Total Pageviews

Thursday, 7 April 2011

"பய"டேட்டா செந்தில் என்னும் கிண்டாமணி...


..
நாங்கள்  வெற்றிக்கோட்டை தொட்டாகிவிட்டது. இன்னும் வெற்றியை அறிவிக்காமை ஒன்று தான் மீதி. எங்கள் உடன்பிறப்புகள் களப்பணியில் இருக்கின்றனர். இந்த வலையுலக கழக கண்மணிகளும் களப்பணியில் நின்று போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றனர்.  என்னைப்போல சிலர் மட்டுமே இணைய அட்டைகத்திகளை வெட்டி வீழ்த்தும் பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர். அதிலும் இப்போது காங்கிரசை வேரறுக்க கிளம்பி இருக்கும் சில அரைபிளேடுகள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் அந்த வேலையை செய்து கொண்டு இருக்கும் போதே "திமுகவை ஆதரிக்கும் பதிவுலக குஞ்சாமணிகள்" என்கிற தலைப்பில் போகிற போக்கில் எங்கள் மீதும் சேறு பூசிய பின்னர் இந்த தலைப்பிட்டு உங்களுக்கு பதில் சொல்லவில்லை எனில் இந்த தமிழகம் எங்களை மன்னிக்காது நண்பரே! இருங்க சிறிது விளையாடிவிட்டு வருகின்றேன்.

****************************************************************
\\சமீப காலமாக தி.மு.க குஞ்சாமணிகள் பஸ்சிலும்(GOOGLE BUZZ) பதிவுலகிலும்  ஒரே தி.மு.க  ஆதரவு கோஷங்களைப் போடுகின்றன. அடிமைகளே!\\

யார் அடிமை? எது அடிமை? விட்டுக்கொடுத்து தட்டிப்பறிப்பது பற்றி உனக்கு தெரியுமா செந்தில்? நீ வெறும் உணர்சிக்கு அடிமையான கூட்டத்தை சேர்ந்த சாதாரண நபர். இலங்கை பிரச்சனையின் காரணமாக நீ காங்கிரசை அழிக்க நினைப்பது பற்றி திமுகவினருக்கு கவலை இல்லவே இல்லை. ஆனால் இந்தியா முழுக்க இருக்கும் காங்கிரசை 50 பேர் கொண்ட கூட்டம் "நான் கிழிச்சிடுவேன்" என நா கூசாமல் சொல்லி கொண்டு பிதற்றுவதும் அதை நாங்களும் கேட்டு தலையாட்ட வேண்டும் என எதிர்பார்ப்பதும் உனக்கு புத்திசாலித்தனாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு தமிழ்நாட்டின் வளர்சி மட்டுமே கண்ணுக்கு தெரிகின்றது. இந்தியாவை ஆளும் ஒரு கட்சி, அத்தோடு இனக்கமாக இருந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் அவ்வளவு ஏன் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தை விட அதிக நிதி பெற்று வளம் கொழிக்க செய்யும் நாங்கள் அடிமைகளா? அல்லது விட்டுக்கொடுத்து தட்டிப்பறிக்கும் சூத்திரதாரிகளா?
 \\\ உங்கள் பக்தி என்னை மெச்சவைக்கிறது. ஆனால் நீங்கள் அத்துடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை இல்லாதொழிக்க போராடிக்கொண்டு இருக்கும் \\\ கிழிச்சீங்க. முதல்ல  வலையிலே கத்தாம இங்க வந்து களத்திலே இறங்குங்க\\\
\\இப்புடி எழுதுனா ஒடனே அடடா! ரெட்டை இலைக்கு ஓட்டு கேக்குறானுகன்னு கூவுறது. கொழந்தைகளா உங்களுக்கு மனசாட்சி அப்படின்னு ஒன்னு இருந்தாக்க, கடந்த ஐந்தாண்டில் தாத்தாவும், அவரின் குடும்பமும் அடித்த கூத்துகளை எப்படி இவ்வளவு சொலபமா பாராட்ட முடியுது. கேட்டா ஒரு ரூவாய்க்கு அரிசி போட்டோம், கோமணத்தோடு இருந்தவனுக்கு வேட்டி கொடுத்தோன்னு கூவுறீங்க. மொத்த தமிழ்நாடும் ஒரு லட்சம் கோடிக்கும் மேலே ஒலக வங்கில கடன் வச்சிருக்கு, இதெ தாத்தாதான் அடைக்கப் போறாரா???\\ 

அடங்கொய்யால , கடனைப்பத்தி நீ பேசக்கூடாது. பெரிய பொருளாதார மேதை இவரு. இவரு கடனை பத்தி எல்லாம் பேசுறாரு. இரு விளக்கம் தர்ரேன்.செந்தில் கொஞ்சம் அமைதியா படி. நீ உன் மனசாட்சிப்படி சரின்னு பட்டுச்சுன்னா நீ உன் பதிவில் கூட பதில் சொல்ல வேண்டாம். உனக்கு மட்டுமே தெரிந்தால் கூட போதும். சும்மா சிவப்பு துண்டு பலே பாண்டியன் மாதிரி கத்தி கிட்டு இருக்காம உன்னை நம்பி உன் பதிவை படிக்கும் சிலரை, நீ உண்மையை தான் சொல்வாய் என நம்பும் அந்த நபர்களுக்காக இனிமேலாவது பொய் சொல்லி ஏமாற்றாதே தம்பி.கொஞ்சம் போர் அடிக்கும். ஆனாலும் படி.

இந்தக் கேள்விக்கு பலமுறை தமிழக அரசின் சார்பில் விளக்கம் கூறப்பட்டு விட்டது. இருந்தாலும் வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் கூறுவதற்கு இல்லாததால் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். இலவசத் திட்டங்களை வழங்குவதற்காக தமிழக அரசு கடன்களை வாங்கவில்லை.
அ.தி.மு.க. 2001 2002 ம் ஆண்டு முதல், 2005 2006 ம் ஆண்டு வரை ஆட்சியிலே இருந்த போது வாங்கிய கடன் தொகை 28,772 கோடி ரூபாய். இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவு மட்டும் 15,614 கோடி ரூபாய். மூலதனச் செலவு என்றால், சாலைகள், பாலங்கள், குடிநீர் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக செய்யப்படும் செலவுகளாகும்.
2006 2007 ஆண்டு முதல் 2010 2011 (திருத்த மதிப்பீடு) ஆகிய ஐந்தாண்டுகளில் தி.மு.கழகம் ஆட்சியிலே வாங்கிய கடன் தொகை 44,084 கோடி ரூபாய். ஆனால் இந்த ஐந்தாண்டுகளில் இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவாகச் செலவிட்டது 44,667 கோடி ரூபாய். இதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கடன்களை வாங்கி இலவசத் திட்டங்களுக்காகச் செலவிடவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இதைத்தான் இடைக்கால நிதி நிலை அறிக்கை பக்கம் 55 ல், 2006 2007 முதல் 2010 2011 வரையான ஐந்தாண்டுகளில் கடன் பொறுப்புகளின் உயர்வு ரூபாய் 44,084 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே கால அளவில் மொத்த மூலதனச் செலவினங்கள் ரூபாய் 44,667 கோடியாக இருந்துள்ளது. திரட்டப்பட்ட கடன் பொறுப்புகள் அனைத்தும் பயன் அளிக்கக் கூடிய நோக்கங்களுக்காகச் செலவிடப்பட்டதை இது காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மத்திய நிதிக் குழுவும், மத்திய அரசும் ஒவ்வொரு மாநிலமும், அதன் மொத்த உற்பத்தியில் 25 சதவிகிதம் வரை கடன் பொறுப்புகளை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதித்துள்ளது. மேலும் 2005 2006 ஆண்டின் இறுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு 2010 2011 ல் தி.மு.கழக ஆட்சியின் இறுதியில் 19.58 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தப் புள்ளி விவரங்களிலிருந்து தமிழகத்தின் கடன் பொறுப்பு அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உள்ளதைத் தெரிந்து கொள்ளலாம்.

. எதற்குக் கடன் என்பதையும் சொல்ல வேண்டுமென்றால், உலக வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூபாய் 2442 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அபிவிருத்தி திட்டம், ரூபாய் 1224 கோடி மதிப்பீட்டில் சுகாதாரத் திட்டம் போன்ற மூலதனப் பணிகளை மேற்கொண் டுள்ளது. அதே போல் ஜப்பான் நாட்டு நிதியுதவி பெற்று ரூபாய் 1928 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், நபார்டு வங்கியின் மூலம் ஊரக சாலைகள், நீர்ப்பாசன நிலைகள் அபிவிருத்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்ற பணிகளுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் ரூபாய் 4113 கோடியும் கடன் பெற்று மூலதனப் பணிகளைத்தான் இவ்வரசு மேற்கொண்டுள்ளது. எனவே பொறுப்போடுதான் கடனைப் பெற்று இந்த அரசு மூலதனப் பணிகளுக்காக செலவு செய்து வருகிறது.

 ஒரு மாநிலம் செலுத்துகின்ற கடன் மீதான வட்டித்தொகை, அதன் மொத்த வருவாயில் 15 சதவீதத்திற்குக் குறைவாகவே இருக்க வேண்டும். கடந்த 2005 2006 ம் ஆண்டில், அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில் மொத்த வரி வருவாயில் செலுத்தப்பட்ட வட்டியின் சதவீதம் 13.42 ஆகும். ஆனால் 2010 2011 ம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியிலே மொத்த வரி வருவாயில் செலுத்தப்படும் வட்டியின் சதவீதம் 11.15 ஆக குறைந்துள்ளது. இதிலிருந்து தமிழ் நாட்டினுடைய நிதி நிலைமை 2005 2006 ம் ஆண்டினைக் காட்டிலும் தற்போது திருப்திகரமாகவே உள்ளது என்பதை  பய'டேட்டா செந்தில் புரிந்து கொள்ளலாம்.
கடன் பொறுப்புகள் அதிகரித்துள்ள போதிலும், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும் நிலையிலேயே தமிழ்நாடு உள்ளது.இதற்காக கலைஞர் தாத்தாவோ அல்லது செந்திலின் தாத்தாவோ கடனை அடைக்க வேண்டாம்.

அடுத்து உபரி என்பது வருவாய் தனி. சிறப்பாக செயல்படுகின்ற மாநில அரசு வருவாய் உபரி நிலையை எட்ட வேண்டும். அதாவது வருகின்ற வரி வருவாயில், வருவாய் செலவினம் போக உபரி நிதியை மாநில அரசுகள் திரட்ட வேண்டும். அதற்கு மேல் செய்யப்படுகின்ற மூலதனச் செலவுகளுக்கு, மாநில அரசுகள் கடன் பெறுவது அவசியம் ஆகிறது. இது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொள்கையாகும். இவ்வாறு கடன் பெறுவது வளர்ச்சித் திட்டங்களுக்காக இருக்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட அளவுக்குள் நிதிப் பற்றாக்குறை இருப்பதில் தவறில்லை.
தி.மு.கழக அரசு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகின்ற அதே நேரத்தில், சமூகப் பொருளாதார கட்டமைப்புகளையும், திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறது. கல்வி, சுகாதாரம் ஆகிய சமூகக் கட்டமைப்புகளை உருவாக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் சமூகக் குறியீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் 2005 2006 ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் 3.81 சதவீதமாக இருந்தது, 2009 2010 ல் கழக ஆட்சியில் 1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இடைநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அ.தி.மு.க. ஆட்சியில் 7.58 சதவீதமாக இருந்தது, 2009 2010 ல் 1.79 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2005 2006 ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 802. 2010 2011 ல் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 9 ஆயிரத்து 421. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் மகப்பேறு கடந்த ஐந்தாண்டுகளில் 277 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே கால கட்டத்தில் குழந்தை பிறப்பு விகிதம் 1000 க்கு 37 லிருந்து 31 ஆகவும் பேறு காலத்தில் பெண்கள் இறப்பு விகிதம் லட்சத்திற்கு 111 லிருந்து 79 ஆகவும் குறைந்துள்ளது.
569 புதிய பள்ளிகள் 168 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 12 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 12 புதிய பொறியியல் கல்லூரிகள் 6 புதிய மருத்துவக்கல்லுநுரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதிதாக 5 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 5 மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க 2,568 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரக் கட்டமைப்புகளான சாலைகள், பாசனம், போக்குவரத்து, குடிநீர் போன்ற எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் சாலை மற்றும் பாலங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 14 ஆயிரத்து 748 கோடி ரூபாய். பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக செலவிடப்பட்ட தொகை 2 ஆயிரத்து 822 கோடி ரூபாய். தென்னகநதிகளை இணைக்கும் திட்டத்தின்கீழ் கட்டளைக் கதவணை, தாமிரபரணி நம்பியாறு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து கட்டமைப்புகளுக்காக 1 ஆயிரத்து 440 கோடி ரூபாய் இந்த ஐந்தாண்டுகளில் செலவிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் ரயில் போக்குவரத்துத் திட்டம் இந்த அரசு தொடங்கியுள்ள ஒரு மகத்தான திட்டம். குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக கடந்த ஐந்தாண்டுகளில் செலவிடப்பட்ட தொகை 3 ஆயிரத்து 320 கோடி ரூபாயாகும். இந்த அரசால் 616 கோடியில் முடிக்கப்பட்ட மிகப் பெரிய கூட்டுக் குடிநீர் திட்டமான இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 1929 கோடி ரூபாய் செலவில் வேகமாக நடைபெற்று வருகிறது. வளர்ச்சித் திட்டங்கள் எதையும் இந்த அரசு புறக்கணிக்கவில்லை.

அடுத்து செந்திலு சமூக திட்டங்கள் பத்தி பாரு.  2006 2007 முதல் 2010 2011 வரை முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக தி.மு.கழக அரசில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை 61 ஆயிரத்து 727 கோடி ரூபாய். இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை 20 ஆயிரத்து 304 கோடி ரூபாய்.

செந்திலு, 2011 2012 ம் ஆண்டிற்கு இலவச காங்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்திற்காக 3 ஆயிரத்து 497 கோடி ரூபாயும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் போன்றவற்றுக்காக 1 ஆயிரத்து 106 கோடி ரூபாயும் கல்வி உதவித் தொகை, இலவச சைக்கிள், இலவசபுத்தகம் போன்ற திட்டங்களுக்காக 6 ஆயிரத்து 73 கோடி ரூபாயும் முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்திற்காக 1 ஆயிரத்து 471 கோடி ரூபாயும் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித் திட்டத்திற்காக 247 கோடி ரூபாயும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி போன்ற பல்வேறு திட்டங்களுக்கும், சத்துணவு போன்ற நலத் திட்டங்களுக்கும் சேர்த்து 495 கோடி ரூபாயும், வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் போன்ற வைகளுக்காக 860 கோடி ரூபாயும் என்ற வகையில் 20 ஆயிரத்து 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செந்திலு, இதான் தமிழ்நாட்டின் கடன் நிலவரம். ஆனா கேரளாவிலே அதாவது கேரளாவிலே  சிவப்பு சட்டைக்காரன் ஆட்சியிலே ஒரே கலவரம். அதையும் பார் இங்கே.
அங்கே உள்நாட்டுக் கடன், சிறு சேமிப்புகள் மற்றும் வருங்கால வைப்புநிதி மற்றும் மத்திய அரசிடமிருந்து கடன்கள் மற்றும் முன்பணங்கள் உள்ளடக்கிய கேரளாவின் ஒட்டுமொத்தக் கடன், 1999 2000 ம் ஆண்டு ரூ.20,176 கோடியிலிருந்து 2004 05 ம் ஆண்டில் ரூ.41,878 கோடியாகவும், 2009 2010 ம் ஆண்டு ரூ.70,969 கோடியாகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதுவும் ஏறத்தாழ 3.4 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு மாநிலத்தில் 2010 2011 ம் ஆண்டுக்கான பட்ஜெட் உத்தேச மதிப்பீடுகளில் கடன் தொகை கவலை அளிக்கும் அளவுக்கு ரூ.78,329 கோடி என்று காட்டப்பட்டுள்ளது.


சில ஆண்டுகளாக கேரளாவின் தனிநபர் கடனளவு மிகப் பெரும்பாலான இதர மாநிலங்களைவிட மிக அதிகமாகவும் தேசிய சராசரிக்கு மேலும் உள்ளது. 2008 ம் ஆண்டில் கேரளாவின் தனிநபர் கடனளவு ரூ.16,074. அதே ஆண்டில் ஆந்திராவில் ரூ.9,991, தமிழ்நாட்டில் ரூ.9,692, கர்நாடகாவில் ரூ.8,901, அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.10,018 ஆகவும் தனிநபர் கடனளவு இருந்தது.

இப்பவாச்சும் என்ன நடக்குது நாட்டிலேன்னு புரிஞ்சுக்க செந்திலு. உனக்கு பதில் சொல்லி சொல்லியே என் விரல் எல்லாம் வலிக்குது. அதனால மீதி கச்சேரியை அடுத்த பாகத்திலே வச்சுக்கறேன். நீ பேயாம பயடேட்டா போட்டு பிழைப்பை ஓட்டப்பாரு தம்பி. இனி இது போல தலைப்பு வச்சு திமுக பதிவர்களை இழுக்கும் முன்னே பேசும் விஷயங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பேசவும். இல்லாவிட்டால் நீயும் எங்கள் அண்ணன் உண்மைதமிழன், சதீசுகொமாரு மாதிரி காமடிபீஸாக ஆகும் அபாயம் காத்திருக்கு செந்திலு. உனக்கு இரண்டாம் பாகத்தில் மீதிக்கான பதிலை சொல்கிறேன். உன் பதிவில் பின்னூட்டம் இட்ட விஜேஆர், திருச்சி ராஜேஷ் ஆகியோர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.  .....................தொடரும்..............

Monday, 4 April 2011

காமடிப்புயல் விஜயகாந்து! சொல்வது விருச்சிககாந்து!!!


எனக்கு ஒரு விஷயம் மாத்திரம் நன்றாகவே தெரியும். அதாவது  இந்த வார ஜூனியர் விகடனில் விஜயகாந்து அவர் தனது வேட்பாளரை அடிக்கும் காட்சி பற்றி என் கோடம்பாக்கம் சகாக்கள் கூட " விஜய்காந்து கொசு அடித்தார் அதை நயவஞ்சக டிவிக்கள் மாற்றி போட்டது"  என சொல்லும் என சொன்னேன். ஆனால் அவர்கள் என்னை விட பல மடங்கு புத்திசாலிகள். அங்கே ஏதோ மைக் சரியில்லையாம், அதை சரி செய்தா ராம். போகட்டும். அது மைக்காகவே இருந்தாலும் கூட இப்படியா சரி செய்வாரு?

அது நமது கேள்வி அல்ல. ஆனால் ஜூனியர் விகடன் சேலம் மாநாட்டில் விஜயகாந்து குடித்து விட்டு உளறியதை சொல்லவே இல்லை. ரிப்போர்டர் சொல்லவே இல்லை. ஆனால் நக்கீரன் கூட இலை மறைவு காய் மறைவாக சொன்னது. ஏனனில் ஒரு கட்சி தலைவரை இப்படி எல்லாம் திடீரென சொல்லலாமா என்கிற பயம். ஆனால் அதை முதலில் உடைத்தது வடிவேல் என்கிற எங்கள் கதாநாயகன். இன்று காமடியனாகிப்போன விஜயகாந்தின் முகத்திரையை கிழித்த கதாநாயகன். இன்று சொல்கிறான் ( இனி குடிகாரனுக்கு ர் விகுதி அதிகம்) "அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஜெயிலில் இருக்கின்றது.. அய்யோ நான் உளறுகின்றேனா?  சாரி ராஜா ஜெயிலில் இருக்காரு.. அட போங்கப்பா" இது விஜயகாந்த்.  ஆக விஜயகாந்தின் நடுநிலை ஓட்டு என்பது சைபருக்கு வந்தாகிவிட்டது.

ஆக செத்த பாம்பை அடிப்பது திமுக வீரனுக்கு அழகில்லை. ஆனால் வழக்கம் போல உயிர் பாம்பு இரண்டு ஓடுது. அதாவது  ஆர் கே சதீஷ் குமார் பாம்பு, அது இன்னும் உயிரோடு இருக்கின்றது.அடுத்து உண்மை தமிழன். அதாவது என் அண்ணன் உண்மை தமிழன் பற்றி இப்போது எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். அவருக்கு யார் நல்லா இருந்தாலும் பிடிக்காது. இந்தியா ஜெயித்தாலும் பிடிக்காது. காரணம் அவர் வாழ்கையில் தோல்வி அடைந்தவர். தவிர அவர் மன உளைச்சல் அப்படி. யாராவது நன்றாக இருந்தால் குமுறி குமுறி அழுவார். அவரை விட்டு விடலாம்.

ஆனால் சதீசு குமாரு, சன் டிவில விஜய்காந்து குடித்து விட்டு உளறியதை தப்பா சொல்லிட்டாங்களம், அதுக்காக ஒரே அழுகை. அடப்பாவி! அதான் அவனே ஒத்து கிட்டானே, அவன் பொண்டாட்டி கட்டின பாவத்துகாக அதை ஒத்துக்கலை, ஜூவியின் பாலுவின் பையன் கொஞ்சம் ஷோக்காலி பேர்வழி, விஜய்காந்து கிட்டே கொஞ்சம் அப்படி இப்படி தான் இருப்பான், அதிலும் சினிமா பேர்வழின்னா அதிகமா கூட வழிவான். உனக்கு என்னடா ஆச்சு சதீசு?

நான் இதனால என்ன சொல்ல வர்ரேன்னா, திமுக பதிவர்கள், இனி விஜயகாந்தை பத்தி ரொம்ப அலட்டிக்க வேண்டாம். ஏன்னா லாலு பிரசாத் மேடைக்கு பின்னால வழிச்சுகிட்டு உச்சா போவதை முதலில் விஷயமா பேசினாங்க மக்கள், பின்னர், அவரு இப்படித்தான்னு சொல்லிட்டாங்க. அது போல மூப்பனார் பான்பராக் போடுவதை கூட சொல்லி பார்த்தாங்க. பின்னர் அவரு இப்படித்தான்னு விட்டுட்டாங்க. அது போல இவன் குடிப்பதை "இவன் இப்படித்தான்"ன்னு விட்டுடும் அளவுக்கு செஞ்சுடாதீங்க.

அப்படியே விடுங்க. மக்கள் பார்த்து கொண்டு இருக்காங்க. இத்தோடு விட்டால்  மீதியை அவங்க பார்த்துப்பாங்க. இனி தைரியமா ஜெ அம்மையார்  பற்றி பேசலாம். நான் அதிக பட்ச ஷூட்டிங் இருந்ததால் இங்கே வர முடியவில்லை. இனி வருவேன்.. மீண்டும் பார்ப்போம்..

Sunday, 27 March 2011

திமுகவில் காமடியன் கூட ஹீரோ, அதிமுகவில் ஹீரோக்கள் கூட காமடியன்கள்....



திமுக, அதன் தலைவர் கலைஞர் இவர்களிடம் கூட்டணி வைத்து கொள்ளும் கூட்டணிக்கட்சியினருக்கு கிடைக்கும் மரியாதைகளும் மதிப்புகளும் எல்லோருக்கும் நன்கு புரியும். ஆனால் அதே போல அதிமுகவில் கூட்டணி அமைத்தவர்களின் கதி என்ன என்று நினைத்துப்பாருங்கள். முதலில் அதிமுகவில் காமடியன்கள் ஆன ஹீரோக்கள்  பற்றிய ஒரு பார்வை.

கார்த்திக்: இவர் சினிமா உலகில் கொடிகட்டி பறந்தவர் இவருடைய தந்தை முத்துராமனைப்போலவே. கள்ளர் இனத்தை சேர்ந்தவராயினும் முத்துராமன் இவர் அளவுக்கு அரசியலில் ஈடுபாடோ, ஆர்வமோ, சாதிப்பற்றோ கொண்டிருக்கவில்லை. அதே போலத்தான் கார்த்திக்கும் இருந்தார். அதே நேரத்தில் தன்னுடைய சில பல கெட்ட பழக்கங்களினால் இவர் சினிமாவை விட்டு தொலைந்து போக இருந்த நேரத்தில் அவரது சாதிபலம் கொஞ்சம் தெம்பை கொடுக்க இவர் திடீரென, நேதாஜி ஆரம்பித்த பார்வர்டு பிளாக் கட்சியை தமிழகத்தில் வேறூன்ற செய்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் இன ஆதரவோடு அந்த கட்சியில் மாநில தலைவராக ஆக்கப்பட்டு திடீரென உயர்ந்தார். ஆனால் அவர் கொடுத்த பத்திரிக்கை பேட்டிகளும் அவரது நடையுடை பாவனைகளும், கட்சி தலைவராக இருப்பதற்கான எந்த ஒரு தகுதியற்ற தனமையை கொடுத்தாலும் அவரது சாதி மக்கள் தங்களுக்கு என ஒரு யாவரும் அறிந்த தலைவர் வேண்டும் என்கிற ஒரே காரணத்தால் சகித்து கொண்டனர். சென்ற முறை அவர் தொகுதி பங்கீடுக்கு ஜெவுடன் பேசிவிட்டு பின்னர் வந்து (அவருடைய வாய்ஸ் மாடுலேஷனில் படிக்கவும்) "என்னது அந்தம்மா, ஸ்டுபிட், கெட்லாஸ்ட்ன்னு எல்லாம் கத்துறாங்க. இட்ஸ் டூ பேட்" என சொல்லி வெளியே வந்தது முதல் அவர் காமடியனாக ஆக்கப்பட்டார். அதற்கு தகுந்தது போலவே ஜூவியும் ரிப்போர்டரும் அவரை ஊதி ஊதி பெரியதாக்கி அவர் காமடி பேட்டிகளை வாங்கி பிரசுரித்து அவரை ஒரு கீழ்தரமான இடத்துக்கு கொண்டு சென்றன. அதே போல இந்த முறையும் " வாட் ஈஸ் திஸ். நாங்க தினமும் போய் காலை முதல் மாலை சாயங்காலம் வரை வெயிட் பண்ணிகிட்டு இருந்தும் அந்தம்மா எங்களை வந்து கூட பார்க்கலை. இதல்லாம் நல்லால்லை. மானம் வெட்கம் இருந்தா அடுத்த தேர்தல் வரை அங்க நான் போகமாட்டேன்" என பேட்டி கொடுத்து முழுநேர காமடியன் ஆனார்.

விஜய்: இவர் நடித்த சமீபத்திய படங்கள் எதுவுமே ஓடவில்லை என்பதோடு மட்டுமல்ல இணையத்தில் இவரை போல ஒரு கைப்புள்ளயை இது வரை யாரும் பார்த்ததில்லை என்கிற அளவுக்கு இவர் காமடியன். அத்தோடு விட்டாரா? காவலன் படம் வெளியாவதில் சிக்கல் இருந்ததாம். உடனே அவருடைய அப்பாவுக்கு ரத்தம் கொதித்து உடனே தன் மகனின் ரசிககுஞ்சுகளை கூப்பிட்டு அரசியல் ஆசைகாட்டி விஜய்க்கும் ஆசை காட்டி... அது வரை நன்றாகத்தான் போய்கொண்டு இருந்தது. ஆனால் அதன் பிறகு சந்திரசேக்ர் ஜெவை பார்த்து விட்டு வந்தது முதல் தான் விஜய் காமடியனாக ஆனார். பதினைந்து சீட், பத்து சீட் கடைசியாக 3 சீட் என்றெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் எதும் இல்லை சும்மா நீங்க வந்து ஊராவூருக்கு பிரச்சாரம் செய்தால் போதும் என்கிற நிலைக்கு விஜய் தள்ளப்பட்டு இன்று விஜய் பெயரை கேட்டாலே வயிற்றில் இருக்கும் பிள்ளை கூட சிரிக்கும் அளவு காமடியனாக ஆகிப்போனார். நடுவே நாகையில் மீனவர்களை காப்பாற்ற ஒரு மீட்டிங் போட்டு அது சொதப்பி அவர் மைக் சரியில்லை என்று பாதியிலே கிளம்பி போய் திரும்பவும் சந்திரசேகர் மைக்கை சரி செய்து ஓடிப்போய் கூப்பிட்டு வந்து ஒரு வழியாக மீனவர் பிரச்சினை தீர்ந்தது. இதோ இன்று மீனவர்கள் செல்வ செழிப்புடன் மாடமாளிகையுடன் சர்வ சவுக்கியமாக இருக்கின்றனர் என்பதை அறிந்து தமிழக மக்கள் தங்கள் வீட்டில் விஜய் என்று ஏதாவது குழந்தைக்கு பெயர் இருந்தால் கூட அழித்து விட்டு மாற்றிக்கொண்டு இருக்கின்றனர். காரணம் இவர் ஜெயாவை சந்தித்ததன் விளைவு இதல்லாம். இன்று தமிழக அரசியலில் மிகச்சிறந்த காமடியன் ரேசில் இவருக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.

ராமராஜன்: இவருக்கு கரகாட்டகாரனில் ஆரம்பித்த சுக்கிரதெசை அவர் ஜெ கட்சியில் சேரும் வரை இருந்தது. பின்னர் தான் நிரந்தர சனி பிடித்தது அவருக்கு. ஜெ அதிமுகவுக்கு எப்படி நிரந்தர பொதுச்செயலாளரோ அது போல சனிபகவான் ராமராஜன் கூட நிரந்தரமாக ஒண்டு குடித்தனம் நடத்திக்கொண்டு இருக்கின்றார். சோத்துக்கே சிங்கி அடிப்பதாக ஒரு பத்திரிக்கை கூட பேட்டி எடுத்து எழுதியது. இவரைப்போல கதாநாயகனும் இல்லை. இவரைப்போல காமடியனும் அரசியலில் இல்லை. இப்போது பிரச்சாரத்துக்கு போக முடியாத படி ஒரு சாலை விபத்தில் மாட்டி கொண்டு விட்டார். இல்லாவிடில் இவர் பிரச்சாரத்தினால் 234 தொகுதியிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். (என்று நினைத்து கொண்டிருக்கின்றார்.. அப்படியெனில் அவர் காமடியனா அல்லது கதாநாயகனா?

விஜய்காந்த்: இவர் ஆரம்பத்தில் சும்மா தான் இருந்தார். பின்னர் திரைப்பட சங்கத்து செயலாளர் பொறுப்பு வந்ததும் ஏகப்பட்ட கட்ட பஞ்சாயத்துகள் இவரிடம் வர அந்த தலைமை போதை தலைக்கேற சுற்றி இருப்பவர்கள் இவருக்கு முதல்வர் ஆசையை தூண்டிவிட அந்த நேரத்தில் ரமணா படம் நல்ல கதையம்சத்துடன் வெற்றியும் கொடுக்க இவருக்கு அரசியல் ஆசை வந்து தொலைத்தது. காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தது போல நெடுஞ்சாலைத்துறையும் ஒரு மேம்பாலத்துக்கு இவருடைய திருமண மண்டபத்தில் கைவைக்க உடனே கட்சி ஆரம்பித்து விட்டார்.

அதிலே அவரது ஆரம்பகால நிலைப்பாடுகள் என்னவோ நன்றாகத்தான் இருந்த்து என்றாலும் பின்னர் விருத்தாசலத்திலே அவர் நின்று வென்று அதன் பின்னர் நடந்தவைகள் தான் அவரை காமடியன் ஆக்கின. அவரது புத்திசாலித்தன்மே அவர் பாமக கோட்டை என கருத்தப்பட்ட விருந்தாசலத்தின் நின்றது தான். அப்போது டாக்டர் அய்யா தனது சாதி ஓட்டின் மீது கொண்ட அதீத நம்பிக்கை மக்களுக்கு குறிப்பாக அந்த பகுதியில் வசித்த மாற்று சாதி மக்களுக்கு ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தின. வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்கிற அந்த கோஷத்தை அப்பகுதி மக்கள் தீவிரமாக எதிர்த்தனர். அப்போது அதன் மாற்றாக திமுகவை விட ஒரு நடுநிலையாளருக்கு ஓட்டு போட்டால் என்ன என்கிற மனோநிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த் ஒரே காரணத்தால் மட்டுமே விஜயகாந்த் அங்கே வெற்றி பெற முடிந்தது. அந்த வெற்றிக்கு பின்னர் தான் அந்த கட்சிக்கு "தொண்டர்கள்" பெருகினர். அதாவது அது வரை அவருக்கு ஓட்டளித்த நடுநிலையாளர்கள், ரசிகர்கள் தவிர்த்து "தொண்டர்கள்" என்பவர்கள் புதிகாக வந்து சேர்ந்தனர். அவர்களின் குறி கட்சி பத்வியின் மேல் நின்றது. வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் என்கிற மாதிரி விஜயகாந்து நடவடிக்கைகளும் ஆகின. குடித்து விட்டு சட்டமன்றம் வந்து பிரச்சனை ஆகியது. வ்டிவேலு கிரி படத்தில் "அக்காவை நீ வச்சுக்கோ, பேக்கரியை நான் வச்சுக்கறேன்" என்கிற மட்டமான ரசனையுடைய காமடி காட்சி உள்ள படத்தில் கடைசியில் ஒரு கலக்டர் சொல்லுவார் "நேற்று கூட உன்னை பற்றி தான் கலக்டர் மீட்டிங்ல பேச்சு வந்தது" என்று. அதற்கு வடிவேலு " அடச்சே.. இதல்லாமா கலக்டர் மிட்டிங்ல பேசுவீங்க" என கேட்பார். அது போல ஒரு எம் எல் ஏ குடித்துவிட்டு வருவதும், ஒரு முன்னாள் முதல்வர் அதை சொல்லி திட்டுவதும் அதற்கு பதிலாக இவர் " நீ பக்கத்தில் இருந்து ஊத்தி கொடுத்தியா" என கேட்டதும், ரவிக்குமார், செல்வபெருந்தகை போன்ற விசி கட்சி எம் எல் ஏக்கள் பக்கத்தில் உட்காருபவர்கள் போய் முதல்வரிடம் அது உண்மை என சொல்வதும்... இதல்லாம் விஜயகாந்தை அரசியலுக்கு லாயக்கு இல்லாத ஒரு  காமடியன் ஆக்கிய ஆரம்ப கட்டங்கள்.

அதன் பிறகு இவர் தன் கட்சி சேலத்து மாநாட்டில் நிற்க முடியாமல், பேசியதையே திரும்ப திரும்ப பேசியதும், தடுமாறியதும், எனக்கு நாக்கு குழரும் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததும் பத்திரிக்கைகளால் மறைக்கப்பட்டாலும், அதாவது அப்போது ஜெவுடன் எப்படியாவது விஜயகாந்தை கூட்டணி சேர்த்துவிட வேண்டும் என்கிற ஆசைப்பட்ட பத்திரிக்கைகள் அதை மறைத்ததும் ஆனாலும் கேப்டன் டிவியின் நேரடி ஒளிபரப்பில் மக்கள் அதை பார்த்ததும் எல்லாமே நட்ந்தன. அப்போதும் திமுக போன்ற கட்சிகள் வாய்மூடி மௌனமாக இருந்தன.


அதன் பின்னர் ஜெவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது ஜெவுக்கு சமமான அகங்காரத்தை விஜயகாந்து வெளிப்படுத்திய போதும், 40 சீட்டுக்கு நான் கட்சியை அடமானம் வைக்க மாட்டேன் என சொல்லிவிட்டு 41 சீட்டு வாங்கி கொண்டதையும், அதன் முன்னர் "விஜயகாந்து ரோசக்காரர், மானம் உள்ளவர் ஜெவுடன் கூட்டணி வைக்க மாட்டார்" என அழகிரி அவர்கள் சொன்னதுக்காக அன்றைக்கே போய் அங்கு இறுகிய முகத்துடன் அடக்கமாக உட்காந்ததும், பின்னர் அழகிரியிடம் நிருபர்கள் கேட்டதற்ற்கு அவர் சிம்பிளாக "ஆமாம் சொன்னேன். ஆனால் அவர் தான் ரோசக்காரன் இல்லை, மானம் உடையவன் இல்லை என சொல்லிவிட்டார்" என சொன்னதும், பின்னர் கூட்டணி முறிந்து போன போது என்ன பேசுகிறோம் என தெரியாமல் நிருபர்களிடம் உளறி கொட்டியதும், இப்போது வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடையும் நேரத்தில் ஜெவின் தேர்தல் பிரச்சாரம் திருத்தி வெளியிடப்பட்ட போது அதில் தேமுதிகவின் ஒரு தொகுதியும் இல்லாமையும், அதே நேரத்தில் இவர் ஸ்டாலினை எதிர்த்து மாய்ந்து மாய்ந்து அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்ததையும் மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். இதோ ஜெவின் தந்திரம் பலிக்க போகின்றது. கடந்த் தேர்தல்களில் விஜயகாந்தால் தான் இழந்த தொகுதிகள் அதிகம் என தெரிந்து தன் கூட்டணியில் கொண்டு வந்து கட்டி போட்டு அந்த 41 தொகுதியை தவிர வேறு எதிலும் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் செய்து விட்டு, அந்த 41 தொகுதிகள் போகட்டும் என விட்டு விட்டு மீதியில் தன் கவனத்தை செலுத்த போகின்றார் ஜெ. இப்போது அல்லது இன்னும் இரண்டு நாட்களின் பின்னர் தான் விஜயகாந்துக்கு தான் ஒரு காமடி பீஸ் என்பதே தெரியவரும். கடந்த தேர்தல்களில் வைகோ ஒரளவு நல்ல நிலையில் இருந்த போது ஜெ பேசிய கூட்டத்தில் "வைகோ வாழ்க" என கோஷமிட்ட மதிமுக தொண்டர்களை பார்த்து ஜெ பொறிந்து தள்ளியது இப்போது தான் ஞாபகம் வரும் விஜயகாந்துக்கு... எனவே தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் அடுத்த காமடியனும் ரெடி..இனி விஜய்காந்த் நினைத்தாலும் மூன்றாவது அணி அமைக்க முடியாது, தனித்து நிற்க முடியாது, தனித்து நின்றாலும் அந்த 41 தொகுதி மட்டுமே கிடைக்கும். தான் ஒரு கருப்பு எம்ஜிஆர் என கூட்டத்தில் சொல்லிக்கொள்ள முடியாது. அடுத்த முதல்வர் என்றோ முதல்வர் வேட்பாளர் என்றோ சொல்லிக்கொள்ள முடியவே முடியாது...

அடுத்து திமுக கூட்டணியில் பார்ப்போம். இங்கு வடிவேலு என்னும் காமடியன் முதல் தேர்தல் கூட்டத்தில் திமுக தலைவர், பொருளாளர், தென்மண்டல அமைப்பு செயலாளர் உட்பட கூட்டணி கட்சிகளின் அனைத்து தலைவர்கள் உட்பட முக்கியமாக நடிகர்களை எதிர்க்கும் பாமக தலைவர், விசி தலைவர் உட்பட அனைவரின் முன்பாக பேச ஆரம்பிக்கின்றார். இது அவருக்கு அரசியல் மேடையின் முதல் கன்னிப்பேச்சு.

அவர் பேசிய மாடுலேஷன், தொணி எல்லாவற்றையும் விட்டு விடலாம். அது எல்லாம் போகப்போக சரியாகும். ஆனால் பேசிய விஷயம் என்ன? அத்தனை தலைவர்கள் முன்னிலையில் விஜயகாந்தின் குடிப்பழக்கத்தை ஆரம்பித்து பேச போகின்றார் என்பது திமுக தலைமைக்கு தெரியாமல் இருந்திருக்குமா? அல்லது திமுக தலைமையே சொல்லித்தான் அதை பேசியிருப்பாரா? இரண்டில் ஒன்று தான் நடந்திருக்கும். அதாவது "தான் நல்லவன் தனக்கு ஓட்டு போடவும் என கூறி மக்களை ஏமாற்றி  இது நாள் வரை தன்னை பற்றி ஒரு புனிதபிம்பத்தை காட்டிக்கொண்டு இருந்த விஜயகாந்தின் முகத்திரையை முதலில் கிழிக்க வேண்டும். அது யாரால் முதலில் கிழிக்கப்பட வேண்டும்? திமுகவினரோ, அலது விசி, பாமக போன்றவர்களோ பேச முற்பட கூடாது. அவர்கள் ஒன்றும் அதிமுக தலைவி மாதிரி அவசர குடுக்கை இல்லை. அப்படி சொன்னால் "நீ வந்து ஊத்தி கொடுத்தாயா?" என ஜெ மூக்கறு பட்ட மாதிரி ஆகும். அதனால் வடிவேலுவை விட்டே பேச சொன்னால் விஜயகாந்து அப்படி அந்த கேள்வியை கேட்டால் ஆமாம் நான் ஊத்தி கொடுத்தேன் என பதிலடியும் கிடைக்கும். ஏனனில் அவரும் இவரும் பலபடங்கள் ஒன்றாக நடித்துள்ளனர். அவருடைய அத்தனை கோக்குமாக்குகளும் இவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கின்றது. முதல் கல் எறிவது தான் சிரமம். பின்னர் அடுத்த கல்லை மற்றவர்கள் பார்த்து கொள்வர். ஆக அன்று பேசிய அத்தனை பேரின் பேச்சில் வடிவேலுவின் பேச்சு அடிமட்ட வாக்காளனுக்கும் போய் சேர்ந்தது என்பது உண்மையோ உண்மை. இதை யாராவது இல்லை என்று சொல்ல முடியுமா? அது வடிவேலுவாக இருந்தால் என்ன விருச்சிககாந்தாக இருந்தால் என்ன, விஷயம் போய் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தாகி விட்டது. சேர்த்தாகிவிட்டது. அடுத்த நாளே திருமா திருச்சியில் அதை தொட்டு பேசுகின்றார். இனி திமுகவின் பேச்சாளர்கள் திரும்ப திரும்ப அந்த குடிகார கதையை பேசுவர்.

நான் இப்போது இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று தான். குடிப்பது தவறா? யார் தான் குடிக்கவில்லை? தனிப்பட்ட ஒழுக்கத்தை பற்றி பேசினால் சரியா? இந்த விவாதம் எல்லாவற்றுக்கும் ஒரே பதில் தான். விஜயகாந்து தன் வீட்டில் குடித்து விட்டு தூங்கினால் யார் கேட்க போகின்றனர். அவரை நம்பி இருக்கும் அவரது தொண்டர்கள் மத்தியில் மேடையில் தள்ளாடுவது தவறு என்பதே இங்கு வைக்கபடும் வாதம். குடித்து விட்டு மக்கள் மன்றத்தில் வந்து சபை நாகரீகம் தெரியாமல் உட்காருவது பேசுவது தவறு. குடித்து விட்டு உளருவது மிகப்பெரிய தவறு. இதைத்தான் திமுக எதிர்கின்றது. இதோ ஜெயலலிதா குடிப்பார் என்பது ஊரே அறிந்த விஷயம். இது வரை அந்தம்மா சிவந்த கண்களுடன், கலைந்த தலையுடன் தன்னை காட்டிக்கொண்டது உண்டா? பொதுவெளியில் எப்படி நடந்து கொள்கின்றது. ஜெ குடிப்பார் என எவனாவது பேசினால் மானநஷ்ட வழக்கு போடும். தன் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக சொல்லும். ஆனால் ஜெவை பார்த்து ஊத்தி கொடுத்தாயா என்று மடக்கிய விஜயகாந்தால் வடிவேலு பேச்சுக்கு "அவர் பேச்சுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல போவது இல்லை" என்கிற சப்பைகட்டு தான் கட்ட முடிகின்றது. இதைத்தான் சொன்னேன். திமுக அணியில் காமடியனும் ஹீரோ தான். அதிமுக அணியில் ஹீரோவும் காமடியன் தான் என்று.



இந்த நேரத்தில் மற்றும் ஒன்று கூட சொல்ல வேண்டும். திமுகவில் இருக்கும் குமரிமுத்து, அதிமுகவில் இருக்கும் குண்டு கல்யாணம் ஆகியோரை பற்றி ஏன் திமுகவில் இருக்கும் விருச்சிககாந்து ஆகிய என்னை பற்றியும் நான் எதும் சொல்லவில்லை. நாங்கள் வயிற்று பிழைப்புக்காக காமடியன்கள் ஆகியிருக்கின்றோம். அது கூட மக்களின் ஒரு விதமான வக்கிர புத்தி என்று தான் சொல்லவேண்டும். குமரிமுத்துவுக்கு ஒரு கண் சரியில்லை. அதை பார்த்து சிரிக்கும் மக்கள், அதே போல குண்டுகல்யாணம் உருவம் யானை போல பெரிது. அதை பார்த்து சிரிக்கும் மக்கள், எனக்கு பலெடுப்பு, அழகில்லாதவன், கருப்பு இன்ன பிற குறைகள்... இவையெல்லாம் பார்த்து சிரிக்கும் மக்கள் வக்கிர புத்தி படைத்தவர்கள் தானே? கண்டிபபக நாங்கள் மூவரும் நகைச்சுவை நடிப்பில் தேர்ந்தவர்கள் என சொல்லவே முடியாது. முடியவே முடியாது. ஆனால் அண்ணன் குமரி முத்துவின் மேடைப்பேச்சை கேளுங்கள், அண்ணன் குண்டு கல்யாணத்தின் மேடைப்பேச்சை கேளுங்கள், மழை பொழிந்தது போல பேசி ஆனால்  கூட்டத்தை கட்டிப்போடும் அரசியல் தெரிந்தவர்கள். இவர்களை நடிகர்களாக பார்க்காமல் அரசியவாதிகளாக பாருங்கள் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.

Friday, 25 March 2011

ராஜபக்ஷே கோஷ்டிக்கும் சீட் கிடைத்தது. வாழ்க காங்கிரஸ்!




சீமான் என்னும் வெத்துவேட்டு "நான் காங்கிரசசை ஒழிப்பேன்" என முழங்கிய போது கூட நன்கு அரசியல் தெரிந்தவர்கள் "காங்கிரசை ஒழிக்க நீ யாரடா?" என சத்தமிட்டனர். ஆனா சத்தம் போடாமல் மனதின் உள்ளே சொன்ன வாக்கியம் "அதை காங்கிரசே பார்த்துக்கொள்ளும்". இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் கலைஞர் 60 சீட் போதும். உங்களுக்கு எத்தனை கொடுத்தாலும் அதை பிரித்து எடுத்துக்கொள்ள கூட தெரியாது என்று சொல்லிப்பார்த்தார். கேட்டால் தானே? சின்ன பசங்களுக்கு பஞ்சு மிட்டாய் கேட்டால் ஒன்று வாங்கி தரலாம். பத்து கேட்டால் என்ன செய்வது? வயிற்றை வலிக்கும் என சொன்னால் கேட்க வேண்டும். கேட்கவில்லை. தின்றுவிட்டு வயிற்றை வலித்தால் வலிக்கட்டும் என விட்டு விட்டார். அவர் சொன்னது போலவே 60 தொகுதிக்கும் ஆள் கிடைத்து வேட்பாளர் அறிவித்தாகியும் விட்டது. இதோ நாளைக்கு கடைசி நாள். மீதி மூன்று இடத்துக்கு இப்போது தான் அறிவிக்கப்பட்டது.

காங்கிரசில் இருக்கும் கோஷ்ட்டிகளில் பெரிய கோஷ்டி வாசன் கோஷ்டி தான். ஆனால் ராகுல் இப்போது ஆரம்பித்து வைத்திருக்கும் புதிய கோஷ்டிக்கும் இந்த முறை சீட் பங்கு கொடுக்க வேண்டியதாகி விட்டது. போகட்டும் அவர் பெரிய இடத்து பையன். ஆனால் அவர் நினைத்தால் அவரே அந்த 63 வேட்பாளரையும் கூட அறிவிக்கலாம். ஆனால் தன் தகுதி தனக்கு தெரியும் தானே. தான் ஒரு கட்சியின் தலைமைக்கு வர இன்னும் நாள் இருக்கின்றது. அது வரை ஒரு சிறிய கோஷ்டிக்கு தலைவராக இருந்து விட்டு போவோம் என அவர் எண்ணியதில் தவறு எதும் இல்லை.

இதை விட வேதனை என்னவெனில் தமிழக காங்கிரஸில் அவர்கள் கட்சிக்காரர்கள் கோஷ்டி என்பது ஒரு நியாயமான விஷயம் தான். ஆனால் நம்ம தலைவர் கலைஞருக்கும் அங்கே ஒரு கோஷ்டி இருப்பது தான் வேடிக்கை. பீட்டரல்போன்ஸை பொறுப்பாளராக போட்டு இவர் அங்கே ஒரு கோஷ்டி வைத்து அரசியல் நடத்துகின்றார். ஏன் தலைவா உங்களுக்கு இந்த வேலை. நம்ம கட்சியில உங்களுக்கு தான் வானளாவிய பவர் கொடுக்கப்பட்டு இருக்கின்றதே. பின்னர் ஏன் காங்கிரசில் ஒரு கோஷ்டியை தலைமை செயலகத்தில் மீன் வளர்ப்பது போல வளர்கின்றீர்கள். இதோ நீங்கள் செய்த இந்த அக்கிரமத்தால் என்ன ஆனது பாருங்கள். கலைஞரே காங்கிரசில் தன் கோஷ்டிக்கு சீட் கேட்டு வாங்கிகின்றாரே, நான் என்ன இளிச்சவாயனா என நினைத்த பக்கத்து நாடு ராஜபக்ஷேவும் தன் பங்குக்கு ஒரு கோஷ்டி ஆரம்பித்து (அது ஏற்கனவே இருந்த கோஷ்டி தான்) தனது வேட்பாளர் ஹசனலிக்கு ராமநாதபுரத்தில் சீட் வேண்டும் என காங்கிரஸ் தலைமையிடம் கேட்டு வாங்கி விட்டான். இதோ மீதி இருந்த அந்த 3 வேட்பாளர்களில் ஒருவர் ராஜபக்ஷே கோஷ்டி.

எல்லாம் உங்களால் தான் தலைவரே.  நீங்கள் அடுத்தவன் கட்சியில் கோஷ்டி ஆரம்பிக்காவிட்டால் ராஜபக்ஷேவுக்கு இந்த தைரியம் வந்திருக்குமா? ராஜபக்ஷே 1000 கோடி கொடுத்து வைகோவையே ஜெ கூட்டணியில் இருந்து கழட்டி விட்டதாக வைகோவே இப்போது சொல்கின்றார். அந்த மிருகம் உங்களையும் உங்களை நம்பி இருக்கும் எங்களையும் கடிக்கும் முன்னர் ஏதாவது செய்து அதன் கொடுக்கை நறுக்குங்கள்.

ஜெயந்தி தங்கபாலுவுக்கு சீட் கொடுத்தால் மகளிர் காங்கிரஸ் எதிர்க்கும். டாக்டர் நடேசனுக்கு கொடுத்தால் இளைஞர் காங்கிரஸ் எதிர்க்கும். எதிர்த்து வேட்பாளரை நிறுத்தும். இதல்லாம் அங்கே சகஜம். அது போல யாருக்கு கோபம் வந்தாலும் முதல் அடி சத்தியமூர்த்தி பவன் உள்ளே இருக்கும் காந்திக்கு தான். தலைவரே நீங்கள் உங்கள் கோஷ்டியை விட்டு ராஜபக்ஷே கோஷ்டியை எதிர்க்க சொல்லுங்கள். சத்தியமூர்த்தி பவன் வாசலில் காந்தி, காமராசர், சத்தியமூர்த்தி, நேரு என எல்லாருடைய உருவபொம்மைபையும் எரிக்க சொல்லுங்கள். உங்கள் கோஷ்டி தான் பெரிய கோஷ்டி என நிரூபியுங்கள். புறப்படட்டும் உங்கள் கோஷ்டி.எரியட்டும் சத்தியமூர்த்தி பவன்.நீங்கள் உங்கள் கோஷ்டியை அமைதி பூங்காவாக வைத்திருந்தால் அவர்களை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கிவிடக்கூடிய அபாயம் இருப்பதை உணருங்கள். உடனே சத்தியமூர்த்தி பவன் வாட்ச்மேன் மண்டையில் இருந்து ஆரம்பித்து... உங்கள் கோஷ்டிக்கான இடத்தை நிலைநிறுத்திக்கொள்ளுங்கள் காங்கிரசில்.

Tuesday, 22 March 2011

நடத்துங்க நடத்துங்க , எத்தனை தூரம் தான் போவீங்கன்னு பார்க்கிறோம்...



நான் ஒரு கட்டுரை எழுதி இரண்டு நாள் கூட ஆகவில்லை. அதாவது ஜெயலிதா எந்த தப்பு செய்தாலும் அது சசிகலா மற்றும் மன்னார்குடி குடும்பம், மத்த எந்த நல்லது நடந்தாலும் அது ராஜகுருக்கள் செய்தது என்று அவாள் எல்லாம் செய்யும் பரப்புரை. அதற்கு என் அன்பு அண்ணன் உண்மைதமிழனும் உடந்தை என்று. கூட்டணி கட்சிகள் தொகுதியையும் சேர்த்து ஜெ வெளியிடுவாராம் அதற்கு சசிகலாதான் காரணம் என்று சதிகலா என்னும் தலைப்பிட்டு ஜூனியர் விகடன் 3 நாள் முன்பாக எழுதுமாம். இப்படியாக ஜூவி எழுதி எழுதி தான் அதன் வாசகர்கள் முற்றிலும் ஒழிந்து போன நிலையில் உண்மைதமிழன் ஒரு கட்டுரை இப்போது எழுதி கிழித்திருகின்றார். அதாவது..

\\அவரது உற்ற தோழி சசிகலாவின் உறவினர்கள்,  அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை தீர்மானிப்பதில்  ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள் என்றும் நான் நம்புகிறேன்.


எனது நம்பிக்கைக்கு இன்னுமொரு காரணம்.. முதல் பட்டியல் வெளியானதற்கு மறுநாள் காலையில் நான் சந்தித்த ஒரு கார்டன் வட்டாரத்து அரசியல் பிரமுகர், அன்றைய நாளில் என்ன நடந்தது என்று சொன்னார்.


சசிகலாவின் சொந்த பந்தங்கள் அடங்கிய கிச்சன் கேபினட் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலைத் தயார் செய்து ஜெயலலிதாவிடம் கொடுத்துள்ளது. ஜெயலலிதா அதில் இருந்து 70 தொகுதிகளை மட்டும் டிக் செய்து “இந்தப் பட்டியலை மட்டும் வெளியிட்டுவிடுங்கள். மீதியை இன்னும் இரண்டொரு நாட்களில் இரண்டு பட்டியல்களாக வெளியிடலாம்” என்று அங்கேயிருந்த நடராசனின் சகோதரர் ராமச்சந்திரனிடம் சொல்லியுள்ளார்.


அந்த நேரத்தில் அங்கேயிருந்த சசிகலாவின் கிச்சன் கேபினட்டோ “ஒட்டு மொத்தமாகவே ரிலீஸ் செய்துவிடலாம்.. தாமதமானால் நமக்குத்தான் கஷ்டம்..” என்று சொல்லியிருக்கிறார்கள். “கூட்டணிப் பேச்சுவார்த்தையே இன்னும் முடியலையே.. அதுக்குள்ள எப்படி நாம மொத்தமா ரிலீஸ் செய்ய முடியும்..?” என்று கேட்டிருக்கிறார் ஜெயலலிதா.


அப்போது ராமச்சந்திரன் தன் கையில் வைத்திருந்த ஒட்டு மொத்த லிஸ்ட்டை ஜெயலலிதாவிடம் நீட்டி “நீங்க சரின்னு சொன்னீங்கன்னா இதையே வெளியிட்டுவிடலாம். கூட்டணி கட்சிக்காரங்க கேட்டாங்கன்னா சொல்லிக்கலாம். இன்னிக்கு நிலைமைக்கு இதுனால யாரும் நம்ம கூட்டணியைவிட்டு விலக மாட்டாங்க. கடைசி நேரம்ன்றதால நாம கொடுக்குற தொகுதிகளை வாங்கிக்கிட்டுப் போயிருவாங்க..” என்று கூறியிருக்கிறார். இதற்கு கிச்சன் கேபினட்டும் ஒத்து ஊதி பேசியிருக்கிறார்கள்..!


இது தொடர்பான சசிகலா குடும்பம், ஜெயலலிதா பேச்சுவார்த்தையில் முற்றிப் போன கோபத்துடன் தன் கையில் இருந்த 70 தொகுதி பட்டியலையும் வீசியெறிந்துவிட்டு “என்னமோ பண்ணித் தொலைங்க.. டூர் லிஸ்ட் போட்டுட்டு கூப்பிட்டீங்கன்னா வந்து தொலையறேன்” என்று கோபத்துடன் கத்திவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாராம்..!


முன்னரே சொல்லி வைத்திருந்தாற்போல 70 தொகுதி வேட்பாளர் பட்டியலை பெற்றுக் கொள்ள ஜெயா டிவியில் இருந்து ஆட்களும் வந்துவிட.. ராமச்சந்திரன் தானாகவே ஒரு முடிவெடுத்து ஜெயலலிதா டிக் செய்திருந்த 70 தொகுதி வேட்பாளர் பட்டியலை ஒதுக்கிவிட்டு தன் கையில் வைத்திருந்த 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பத்திரிகைகளுக்கு வெளியிடும்படி சொல்லிக் கொடுத்துவிட்டார்.


இதுதான் கார்டனில் அன்றைக்கு நடந்ததாக நான் விசாரித்தவரையில் தெரிந்தது. நான்கூட ஜெயலலிதாவுக்குத் தெரிந்துதான் பட்டியல் வெளியானது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்\\

உண்மை தமிழன் அண்ணே, இதல்லாம் மூன்று நாட்கள் முன்னதாக ஜூவியில் வந்துவிட்டது. ஏன் அண்ணே உனக்கு இந்த வேலை. ஏற்கனவே உனக்கு காபி பேஸ்ட் கந்தசாமின்னு பேர் இருக்கு. இதிலே இப்படி எழுதினா காப்பி அடிக்கும் கந்தசாமின்னு பேர் மாத்திட மாட்டாங்களா? நீ எழுதுவதில் ஒரு கிரியேட்டிவிட்டி இல்லை என்றும் சினிமா விமர்சனம் என்கிற பெயரில் அப்படியே அப்பட்டமாக கதையை எழுதுவதாகவும், எல்லா பேப்பரும் படித்து தொலைந்துவிட்டு அதை உன் டைப்பிங் திறமையால் வேகமாக டைப் அடிக்கின்றாய் என்றும் ஒரு பேச்சு இருக்கின்றது. நான் சொல்வது உண்மையா பொய்யா என நீயே உன்னை கேட்டுக்கொள்.

எங்க டைரக்டர் சொல்வது போல உன் கிட்ட இருந்து இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறேன். இப்ப பாரு இன்றைக்கு வந்த ரிப்போர்ட்டர். ஜெ அந்த லிஸ்ட் விடவில்லை என உன் குருநாதர் "சோ"மாறி ஆசைப்படுவதை நிறைவேற்ற வேறு ஒரு அழகான கோணத்தில் சிந்தித்து எழுதியிருக்கின்றது. ஐ லைக் இட். அதாவது ஜெ அப்பாவியாம். உளவுதுறை தான் எல்லாம் செஞ்சுதாம். ஜெ வெளியிட் சொன்ன லிஸ்ட்டுல 70 பேரோடு சேர்த்து மீதி 90 பேர் கூட்டணி கட்சிக்கு கொடுத்த பெயர்களையும் சேர்த்து ஜெ கையெழுத்தை ஸ்கேன் செஞ்சு அதன் அடியிலே போட்டு அதிமுக லெட்டர் பேடில் ஜெயா டிவிக்கு அனுப்பி அதாவது சைபர் கிரைம் போலீசை வைத்து போயஸ்கார்டன் நம்பர் அதிலே தெரிவது போல செய்து அனுப்பி அதை ஜெயா டிவி வெளியிட்டதாம். இத்தனை செய்யும் உளவுதுறை அதை முதலில் சன் டிவிக்கு அனுப்பி அவங்க வெளியிட்ட பின்ன தான் ஜெயா டிவி வெளியிட்டதாம். இப்படியாக போகின்றது அந்த கதை. தவிர "பக்" என்னும் கருவியை ஜெ ரூம்ல வச்சு ஜெ பேசுவதை எல்லாம் உளவுதுறை ரூம்ல இருந்து ஸ்பீக்கர்ல கேட்கலாமாம். அட... இவனுங்களுக்கே தெரிஞ்ச அந்த பக் இன்னும் அந்த பச்ச குழந்தை ஜெவுக்கு தெரியலையாம். பட் ஐ லைக் இட்.. அந்த கிரியேட்டிவிட்டி எனக்கு புடிச்சு இருக்கு. ஆனா நீ தெரு முனையிலே இருக்கும் டீக்கடைகார்னையே தெரியாத உனக்கு போயஸ்கார்டன்ல இருந்து நியூஸ் வந்துச்சுன்னு புரூடா விட்டு ஜூனியர் விகடன் எழுதியதையே எழுதி தொலைச்சி இருக்கே.

நான் திரும்ப திரும்ப சொல்கின்றேன். உனக்கு அரசியல் வராது விட்டுடு. ஆனா நீ எங்க கேட்க போகின்றாய்?

இந்த பத்திரிக்கை தர்மம் என்பதே செத்து போச்சு. இன்று வந்த நக்கீரனில் கூட பொள்ளாச்சி ஜெயராமன் தன் கையிலேயே அதிமுக தேர்தல் அறிக்கையை வச்சுகிட்டு அலைவதாகவும் அதை இவங்க ஆளுங்க போட்டோ எடுத்து ஜூம் பண்ணி பார்த்து விட்டதாகவும் ஒரு இலவச லிஸ்ட் கொடுத்து இருக்காங்க. அதுவும் தினமலர்ல 2 நாள் முன்னதாக வந்து விட்டது. அதை கூட உன்னைப்போல ஒருவன் சதீஷ்குமாரு காபிபேஸ்ட் அடிச்சுட்டான். அண்ணே உனக்கு சரியான போட்டி அண்ணே அவன். உனக்கு முன்னாலயே காபிபேஸ்ட் அடிக்கிறான். அவன் கதை பெரிய கதை. திமுக அறிக்கையை பார்த்து இதல்லாம் ஒரு பொழைப்பான்னு கட்டுரை எழுதி அது காயும் முன்னமே அதிமுக தேர்தல் அறிக்கை அதிரடின்னு அடிச்சுவிடுறான். அதாவது திமுக செஞ்சா அது இதல்லாம் ஒரு பொழைப்பா? அதுவே அதிமுக செஞ்சா அதிரடி?
 நானே உங்க ரெண்டு பேருக்கும் விளம்பரம் கொடுத்து கொடுத்து கெடுக்கின்றேனோ என வருத்தமாக இருந்தாலும் வேறு வழி இல்லை. நீங்க திருந்தும் வரை நான் இப்படியாக செய்து தான் ஆக வேண்டும்.

Monday, 21 March 2011

உனா தானாவும் அனா வானா வாவன்னாவும்... புரியலைன்னா உள்ள வந்து படிங்க...

அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அண்ணே, இலவசம் வேண்டாம் சரி உங்களுக்கு என்ன தான் வேணும்


பொய் தமிழன் : 24 மணி நேரமும் கரெண்ட் வேணும்


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : நீங்க ஒரு ஜெனரேட்டர் வாங்கி டீசல் போட்டு உங்க வீட்ல வச்சிக்கிட்டா என்ன


பொய் தமிழன் : அதுக்கு நிறைய காசு ஆகுமே


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : எவ்வளவு ஆகும்


பொய் தமிழன் : 2 லைட்டும், ஒரு பேனும் ஓட 3 மணி நேரம் ஜெனரேட்டர் ஓடினா, 10 ரூபாய் ஆகும், ஆனா கரெண்டுனா 3 ரூபா தான் ஆகும்


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அப்ப நீங்க 100 ரூபாய் கொடுத்து வாங்கும் கரெண்ட கவர்மெண்ட் 3 ரூபாய்க்கு தரனும், அதாவது 97 ரூபாய் இலவசமா தரணும். அப்படியா


பொய் தமிழன் :ஆமா


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அது இலவசம் இல்லையா


பொய் தமிழன் : டேய், எனக்கு தேவையானத அரசு தந்தா அது வளர்ச்சி, எனக்கு தேவையில்லை, என்னை விட ஏழைகளுக்கு தேவை யானத தந்தா இலவசம். தெரியுதா


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அண்ணே, இது அநியாயமுன்னா



பொய் தமிழன் : எனக்கும் தெரியும், ஆனா எப்படியாவது கலைஞரை திட்டனுமே. அதுக்குத்தால் இலவசமுன்னு திட்டுறேன்


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : ஏன்னே கலைஞரே திட்டுற


பொய் தமிழன் : அதுவா, கலைஞரை திட்டுனாத்தானே என்ன புத்திசாலின்னு ஒத்துக்குவாங்க

=============================================

அண்ணே உண்மை தமிழன் அண்ணே, நீ புத்திசாலின்னு நினைச்சுகிட்டு இருக்கும் முட்டாள் அண்ணே, இனியாவது அரசியல் பதிவு போடாம எதுனா சினிமா யாரு யாரை வச்சிருந்தாங்கன்னு எழுது அண்ணே, உனக்கு வராததை கட்டிகிட்டு அழுவாத அண்ணே. கலைஞரை திட்டுவதால உனக்கு எதும் கிடைக்க போவது இல்லை அண்ணே. ஜெயா உனக்கு எதும் தள்ளிட மாட்டா அண்ணே. இப்ப வைகோவை பார்த்தியா சீந்த ஆள் இல்லாம கார்த்திக்கும், பிஜேபியும் வாங்க எங்க தலைமையிலே கூட்டணி வச்சுக்கலாம்னு கூப்பிடுறான். போற போக்கை பார்த்தா உன்னை அந்த சதீஷ்குமாரு கூட கழட்டி விட்டுட்டு அவன் தொழிலை கிளிசோசியம் பார்க்க கிளி பொட்டிய தூக்கிகிட்டு போயிடுவான் அண்ணே, நீ இனிமே சினிமா மாத்திரம் எழுது அண்ணே!

இதோ இன்னும் ஒருத்தன் கிளம்பிட்டாண்டா...

சோரம் போன வடிவேலு
இன்று காமெடி நடிகர் வடிவேலு அறிவாலயத்திற்கு சென்று மு க ஸ்டாலின், மு க அழகிரி சந்தித்து தான் தி மு க கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவித்து மாலை, பொன்னாடை போன்ற சம்ப்ரதாய மரியாதைகளை பெற்று கொண்டார். பெட்டியை பின்னர் வாங்கிகொள்வார் என்று நினைக்கிறேன். ஒருவேளை சிங்கமுத்து மீது தன்னை ஏமாற்றி விட்டாதாக கலைஞர் காலை பிடித்து கதறிய பொழுது ஆப் தி ரெகார்ட் ஆக கைமாறிய தொகைக்கு நன்றி விசுவாசமாக இப்போது பிரச்சாரம் செய்வதாகவும் இருக்கலாம்.

இதை நீதான் பக்கத்துல இருந்து பார்த்தியா? அந்த சிங்கமுத்து செஞ்சது எல்லாம் அசிங்க முத்து வேலை. இதுல வடிவேலு கலைஞர் கால்ல விழுந்ததை நீ பார்த்தியா? போடாங்...

\\அதை விட முக்கியமான விஷயம் கேப்டனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு, தகராறு காரணமாகவும் இருக்கலாம். ஒருவேளை தி மு காவோடு கேப்டன் கை கோர்திருந்தால் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பாரா...இல்லை அம்மாவோடு இணைந்து தி மு க கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்திருப்பார தெரியவில்லை\\.

டேய் கேப்டன் கேப்டன்னு சொல்றியலே... அப்பன்னா மேஜர் சுந்தர்ராஜனை மேஜர்ன்னு சொல்லி கட்சி ஆரம்பிக்க வேண்டியது தானே. இதல்லாம் உங்க தப்பில்லை, நம்ம மிலிட்டரி நடவடிக்கை எடுக்காதௌ தான் குத்தம். இவனை கொண்டு போய் பாகிஸ்தான் பார்டர்ல விடனும். அப்ப கூட மிலிட்டரி ரம் இருக்குதான்னு தான் கேட்பான்.

\\பெரியார், காமராசர், அண்ணா, எம் ஜி யாரின் மொத்த உருவமாக தலைவர் கலைஞரை பார்க்கிறாராம் வடிவேல். கருமம் கருமம் இதைவிட ஒரு பெரிய அவமானத்தை இந்த மாபெரும் தலைவர்களுக்கு தந்துவிட முடியாது. வந்தமா, வாயை மூடிட்டு மாலையை, பொன்னாடையை வாங்கிவிட்டு போகவேண்டியது தானே மூதேவி.\\

எலேய் மூதேவி உனக்கு முதல்ல பெரியாரை பத்தி தெரியுமா? அண்ணாவை பத்தி தெரியுமா? பேச வந்துட்டானுங்க...

\\திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என ஒட்டுமொத்த திரையுலகம் இவர்களால் படும் பாடு சொல்ல முடியாத வேதனை. இந்த நிலையில் கர்ண பிரபு, மகராசன் என் சாமி என் கலைஞரை எப்படி இவரால் புகழ முடிகிறது என தெரியவில்லை.\\

ஆமாம்டா உங்க ஜெயா ஆட்சில தானே தியேட்டர் எல்லாம் மூடினீங்க. எல்லாம் குடோனா மாத்துனீங்க. இப்ப கொஞ்சமாவது பொழைச்சு போங்கன்னு எதுனா செஞ்சா உடனே குத்துதா?

\\பிரபலம்னு எவன் வந்தாலும் சரி, அவனுக்கு பட்டுக்குஞ்சம் வைத்து, அலங்கரித்து பிரசாரத்திற்கு அனுப்பிவிட வேண்டியது. அவனுக்கு கழக வரலாறு தெரியுமா..?, தமிழக வரலாறு தெரியுமா..? குறைந்தபட்சம் இன்று மக்களின் மனோ நிலை என்ன..? கடந்த ஆட்சியில் சாதனைகள் என்ற பெயரில் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன..? மனவேதனை என்ன..? எதுவும் தெரிந்திருக்க அவசியமில்லை. \\

எலேய் சிம்ரனை கொண்டு வந்து வச்சு ஓட்டு கேட்க வச்சது நீங்களா? இல்லை நாங்களா? போன தபா நீங்க களத்திலே வுட்ட லிஸ்ட் தரவா? நல்லா வாயில வருது... பேசாம ஓடி போயிடு.... நான் உண்மைதமிழன், டுபாக்கூர் தமிழன், சதீஷ்குமார்ன்னு எத்தன எழவுக்குடா பதில் சொல்லிகிட்டு இருப்பேன். இப்ப நீ வேறயா? ஏண்சா சாவடிக்கிறீங்க?