Total Pageviews

Monday 4 April 2011

காமடிப்புயல் விஜயகாந்து! சொல்வது விருச்சிககாந்து!!!


எனக்கு ஒரு விஷயம் மாத்திரம் நன்றாகவே தெரியும். அதாவது  இந்த வார ஜூனியர் விகடனில் விஜயகாந்து அவர் தனது வேட்பாளரை அடிக்கும் காட்சி பற்றி என் கோடம்பாக்கம் சகாக்கள் கூட " விஜய்காந்து கொசு அடித்தார் அதை நயவஞ்சக டிவிக்கள் மாற்றி போட்டது"  என சொல்லும் என சொன்னேன். ஆனால் அவர்கள் என்னை விட பல மடங்கு புத்திசாலிகள். அங்கே ஏதோ மைக் சரியில்லையாம், அதை சரி செய்தா ராம். போகட்டும். அது மைக்காகவே இருந்தாலும் கூட இப்படியா சரி செய்வாரு?

அது நமது கேள்வி அல்ல. ஆனால் ஜூனியர் விகடன் சேலம் மாநாட்டில் விஜயகாந்து குடித்து விட்டு உளறியதை சொல்லவே இல்லை. ரிப்போர்டர் சொல்லவே இல்லை. ஆனால் நக்கீரன் கூட இலை மறைவு காய் மறைவாக சொன்னது. ஏனனில் ஒரு கட்சி தலைவரை இப்படி எல்லாம் திடீரென சொல்லலாமா என்கிற பயம். ஆனால் அதை முதலில் உடைத்தது வடிவேல் என்கிற எங்கள் கதாநாயகன். இன்று காமடியனாகிப்போன விஜயகாந்தின் முகத்திரையை கிழித்த கதாநாயகன். இன்று சொல்கிறான் ( இனி குடிகாரனுக்கு ர் விகுதி அதிகம்) "அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஜெயிலில் இருக்கின்றது.. அய்யோ நான் உளறுகின்றேனா?  சாரி ராஜா ஜெயிலில் இருக்காரு.. அட போங்கப்பா" இது விஜயகாந்த்.  ஆக விஜயகாந்தின் நடுநிலை ஓட்டு என்பது சைபருக்கு வந்தாகிவிட்டது.

ஆக செத்த பாம்பை அடிப்பது திமுக வீரனுக்கு அழகில்லை. ஆனால் வழக்கம் போல உயிர் பாம்பு இரண்டு ஓடுது. அதாவது  ஆர் கே சதீஷ் குமார் பாம்பு, அது இன்னும் உயிரோடு இருக்கின்றது.அடுத்து உண்மை தமிழன். அதாவது என் அண்ணன் உண்மை தமிழன் பற்றி இப்போது எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். அவருக்கு யார் நல்லா இருந்தாலும் பிடிக்காது. இந்தியா ஜெயித்தாலும் பிடிக்காது. காரணம் அவர் வாழ்கையில் தோல்வி அடைந்தவர். தவிர அவர் மன உளைச்சல் அப்படி. யாராவது நன்றாக இருந்தால் குமுறி குமுறி அழுவார். அவரை விட்டு விடலாம்.

ஆனால் சதீசு குமாரு, சன் டிவில விஜய்காந்து குடித்து விட்டு உளறியதை தப்பா சொல்லிட்டாங்களம், அதுக்காக ஒரே அழுகை. அடப்பாவி! அதான் அவனே ஒத்து கிட்டானே, அவன் பொண்டாட்டி கட்டின பாவத்துகாக அதை ஒத்துக்கலை, ஜூவியின் பாலுவின் பையன் கொஞ்சம் ஷோக்காலி பேர்வழி, விஜய்காந்து கிட்டே கொஞ்சம் அப்படி இப்படி தான் இருப்பான், அதிலும் சினிமா பேர்வழின்னா அதிகமா கூட வழிவான். உனக்கு என்னடா ஆச்சு சதீசு?

நான் இதனால என்ன சொல்ல வர்ரேன்னா, திமுக பதிவர்கள், இனி விஜயகாந்தை பத்தி ரொம்ப அலட்டிக்க வேண்டாம். ஏன்னா லாலு பிரசாத் மேடைக்கு பின்னால வழிச்சுகிட்டு உச்சா போவதை முதலில் விஷயமா பேசினாங்க மக்கள், பின்னர், அவரு இப்படித்தான்னு சொல்லிட்டாங்க. அது போல மூப்பனார் பான்பராக் போடுவதை கூட சொல்லி பார்த்தாங்க. பின்னர் அவரு இப்படித்தான்னு விட்டுட்டாங்க. அது போல இவன் குடிப்பதை "இவன் இப்படித்தான்"ன்னு விட்டுடும் அளவுக்கு செஞ்சுடாதீங்க.

அப்படியே விடுங்க. மக்கள் பார்த்து கொண்டு இருக்காங்க. இத்தோடு விட்டால்  மீதியை அவங்க பார்த்துப்பாங்க. இனி தைரியமா ஜெ அம்மையார்  பற்றி பேசலாம். நான் அதிக பட்ச ஷூட்டிங் இருந்ததால் இங்கே வர முடியவில்லை. இனி வருவேன்.. மீண்டும் பார்ப்போம்..

2 comments:

Anonymous said...

அந்த எம் ஜி ஆரைப் பழி வாங்கியதால் எம் ஜி ஆரின் ஆவி இந்த எம் ஜி ஆர் மூலமாக மோகினிப் பிசாசை ஆட்டி வைக்கின்றது.

Anonymous said...

நியாயமான கேள்விகள் ........ !!!?