனை ஊறுகாய்க்கு கூட கூப்பிடவில்லை. ஏனனில் அவருக்கே ஏகப்பட்ட குழப்பம். தான் ஒரு இந்துத்துவாவா அல்லது நாத்திகனா, ஆத்திகனா என ஏகப்பட்ட குழப்பம். அவர் திமுக எதிர்நிலையில் இருப்பது மட்டுமே ஒரே குழப்பம் இல்லாத நிலை.

அனால் உண்மைதமிழன் நீங்கள் ஜூவியின் கட்டுரகளை பிரசுரித்து எனக்கு 500 ஆகியது 1000 ஆகியது பதிவு என ஹிட் சேர்க்கும் ஆள். அதாவது ஸ்டாம்ப் கலக்ஷன் சின்ன பையன் போலே. யாருக்கும் எந்த ஏழைகளுக்கும் பயன்படாத அந்த ஸ்டாம்ப் கலக்சனுக்கும் உங்களின் ஹிட்டுக்கும் எந்த வித வித்யாசமும் இல்லை. அது உங்களுக்கு பயன் படுகின்றதா என பாருங்கள் முதலில்...

போங்க போங்க போய் அடுத்த வேலை இருந்தால் பார்க்கவும். இனி கனிமொழி பற்றி எல்லாம் பேசி எங்க நேரத்தை வீணடிக்க வேண்டாம்!

Thursday 5 May 2011

அண்ணன் "புதுகை அப்துல்லா"வை வாழ்த்துவோம்! திமுக இணைய அணி வாழ்க வாழ்கவே!


இதோ மேலே இருக்கும் ஆனந்தவிகடன் செய்தியை பார்கவும். படிக்கவும்.   இப்போது நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிடுகின்றேன்.

இப்போதைய 2011  தமிழக சட்ட மன்ற தேர்தல் யாருக்கு ஆதரவு அலை, யாருக்கு எதிர்ப்பு அலை, ஆட்சி மாற்றம் வேண்டுமா, வேண்டாமா, தேர்தலில் பிரதானமான பிரச்சார விஷயம் என்ன என்று ஆராய்ந்தால் மிகச்சரியாக ஒன்று புலப்படும். யாருக்கும் ஆதரவு அலையோ அல்லது யாருக்குமான எதிர்ப்பு அலையுமோ இல்லை. அவரவர் செய்த நன்மை தீமைகளின்  குவாண்டிட்டி, டெண்சிட்டி அதாவது அளவு, விஷயத்தின் வீரியம் அல்லது அடர்த்தி  இவைகளை மட்டுமே சீர் தூக்கி ஓட்டுச்சாவடிக்கு மக்களை கொண்டு சென்று ஓட்டு போடும் படி வைத்தன என்பதே சரி. அப்படி பார்க்கையில் "ஸ்பெக்ட்ரம்" பிரச்சனை, விலைவாசி, மின்வெட்டு, ஆகியவை ஆளும்கட்சிக்கு எதிராக பேசப்பட்ட முக்கிய விஷயங்கள். இவை அத்தனையுமே கடைக்கோடி வாக்காளனுக்கு கொண்டு சேர்த்தது யார்? அதிமுக பேச்சாளர்களா?, தோழமை கட்சிகளின் பேச்சாளர்களா? சுவரொட்டிகளா?, சுவர் விளம்பரங்களா? துண்டு பிரசுரங்களா? தெரு முனை கூட்டங்களா? என்றால் இவை எதுவுமே இல்லை. கலைஞர் வழங்கிய இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளே என்றால் மிகையாகாது.

ஆக திமுக தன் விரலை கொண்டே தன் கண்ணை குத்தி கொண்டதாக எதிரணியினர் சொன்னாலும் திமுக அதை பற்றி எதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஒரு டெக்னாலஜி வந்து விட்டது. அதாவது தொலைக்காட்சி என்னும் பிரச்சார சாதனம் வந்தாகி விட்டது. அதை கொண்டு போய் கடைக்கோடி வரை சேர்பிக்கும் கடமை அரசாங்கத்துக்கு உண்டு என நினைத்தது. அதை செய்தது. அதனால் தனக்கு இப்படிப்பட்ட இடர் வருமே என திமுக நினைக்கவில்லை. சாதனம் பொதுவானது. சந்தைக்கு வந்து விட்டது. இப்போது நீயும் கூவு. நானும் கூவுகிறேன். உன் கருத்தை நீ சொல். என் கருத்தை நான் சொல்கிறேன். என் கருத்தை நான்  கீழ்மட்டம் வரை கொண்டு சேர்க்க கூடிய கட்டமைப்பு என்னிடம் உண்டு என திமுக நினைத்தது. அதனால் தான் சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும், தோழமை கட்சிகளின் மக்கள் தொலைக்காட்சியும், மெகா தொலைக்காட்சியும், வசந்த் தொலைக்கட்சியும் இந்த பக்கம் வரிந்து கட்டி நிற்க அந்த பக்கம் ஜெயா தொலைக்கட்சி, கேப்டன் தொலைகாட்சி என சவளைப்பிள்ளையாக துவண்டு நின்றது.

கிட்ட தட்ட திமுக கூட்டணி வென்றாகிவிட்டது. ஆக என்ன விதமான டெக்னாலஜி வந்தாலும் கூட அதை திமுக தனக்கு சாதகமாக பயன்படுத் கூடிய வல்லமையை பெற்றுள்ளது. இதோ இந்த தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்க அறிவிப்பு செய்தாகிவிட்டது. அதையே காப்பி அடித்த அதிமுக +2 மாணவர்களுக்கும் உண்டு என சொன்னது. இதே திமுக ஆட்சி வந்தால் அனேகமாக இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என சொன்னதை அண்ணா பிறந்த தினத்தில் யாரும் எதிர் பார்க்கா வண்ணம் ஒரு ரூபாயாக ஆக்கி காட்டினாரே அது போல +2 மாணவர்களுக்கும் மடிக்கணினி உண்டு என சொல்லலாம்.

அப்படி மடிக்கணினி கொடுக்கும் பட்சத்தில்  என்ன நடக்கும்? +2  யார் படிப்பர்? பத்தாவது தேர்வு பெற்றவர்களில் 80 சதம் +1, +2 படிப்பர். அதாவது வருடத்துக்கு குறைந்தது 5 லட்சம் பேர். அதாவது ஒரு வருடத்துக்கு ஐந்து லட்சம் எனில் அடுத்த தேர்தல் வரும் போது 25 லட்சம் பேருக்கு கிடைத்து விடும். அவர்கள் அத்தனை பேரும் புது வாக்காளர்கள் அல்லவா? ஒரு ஒரு தொகுதிக்கும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்காளர்கள் இந்த மடிக்கணியை பெற்றவர்கள் அல்லவா?

ஆக எதிர்காலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்? இணைய பிரச்சாரம் முக்கியம் அல்லவா? இப்போது எல்லாரிடமும் செல்போன் இருக்கின்றது. அதன் வழியாக ஏர்செல், ஏர்டெல் போன்றவை இப்போது தினத்துக்கு 5 ரூபாய் செலவில் அன்லிமிடட் பிரவுசிங் வசதி செய்து கொடுத்து கொண்டு உள்ளது. ஆக அத்தனை பேரும் தமிழ் வலைப்பூக்கள் பக்கம் வருவர்.  இன்றைய நிலையில் நான் மனப்பூர்வமாக ஒத்து கொள்கின்றேன். மக்கள் கலை இலக்கிய கழகம் இணையத்தில் தன் பிரச்சாரத்தை வழி நடத்துவது போல திமுக கூட செய்வதில்லை. வினவு நண்பர்களே! இப்படியே உங்கள் இயக்கத்துக்கு ஆதரவு பெருக நாங்கள் மடிக்கணினி கொடுத்து கொண்டே இருப்போமா? நிச்சயம் இல்லை. அதற்காக இல்லை. அதனூடே எங்கள் கட்சி பணியையும் பார்த்து தானே ஆக வேண்டும். மாணவர்கள் தங்கள் படிப்பினூடே அரசியல் அறிவையும் வளர்த்து கொண்டு வாக்களிக்க வேண்டுமே.

அதனால் "திமுக இணைய அணி" உண்டாக போகின்றது. இதோ எங்கள் உடன்பிறப்பு அப்துல்லா அவர்கள் பொதுக்குழு உறுப்பினர் இத்தனை நாள் திமுகவுக்காக  தீவிரமாக இணையத்தில் செயல்பட்டதற்கான பரிசு எங்களுக்கு கிடைக்க போகின்றது.

யார் இந்த அப்துல்லா? உணர்விலும் செயலிலும் தன்னை எப்போதும் திமுகவுக்காக அர்பணித்தவர். தன் 16 வது வயதில் இருந்து மாணவர் திமுகவில் மாபெரும் பணியாற்றியவர். இதே ராஜீவ் கொலையான சமயத்தில்   எங்கள் கட்சிக்காக இரவில் பிரச்சாரம் முடித்து வந்த போது கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு தன் காலை இழக்க இருந்தவர். யார் செய்த புண்ணியமோ... காலில் பிளேட் வைக்கப்பட்டதோடு போனது. இவர் அதற்காக புதுகை அரசு மருத்துவமனையில் இருந்த போது தலைமை கழகத்தால் ஆற்காடு வீராசாமி அய்யா வந்து பார்த்து விட்டு கண்ணீர் விட்டு போனார். துவண்டாரா அப்துல்லா? இல்லை திமுககாரன் என்றைக்கும் அடக்கு முறைக்கு பயந்தவன் அல்ல. இன்னும் வீரு கொண்டு எழ எழ கட்சி பதவிகள் அவரை தேடி தேடி வந்தன. திமுக என்னும் மாபெரும் இயக்கத்தில் தனது 32 வது வயதில் பொதுக்குழு உறுப்பினர் ஆனார். இப்போது கூட விராலிமலை சட்ட மன்ற தொகுதிக்கு விண்ணப்பித்து மயிரிழையில் வாய்ப்பை இழந்தவர். ஆனாலும் புதுக்கோட்டை தொகுதி பொறுப்பாளர் ஆகி தன் கடமையை திறம்பட நடத்தி முடித்துள்ளார். மெத்த படித்தவர். முழுநேரம் மனதளவில் கட்சிக்காக தன்னை அர்பணித்து கொண்ட போதிலும் குடும்பத்துக்காக ஒரு தனியார் நிறுவனத்தில் மிகப்பெரிய பதவியில் இருப்பவர். உலக நாடுகளை சுற்றி வந்தவர். இணைய அறிவு நிரம்பப் பெற்றவர். கலையுலகிலும் தன் முத்திரையை பதித்தவர்.அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவர். கனிவான பேச்சுக்கு சொந்தக்காரர். தளபதியின் அன்புக்கு அடிமையானவர். தலைமைக்கு கீழ்படிந்தவர்.

இதோ கட்சி அவரை கூப்பிட்டு "திமுக இணைய அணி"க்கான அஸ்திவாரம் போட சொல்லி இருப்பதாக ஆனந்த விகடனில் செய்தி வந்துள்ளது.இனி தான் திமுகவின் இணைய பிரச்சாரம் "முறைப்படி" ஆரம்பம் ஆக இருக்கின்றது. இனி தான் கச்சேரி களைகட்ட இருக்கின்றது. அண்ணன் புதுகை அப்துல்லாவின் பணி சிறக்க திமுக பதிவர்கள் வாழ்த்துகிறோம். 

Saturday 30 April 2011

கிளி சோசியகாரன் ஆர் கே சதீஷ்குமாரின் அடாவடித்தனம்! கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சானா?

மன்னிக்கவும், எனக்கு யாரையும் தனிமனித தாக்குதல் செய்ய ஆசையும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. ஆனால் ஆர் கே சதீஷ்குமார் என்னும் மடையன் மீண்டும் மீண்டும் தனி மனித அவதூறு செய்வதால் இந்த பதிவு எழுதப்படுகின்றது. வாசகர்கள் மன்னிக்கவும். மே 14ம் தேதி அவன் மீது அவதூறு வழக்கு போடப்படும். ஜூவி மீது போடும் போது அவன் மீது தனியாக போடப்படும் என்பதையும் அறிவிக்கிறோம்!
இந்த மானம் கெட்ட ஆர் கே சதீஷ்குமார் என்னும் மடையன் இப்போ எழுதி கிழித்த பதிவுக்கு எதிர் பதிவு இது. எலேய், நீ உண்மையான சோசியம் பார்க்கிரவனா இருந்தா மே 13 க்கு பின்னே உன் கடையை மூடு. நான் தோத்துட்டா நான் மூடிடுறேன். நீ வாதம் செய்தால் நான் எதிர் வாதம் செய்வேன். நீ டுபாக்கூர் விட்டா நானும் நானும் அதுக்கு இப்படித்தான் பதில் சொல்வேன். இனி அவன் பதிவுக்கு பதில் குடுக்குறேன்!
==================================================

இந்தியா டுடே வாக்களிப்புக்குப்பின்,கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.அது தி.மு.க 130 இடங்களை கைப்பற்றும்..என தி.மு.க இனர் மகிழ்ச்சியாக உள்ளனர்..
=========================

எவண்டா உங்க கருத்து கணிப்பு எல்லாம் பார்த்தது? அந்த நாயிதான் ஏற்கனவே உங்களுக்கு சாதகமா சொன்னானே? 160 ஜெ வருவான்னு. அது அவன் பிரச்சாரம். இது இப்போ சொன்னது உண்மை நிலைக்கும் கீழே கொஞ்சம் கீழே.. அதாவது நாங்க ஸ்வீப் அடிப்போம்னு சொல்ல மனசு வரலை. அதான் அப்படி சொன்னான். நீ உன் சோசியம் வச்சு பார்ப்பது தனே உண்மை நிலையை.

++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதுவரை 20க்கும் மேற்ப்பட்ட ஊடகங்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்டு அவற்றில் அ.தி.மு.க பெரும்பான்மை பெறும் என சொன்னபோதெல்லாம் மவுனம் காத்த சன்டிவியும்கலைஞரும்இப்போதுபரபரப்படைகின்றனர்.உற்சாகமாக கலைஞர் சொல்கிறார்...இது என் ஐந்து ஆண்டுகால ஆட்சியின் சாதனை என்று.

+++++++++++++++++++++++++++++++++++++++

வக்காலி, அப்பவும் கலைஞர் சொன்னார்! நாங்க கருத்து கணிப்பை நம்புவதில்லைன்னு! அதை ஏன் மறைச்சே?
+++++++++++++++++++++++++++++++++++===

1.சென்ற தேர்தலில் இலவச டிவி தருவதாக சொல்லித்தான் தி.மு.க ஆட்சியை கைப்பற்றியது..அந்த அறிவிப்பை ஜெயலலிதா சொல்லவில்லை.அதனால் தோற்றுவிட்டார்..இப்போது அதே ஸ்டைலில் மிக்ஸி,கிரைண்டர் இலவசம் என கலைஞர் சொன்னார்.இந்த முறை விழித்துக்கொண்ட..;-)) ஜெயலலிதா அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...ஆக, ஒரு வழி அடைக்கப்பட்டுவிட்டது.
______________________________________________
வழி எதும் அடைக்கப்படவில்லை. ஜெ சொன்னா நடக்காது., கலைஞர் சொன்னா நடக்கும் என மக்களுக்கு தெரிஞ்சுது. ஜெ ஆட்சியில் தான் மகளிர் திருமண திட்டம் தொகை நிறுத்தப்பட்டது, உனக்கு தெரியுமா? வேலை வாய்ப்புகள் நிறுத்தப்பட்டது. உனக்கு தெரியுமா? பென்ஷன் நிப்பாட்டப்பட்டது. உனக்கு தெரியுமா? சாலைப்பணியாளர் வேலை பறிக்கப்பட்டது உனக்கு தெரியுமா? ஆனால் எல்லாம் மக்களுக்கு தெரியும். ஜெ சொன்னா உடனே வழி அடைக்கப்பட்டு விடுமா? மக்கள் எல்லாரும் உன்னை போல முட்டா கூவா?
===================================================

2.சென்ர முறை விஜயகாந்த் 10 சதவீதம் வாக்கை பிரித்து கலைஞர் ஆட்சியை பிடிக்க உதவினார்..இந்த முறை ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து பட்டி தொட்டியெங்கும் பிரச்சாரம் செய்துள்ளார்...அதிக தொகுதிகலை வலம் வந்த தலைவர் இவர் ஒருவரே.ஸ்டாலின் கூட இந்த முறை தன் தொகுதியிலேயே அதிக நாட்களை கழித்தார். இந்த ஃபார்முலாப்படி விஜயகாந்த் மேஜிக்கும் எடுபடாமல் போய்விடுமா..?
டேய் விஜய்காந்து பிரச்சாரம் தாண்டா எங்க + பாயிண்ட்டே. இது கூட தெரியாம இன்னும் உளறி கொட்டி கிட்டு இருக்க. அவனுக்கு அப்ப 10 சதம் இருந்துச்சு. இப்ப அதுவே மைனஸ் பத்து சதம் ஆனது உனக்கு தெரிய வாய்ப்பே இல்லை சதீசு. நீ சும்மா கிளி சோசியம் மட்டும் பாரு, நீ அரசியலுக்கு லாயக்கு இல்லை.
++++++++++++++++++++++++++++++++++++++++++

3.கரி விருந்து,வோட்டுக்கு 2000 பணம்,லட்டுக்குள் தங்கஉ மூக்குத்தி எனும் திருமங்கல ஃபார்முலாவை சுத்தமாய் முடக்கியது தேர்தல் கமிசன்..தி.மு.க மக்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் திணறியது....ஆக,மக்கள் பணம் கொடுக்காவிட்டாலும் தி.மு.க வுக்குத்தான் ஓட்டு போடுவார்களா..?
எலேய்  மே 13 அன்னிக்கு பதிவு போடுவே. அப்ப என்னா சொல்லுவே தெரியுமா? உனக்கு தெரியாது. நான் சொல்றேன். "திமுக பணம் குடுத்து ஜெயிச்சுச்சு"ன்னு. எலேய் அப்ப வச்சிக்கறேன் என் பதிவை!

===========================================

4.பவர் கட் தினசர் 3 மணி நேரம்...கொசுக்கடி விசக்கடி பொல இருக்கும் சென்னையில் இரவில் பவர் கட் என்ரால் நரக வேதனைதான்..அதை அனுபவித்தவர்கள் சிறிதும் யோசனையின்றி,மீண்டும் அதே ஆட்சி வேண்டும் என நினைப்பார்களோ..?

மயிராண்டி! சென்னையிலே உனக்கு பவர் கட்டு இருந்துச்சுன்னு உன் கட்சிகாரனே சொல்ல மாட்டான். போடா போய் கிளிக்கு நெல்லு போடு!

=========================================================

5.சிறுபான்மை ஓட்டுக்கள் 40 தொகுதிகளின் ரிசல்டை தி.மு.க வுக்கு எதிராக மாற்றப்போகும் நிலையில்,அவர்களும் கலைஞரைத்தான் கொஞ்சுகிறார்களா..?

முதல்ல சிற்பான்மையினர்னா என்னா தெரியுமா உனக்கு? பேச வந்துட்ட? இஸ்லாமிய்
ர்கள், கிருத்துவர்கள் எல்லாருக்கும் உன் ஜெ அடிச்ச ஆப்பு பத்தி உனக்கு தெரியாது. அவங்க கிட்டே கேட்டு தெரிஞ்சுகிட்டு பேசு!\
====================================================
6.இளைஞர்கள்,பெண்கள் ஸ்பெக்ட்ரம் ஊழலை ஒரு பிரச்சனையாகவே பார்க்கவில்லையா.

பார்க்கவில்லை. ஏன்னா அவங்க நேரிடையா பாதிக்கப்பட்ட ஜெ ஆட்சியில் பாதிக்கப்பட்ட பிரச்ச்னை தான் பார்த்தாங்க. செல் போன் பேசும் போது அது போட்டியின் காரணமாக பத்து பைசாவுக்கு பத்து நிமிஷம் பேசியதை தான் நினைத்து பார்த்தாங்க. அதே நேரம் அரசாங்க ஊழியர்கள் வீட்டு பெண்கள் தன் வீட்டுகாரன் போலீசால் அடித்து இழுத்து போகப்பட்டதை தான் நினைச்சு பார்த்தாங்க., ஆக அங்கயும் உனக்கு ஆப்பு தான்!
==========================

7.காங்கிரஸ் ,தி.மு.க உள்குத்து பகிரங்கமாகவே நடந்தது.சீமான் 63 தொகுதிகளிலும் கலங்கடித்தார்.அந்நிலையில் காங்கிரஸ் 63 தொகுதிகலையும் லட்டு போல அ.தி.மு.க கூட்டணிக்கு கொடுக்கப்போகிறது என தி.மு.க வினரே பேசிக்கொள்ளும் சூழ்நிலையில் இது சிரிப்பா இல்ல..\\

சீமான் கலங்கடித்தானா இல்லியான்னு திமுகவுக்கு என்ன கவலை? உப்பு தின்னவன் தண்ணி குடிக்கட்டும். ஆனா எங்க கூட்டணி தான் ஜெயிக்கும். ஆனா ஒன்னு சீமான் பத்தி ரொம்ப கனவு காணாத தம்பி. உனக்கு இருக்கு ஆப்பு!

=========================================

8.இதுவரை எம்.ஜி.ஆர் காலம் தவிர,எந்த கட்சியும் இரண்டாவது முறை ஆட்சியை பிடித்ததில்லை....அந்த லாஜிக்கும் இருக்கு.\\

இப்பதாண்டா நீ சோசியக்காரன். சரி நீ சொல்வது பொய்யா போச்சுன்னா நீ சோசியம் சொல்வதை நிப்பாட்டு.

=============================================

9.அடித்தட்டு மக்கள் ரொம்ப கஸ்டபடுறாங்க..ஒரு மாற்றம் வரணும்னு ரஜினி சொன்னதும் நினைவுக்கு வருது....\\
அவன் ஒரு மயிராண்டி, அவன் பேச்சு ஒரு பேச்சு. அவனே ஒரு கர்நாடகா காரன். ஒரு கர்நாடககாரிக்கு சப்போட் பண்ணுவான். ஏன்னா இவ தான் மைசூர் மகாராஜா என் பாட்டிய வச்சிருந்தாருன்னு சொன்னாளே, அதான் அவன் நாட்டு பாசம்! போடா போ போய் எதுனா மத்த வேலை இருந்தா புடுங்கு ( நீ இன்றைக்கு அதிக பட்சமாக எழுத்துப்பிழை செய்திருப்பதை வைத்து பார்க்கும் போது ஆஃப் க்கு மேலே போயிருக்கும் போலிருக்கு, உன் வாயால் நீ சோசியம் சொல்லி அதை கேட்பவன் வெளங்கிடுவான் போ, அவனை செருப்பால் அடிக்கனும்)

Friday 29 April 2011

ரஜினிக்கு வயிற்று போக்கு, காரணம் தமிழன் வடிவேலு!


வடிவேலு வடிவேலு வடிவேலு .... இரவு பகல் என எந்த நேரமானாலும் எல்லாவித மக்களையும் சிரிக்க வைக்கும் டாக்டர். சின்ன குழந்தைகளின் நண்பன்.வயதான பெரியவர்களின் செல்ல மகன். நடுத்தர வயதினரின் அன்றாட சர்வைவல் பிரச்சனைகள தன் நகைச்சுவையால்  தற்காலிகமாக தள்ளி வைக்கும் தோழன். பொது எதிரி என எவரும் இல்லை. சிங்கமுத்து  போன்ற ஏமாற்றுகாரர்களிடம் ஏமாந்து போனதால் பொதுமக்களிடம் இன்னும் கொஞ்சம் அனுதாபமும் கூட. அவருடைய நகைச்சுவை கூட மற்றவர்களை அடித்து குரூர இன்பம் காணும் சைக்கோத்தனமானது அல்லது அவ்வகையான குரூரத்தை சிரிப்பு என்கிற பெயரில் அதை காண்பவர்களிடமும் அத்தகையான குரூர வக்கிர எண்ணத்தை வளர்க்கும் வகையிலான நகைச்சுவை அல்ல. அப்படிப்பட்ட வடிவேலு சமீபமாக அதிகமாக விமர்சனத்துக்கு ஆளானதன் காரணம் அரசியல். தமிழக அரசியல்.

அரசியல்வாதியும்,  ஹீரோ நடிகருமான விஜய்காந்தின் வீட்டின் அருகே தான் வடிவேலுவின் வீடும். சாதாரண கார் பார்க்கிங் சண்டை இப்போது அந்த ஹீரோவை சீரோ ஆக்கும் வரை கொண்டு வந்து விட்டிருக்கின்றது. பக்கத்து வீட்டில் இருக்கும் சக நடிகன் வீட்டில் சண்டை போடுவதே தவறு. அதிலும் அந்த நடிகனின் மகள் மண்டையை உடைத்ததும் அப்பா நிலையில் இருந்த அந்த நடிகன் உடைந்து போனான். ஆவேசம் வரத்தானே செய்யும். பின்னே என்ன? சாதாரண குடிமகனாக இருந்தால் சாபம் விட்டு விட்டு போயிருப்பான். இவன் தான் புகழான நடிகனாயிற்றே. பேட்டி கொடுத்தான். "இதே விஜய்காந்தை நான் தேர்தலில் எதிர்து நின்று தோற்கடிப்பேன்". எல்லாம் முடிந்தது. காலம் ஓடியது. அவனும் அதை மறந்து விட்டான். ஆனால் பத்திரிக்கையாளன் மறப்பானா?

தேர்தல் வந்தது. ஓடிப்போய் அந்த நகைச்சுவை நடிகனிடம் ஞாபகமாய் கேட்டான். "விஜய்காந்தை எதிர்த்து தேர்தலில் நிற்பதாக சொன்னீர்கள். நிற்பீர்களா?" அதற்கு அந்த நடிகன் சொன்னான். "முதலில் அவர் தள்ளாடாமல் நிற்கட்டும். பின்னே அவரை எதிர்த்து நான் நிற்பதா வேண்டாமா என்பதை தீர்மானித்து கொள்கிறேன்". விடுவார்களா பத்திரிக்கைகாரர்கள். இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுத வந்தது வினை. மீண்டும் அதே ஹீரோ நடிகரின் ரசிகர்களால் மிரட்டப்பட்டான்.

இதை திமுக சரியாக பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தது. இந்த நகைச்சுவை நடிகர் தீர்மானமாக ஒரு நிலையான முடிவை எடுத்தார். தனக்கும் பாதுகாப்பு வேண்டும். தன் எதிரியையும் வீழ்த்த வேண்டும்.

எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பதில் ஆணித்தரமாக இருந்தார். திமுக தலைமையில் அமைந்த கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய முடிவெடுத்து கலைஞரின் முன்னிலையில், மருத்துவர் ராமதாஸ், திருமா, தங்கபாலு, கொமுக பெஸ்ட் ராமசாமி, ஸ்ரீதர்வாண்டையார், சுபவீ அய்யா, ஆசிரியர் வீரமணி, பேராசிரியர் காதர் மொய்தீன் ஆகியோர் முன்னிலையில் அது வரை யாரும் தொடாத பொருளை எடுத்து தன் கன்னிப்பேச்சை பேசப்பேச கூட்டம் ஆர்பரித்தது. மீடியாக்கள் கூர்ந்து கவனித்தன. அடுத்த நாள் அனைத்து பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சிகளும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து காட்ட காட்ட திமுக தலைமை மட்டும் தினமலர், தினமணி, ஜெயா தொலைக்காட்சி, துக்ளக் எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கூட்டணியின் பிரதான நம்பிக்கை நட்சத்திரமான ஒரு அரசு சார்பு கழகம் ஆகியவை என்ன சொல்கின்றது என பார்த்தது. அப்பட்டமாக அவர்களின் பயத்தை தங்களின் வடிவேலுவின் மீதான விமர்சனம் வழியாக பார்த்தது திமுக. எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் கமிஷன் அவதூறு வழக்கு பதிவு செய்தது வடிவேலு மீது.

உடனே திமுக வடிவேலுவை தனக்கான பிரம்மாஸ்திரமாக பயன் படுத்திக்கொள்ள தீர்மானித்தது. வடிவேலுவும் அவதூறு வழக்கினால் துவண்டு போய் விடவில்லை. தன் எதிரியை கண்மூடித்தனமாக எதிர்க்க தொடங்கினார். மேடை போட்டு கொடுத்தது திமுக. முழங்கினார் வடிவேலு. வடிவேலு வெடிவேலுவாக மாறினார். திமுக தலைமை  ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு நிமிடமும் வடிவேலுவுக்கான பேச்சை கூர் தீட்டி கொடுத்தது. மக்களின் நாடி பிடித்து பேசினார் வடிவேலுவும். இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியா? உடனே விஜய்காந்து இஸ்லாமியர்களை மட்டுமே தீவிரவாதியாக தன் படங்களில் சித்தரித்ததை பேசினார். 108 ஆம்புலன்ஸ் அந்த வழியே போனதா? உடனே அது பற்றி விவரித்தார். பள்ளி குழந்தைகளை கண்டால் வாரம் 5 முட்டை போடுவதை பேசினார். காவடி தூக்கி செல்லும் பக்தர்களை கண்டால் அவர்கள் தாளத்துக்கு ஆடினார்.

இங்கே ஒன்று மட்டும் நன்றாக கவனிக்க வேண்டும். காசுக்கு மாரடித்தல் இப்படி அடிக்க முடியாது. எடுத்த காரியம் ஜெயம் ஆக வேண்டுமெனில் அதற்கான உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதை வடிவேலு நன்கு அறிந்திருந்தார். அவர் செல்லும் இடமெல்லாம் எம் ஜி ஆருக்கு அடுத்தபடியாக கூட்டம் அலைமோதியதை முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் தினமணியில் அரைப்பக்க கட்டுரையாக வடித்தார்.  தேர்தல் நாள் முடியும் வரை தன் உழைப்பை கொஞ்சமும் குறைத்துக்கொள்ளவே இல்லை. தேர்தல் நாள் அன்று ஓட்டு போட்டு தன் கடமையை செய்தார். பின்னர் திமுக தலைவரை கண்டார். ஆசி வாங்கினார்.

ஆனால் திரையுலகம் விக்கித்து நின்றது. ஒரு முன்னாள் நடிகர் சங்க தலைவர், ஏகப்பட்ட கட்ட பஞ்சாயத்து செய்து பிரச்சனைகளை தீர்த்து வைத்தோ நீர்த்து போக வைத்தோ செய்திருந்த விஜய்காந்தையே இவர் எதிர்த்ததால் இவர் ஹீரோ ஆகிப்போனார். அந்த நடிகர் தன் மீது இப்படி கல் விழும் சொல்விழும் என நினைத்து பார்க்காமையால் சதா சர்வகாலமும் குடிக்க தொடங்கினார். போதையில் பேசுவது என்ன என தெரியாமல் உளற ஆரம்பித்தார். கடைசியில் அவர் காமடியனாகிப்போனார்.

அதன் பின்னர் நடந்தது தான் வேடிக்கை. வடிவேலு நடிக்க இருந்த படங்களில் இருந்து கழட்டி விடப்பட்டார் என செய்திகள் வரத்தொடங்கின. பிரபு தேவா தன் படத்தில் இருந்து வடிவேலுவை கழட்டி விட்டார். அதற்கு காரணம் பெரியதாக தோண்டி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இல்லவே இல்லை. பிராமண சமூகத்தை மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பிரபுதேவா இரு வழிகளிளும் ஜெயலலிதாவின் விசுவாசியாக அபிமானியாக ஜெயலலிதாவுக்கு ஆதரவு கொடுப்பது என்பது இயற்கையே. ஏனனில் ஜெயலலிதாவும் கர்நாடக நாடு. ஜெயாவும் பிராமண குலம். வடிவேலு என்ற தமிழன்  தன் இனத்தை சேர்ந்த தன் நாட்டை சேர்ந்த ஜெயாவின் வெற்றிக்கு ஆப்பு வைத்ததை அவர் மனம் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.

ஆனால் பிரச்சனை அதுவல்லை. தமிழர்களின் வியர்வை காசை மகாராஷ்டிராவில் முதலீடாக ஆக்கும் ரஜினி தான் இப்போதைய பிரச்சனை. ரஜினியை ஆரம்பம் முதலே நன்கு கவனித்து வந்தால் ஒன்று மட்டும் நிச்சயமாக தெரியும். கர்நாடககாரனுக்கு முழு ஆதரவும் தருவார். கர்நாடகாவில் இருந்து பிழைக்க தமிழ்நாடு வந்து நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாத நடிகை நடிகருக்கு கூட சின்ன சின்ன காட்சிகளில் கூட முக்கியத்துவம் கொடுத்து பிழைக்க வழி வகை செய்வார். போகட்டும். தன் கர்நாடக பாசம் இருக்க வேண்டியது தான். அதே போல தான் மனம் முடித்த பிராமண சமூகத்துக்கும் தன்னால் ஆன அத்தனை ஆதரவுகரத்தையும் நீட்டி முழங்குவார். போகட்டும். கூட வாழும் மனைவிக்கான ஜாதிப்பாசம் என்றே கூட வைத்துக்கொள்வோம்.

ஆனால் தான் நடிக்கும் "ராணா" படத்தில் இருந்து வடிவேலுவை நீக்க காரணம் என்ன? ஈகோ தான். ஒரு காமடி நடிகன் தன்னை போன்ற ஒரு  ஹீரோவை பூஜ்ஜியம் ஆக்கியது கண்டு பயம். ஏற்கனவே பாபா படம் தோல்வியில் முடிந்த போதும் அதன் பின்னர் வந்த சந்திரமுகி படம் ரஜினியின் எந்த வித பார்முலாவின் படியும் எடுக்கப்படாவிடினும் வடிவேலுவின் நகைச்சுவை தான் படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது என்பதை பலரும் பத்திரிக்கையில் எழுதி விட்ட பிறகு, இப்போது விஜய்காந்தை வடிவேலு என்னும் தமிழன் பூஜ்ஜியம் ஆக்கிவிட்ட நிலையில் ராணா படத்தில் வடிவேலுவை வைத்திருக்க பயம் வந்து விட்டது அந்த மாஸ் ஹீரோ ரஜினிக்கு. தவிர  தேர்தல் நாள் வரை திமுக தலைமையோடும் திமுகவினரோடும் நெருக்கமாக இருப்பதை போல காட்டிக்கொண்டாலும், பாட்ஷா படத்தின் போது ரஜினிக்கு ஜெயா சொல்ல முடியாத இன்னல் பல கொடுத்து இருந்தாலும் ரஜினியின் தாய்நாட்டு பாசம் மற்றும் தான் மணமுடித்த மனைவியின் ஜாதிப்பாசம் ஆகியவைகள் எப்போதுமே ரஜினி உள்ளுக்குள் ஒரு அதிமுக என்பதையே அவரை அதிகம் நெருங்கியவர்கள் உணர்ந்த ஒரு விஷயம். அது தேர்தல் தினத்து அன்று பத்திரிக்கையாளர்களின் பிளாஷ் வெளிச்சத்தில் வெட்ட வெளிச்சம் ஆகியது. அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போடுவது தெரிந்து போனது. அதையே ஜெயா விடியில் திரும்ப திரும்ப காட்டி அன்றைக்கு ரஜினி ரசிகர்களிடம் வாக்கு கேட்ட நிகழ்வும் தேர்தல் கமிஷன் முன்னிலையிலேயே நடந்தது.

யார் வேண்டுமானாலும் யாருக்கு ஓட்டு போட்டாலும் தவறு இல்லை. ஆனால் ரஜினி தன் நடிப்பு திறனை இந்த இடத்தில் திமுக தலைமைக்கு காட்டியது தான் எரிச்சலின் உச்சகட்டம் திமுக தொண்டனுக்கு. "ஆமாம் நான் அதிமுகவுக்கு ஓட்டு போட்டேன்" என தைரியமாக சொல்ல கூடாது, அது தேர்தல் கமிஷன் விதி. ஆனால் திமுக தலைமையிடம் சென்று எதற்காக மன்றாட வேண்டும். இதோ கீழே இருக்கும் செய்தியை பாருங்கள்.

\\\\Superstar Rajinikanth has reportedly given an explanation to Tamil Nadu Chief Minister and DMK president M Karunanidhi on some television channels showing him voting for the AIADMK during the polling for Assembly elections on Wednesday.

When the top actor came to the Stella Maris College polling booth, lensmen literally chased him and even captured the visuals of Rajini doing his democratic duty. And some television channels aired the footage too, saying he voted for the ‘two leaves’, the symbol of the AIADMK.

This resulted in the Election Commission issuing a stern warning to the channels, saying “it is a poll violation and telecasting such a visual is a crime. Both the videographer and broadcaster will be punished”. Following this, the visuals were taken off from the air.

Meanwhile, Rajini, who met Karunanidhi during a special show of ‘Ponnar Sankar’, told the Chief Minister that the cameramen had insisted him to go for a ‘retake’ while pressing the EVM button and accidentally his hands pressed the two leaves symbol.

The DMK leadership seems to have accepted the explanation, with Karunanidhi exchanging pleasantries with the Superstar during the ‘Ponnar Sankar’ show.\\

இப்படி மன்றாட வேண்டிய அவசியம் என்ன ரஜினி என்னும் மாஸ் ஹீரோவுக்கு? பயம். திமுக வெற்றி பெற்றால் என்ன செய்வது என்கிற பயம். இந்த பயம் தேவையே இல்லாதது. அதற்காக திமுக என்ன உங்களை கடித்து குதறவா போகின்றது? அப்படி திமுகவுக்கு அஞ்சினால் பின்னர் எப்படி நீங்கள் மாஸ் ஹீரோ? அப்படி என்றால் ரோபோ படம் இயக்குனர் ஷங்கரால், தயாரிப்பாளர் கலாநிதிமாறனால், நடிகை ஐஸ்வர்யாவினால் மட்டுமே ஓடியது என்று ஒத்து கொள்கின்ரீகளா ரஜினி? அன்புமணி ராமதாசுக்கு பயந்து தானே சிகரட் பிடிப்பதை உங்கள் படத்தில் வைப்பதில்லை? உங்கள் மாஸ் ஹீரோத்தனம் உண்மை என்றால் அப்படி செய்திருக்க கூடாது தானே? சிகரட் பிடிப்பது குற்றம் என உண்மையிலேயே நீங்கள் உணர்ந்து அன்புமணி ராமதாஸ் சொல்வதில் இருக்கும் உண்மையை நீங்கள் நிஜமாகவே உணர்ந்து இருந்தால் நிஜ வாழ்க்கையிலும் அதை விட்டிருக்க வேண்டும். அதை விடுத்து உங்கள் வியாபாரம் மாத்திரம் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் சிகரட்டை படங்களில் மாத்திரம் விட்ட நீங்கள் மாஸ் ஹீரோ என இனி சொல்லிக்கொள்ள வேண்டாம்.

இதோ இன்று வடிவேலு திமுக தலைவரை சந்தித்து விட்டு வரும் போது கேட்ட கேள்வி ஒன்றில் \\ ராணா படமாக இருக்கட்டும், காணா  படமாக இருக்கட்டும், எந்தப் படமாக இருந்தாலும் என்னை தூக்குவதைப் பத்தி நான் கவலைப்படவில்லை. மக்களை சென்றடைந்த திட்டங்களை பற்றி நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இதனால் என்னை சினிமா கேரியரில் இருந்து தூக்கினாலும், தூக்காவிட்டாலும் நான் அதைப்பற்றி கவலைப்படமாட்டேன். வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். காட்சிகள் மாறும்\\  என்றார். இப்படி ஒரு நகைச்சுவை நடிகர் ஒரு மாஸ் ஹீரோ படத்தை பற்றி மீடியாவில் சொல்லி அது இன்று முழுவதும் எல்லா தொலைக்காட்சியிலும் மாறி மாறி ஒளிபரப்பு ஆகின்றது தலைப்பு செய்தியாக. மேலும் " எல்லாம் மே 13ம் தேதி மாறும். இங்க வந்து ஆசி வாங்கிட்டு போயிட்டாங்க" என்றார்.  ஆக வடிவேலு என்னும் தமிழ் பாம்பு, ரஜினி என்னும் கர்நாடக மற்றும் ஜாதி பற்றாளனை தீண்ட  லொக்கேஷன்  பார்த்து விட்டது.நேரம் குறித்து விட்டது.  ரஜினியே அந்த பயத்தில் தான்  இன்று உங்களுக்கு வயிற்றுப்போக்கு வந்தது. இனி தமிழன் மீது உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டினால் வடிவேலு போன்ற பலதமிழ் நாகங்கள் உங்களை தீண்ட தயாராக இருக்கின்றது என்பதை சீக்கிரம் உணர்வீர்கள். நல்லபடியாக உடல்நிலையை கவனித்து கொண்டு வீடு வந்து சேருங்கள். சீக்கிரம் தமிழனோடு யுத்தம் செய்ய புதிய திரைக்கதையோடு வாருங்கள். எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம்!

ரஜினிக்கு வயிற்று போக்கு, காரணம் தமிழன் வடிவேலு!

Monday 25 April 2011

சாய்பாபாவினால் பளீர் பகுத்தறிவாளர்கள் உதயம்!


சத்யசாய்பாபா இறந்து விட்டார் அல்லது மறைந்து விட்டார் அல்லது இறைவனடி சேர்ந்தார் அல்லது காக்காய் தூக்கிப்போய் விட்டது எது வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இறந்து போயிருக்க கூடாது என்பதே நேற்று முதல் என் எண்ணமாக ஆகிவிட்டது. காரணம் தமிழ் வலைப்பதிவர்கள். நவதானியத்தை ஊற வைத்து அடுத்த நாள் பார்த்தால் முளை விட்டு பீறிட்டு கிளம்புமே அது போல பளீர்ன்னு ஒரு பகுத்தறிவு ஒளிப்பிழம்பு தமிழ் வலைப்பதிவர்கள் இடையே பீறிட்டு கிளம்பியிருக்கின்றது. போறவன் வர்ரவன் புண்ணாக்கு பருத்தி கொட்டை பதிவர்கள் அதாவாது கோவிகண்ணன், ஆர் கே சதீஷ்குமார் என பளீர் பகுத்தறிவாளர்களும் இடையே புகுந்து ஸ்ரீசாந்த் உலகக்கோப்பையை தூக்கிகிட்டு குதிப்பது போல கொண்டாட்டம்.அதாவது ஆதாம் ஏவாள் காலம் முதலே கடவுள் எதிர்ப்பு பற்றி எழுதிக்கொண்டு இருக்கும்  டாக்டர் ருத்ரன், தமிழ் ஓவியா ஆகிய பதிவர்ளை விட இந்த குஞ்சு குளுவான்களின் குதியாட்டம் டோனியே சும்மா இருக்கும் போது ஸ்ரீசாந்த் குதித்தது போலத்தான்.  (இன்னும் எங்க அண்ணன் உண்மை தமிழன் எழுதவில்லை,  ஜூவி இன்னும் வெளியாகவில்லை) இந்த கொடுக்கு எல்லாம்  இப்ப கிளம்பி இருக்குதுன்னா அதுக்கு ஒரே காரணம் சாய்பாபா மேலே இருக்கும் வெறுப்பு அல்லது பகுத்தறிவு இதல்லாம் காரணமில்லை.  அண்ட் ஒன்லி கலைஞர் தான். உலகமே வந்து தரிசித்துவிட்டு போன ஒரு ஆன்மீகவாதி கலைஞரை வீடு தேடி வந்து சந்தித்ததை சகித்துக்கொள்ளா ஜென்மங்கள் இந்த குஞ்சுகள். வேறு எந்த சிறப்பான காரணங்களும் கிடையவே கிடையாது. ஆக இந்த மட்டிலாவது இந்த குச்சுகளை பகுத்தறிவு பேச வைத்த கலைஞருக்கே ஒட்டு மொத்த கிரடிட்டும் போய் சேருகின்றது.

இதே ஜெயாவை வந்து சாய்பாபாவை சந்தித்து இருந்தாலோ அல்லது ஜெயா போய் சாய்பாபாவை சந்தித்து ஆசி வாங்கி இருந்தாலோ இந்த பளீர் பக்குத்தறிவாளர் கூட்டம் இப்போது சாய்பஜன் பாடிக்கொண்டு இருந்திருக்கும். பாவம் சாய்பாபாவுக்கு வட போச்சே!

இதிலே சதீஷ்குமார் தம்பி தான் என்ன எழுதுகிறோம்னு தெரியாமலே எழுதும் ஜென்மம்.

\\திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் ,மஞ்சள் துண்டு பெரியார் தம்பி,அண்ணாவின் நாத்திக நயாகரா...கடவுள் மறுப்பு சிங்கம் கலைஞர் ,தன் மகன் ஸ்டாலினை புட்டர்பர்த்திக்கு அனுப்பி வைத்ததுதான் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது....\\

தம்பி! கிருஷ்ணா தண்ணீரை கொண்டு வர 200 கோடி வரை நன்கொடையாக கொடுத்த ஒருவரின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவதும் துணை முதல்வரை அனுப்புவதும் அதே தண்ணீரை குடித்து கொண்டிருக்கும் உனக்கு இத்தனை வலி குடுக்குதுன்னா ஓடிப்போய் அந்த தண்ணீரை உச்சா போயிட்டு வந்து உன் ஜெயா  மேல சத்தியம் பண்ணி இனி அந்த தண்ணீரை குடிக்க மாட்டேன் என சபதம்  போட்டிருந்தா நீ மனுஷன். சும்மா கலைஞர் ஸ்டாலின்னு பேசிகிட்டு இருப்பதை விட்டு விட்டு நீ குடிச்ச  குடிச்சுகிட்டு இருக்கும் தண்ணிக்காவது கொஞ்சம் நன்றி காட்டு.

\\சாய்பாபா எனும் ஒரு பிரபல மாயாஜால வித்தைகாரர் மரணம் என தொப்பி தொப்பி கலைஞரின் அனுதாபி பதிவு போட்டிருக்கிறார்...இந்த நாள் ஞாபகம் வெச்சுக்கோங்க நண்பரே....நான்வருங்காலத்தில் முக்கியமான நாளில், பரபரப்பு பதிவு போடுவேன்..அது இன்னும் தலைப்பு,உங்கள் தலைப்பை விட,கேவலமாக இருக்கும்.\\\

ஹி ஹி இது போல பல மிரட்டல் பார்த்தாச்சு. மிரட்டியவன் எல்லாருக்கும் கலைஞர் தான் சமாதி கட்டினார் என்பதை ஞாபகம் வச்சுக்கோ. முதல்ல உன் ஜாதகத்தை பார்த்துக்கோ. ஆயுள் ரேகை கெட்டியா இருக்குதான்னு பார்ட்துக்கோ. பின்ன நீ கலைஞர் மரணத்துக்கு அநாகரிக தலைப்பு வச்சு பதிவு போடுறியா இல்லாட்டி  வேண்டாம் விட்டுடு..

\\நாத்திகரான கலைஞர் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கினார்.கதவை சாத்திவிட்டு சாய்பாபாவின் காலில் சாஸ்டாங்கமாக விழுந்து கும்பிட்ய்டார்..என்பதெல்லாம் நமக்கு தெரிந்ததுதான்..\\ 

அடச்சே.... நீ கதவை மூடின இடத்திலே நடந்தது எல்லாம் சொல்லும் சோசியக்காரனா இருந்து தொலைச்சுட்டு போ. அதுக்காக நீ சொல்வது எல்லாம் உண்மை என நம்பும் அறிவிலிகள் தான் இங்க எல்லாரும் என நினைப்பது உன் முட்டாள் தனம் என்பதை உணர்.அப்படியே போயஸ் கார்டனில் மூடிய கதவுக்கு பின்னால நடக்கும் விஷயங்களை கொஞ்சம் வெத்தலைல மை போட்டு சொல்லேன்ப்பா சதீசு வெளக்கெண்ணெய்!

அடுத்து கோவிகண்ணன். பாவம் ஒரு 50 வயசு மனுசனா நடந்துக்குறாரா இந்த ஆளு.  சாய்பாபா பரட்டை தலையாம், குழந்தைகள் பார்த்தா பயந்துடுமாம். சரி இருந்து தொலைக்கட்டும். அதை யார் யார் பேசுவது என்று வரைமுறை இல்லியா? முதல்ல டாக்டர் ருத்ரன் கிட்டே இந்த ஆளை பிடிச்சுகிட்டு போய் காட்டனும். பகுத்தறிவு பேச ஆசை. ஆன்மீகம் பேச ஆசை. இலக்கியம் பேச ஆசை. சினிமா பேச ஆசை. சமூகம் பேச ஆசை. வலைப்பூ எழுத ஆசை, அதையும் நல்லா எழுத ஆசை... ஆனா சரியா வருவது என்னவோ கலைஞரை குடைவது மாத்திரமே. இவரு குத்துவதும் குடைவதும் கலைஞருக்கு ரீச் ஆகி அவரு இனிமே திருந்தி இதல்லாம் நடக்கும் காரியமா? போங்கய்யா போய் பேரன் பேத்தியை படிக்க வைய்யுங்க!