Total Pageviews

Showing posts with label உண்மைதமிழன். Show all posts
Showing posts with label உண்மைதமிழன். Show all posts

Tuesday, 22 March 2011

நடத்துங்க நடத்துங்க , எத்தனை தூரம் தான் போவீங்கன்னு பார்க்கிறோம்...



நான் ஒரு கட்டுரை எழுதி இரண்டு நாள் கூட ஆகவில்லை. அதாவது ஜெயலிதா எந்த தப்பு செய்தாலும் அது சசிகலா மற்றும் மன்னார்குடி குடும்பம், மத்த எந்த நல்லது நடந்தாலும் அது ராஜகுருக்கள் செய்தது என்று அவாள் எல்லாம் செய்யும் பரப்புரை. அதற்கு என் அன்பு அண்ணன் உண்மைதமிழனும் உடந்தை என்று. கூட்டணி கட்சிகள் தொகுதியையும் சேர்த்து ஜெ வெளியிடுவாராம் அதற்கு சசிகலாதான் காரணம் என்று சதிகலா என்னும் தலைப்பிட்டு ஜூனியர் விகடன் 3 நாள் முன்பாக எழுதுமாம். இப்படியாக ஜூவி எழுதி எழுதி தான் அதன் வாசகர்கள் முற்றிலும் ஒழிந்து போன நிலையில் உண்மைதமிழன் ஒரு கட்டுரை இப்போது எழுதி கிழித்திருகின்றார். அதாவது..

\\அவரது உற்ற தோழி சசிகலாவின் உறவினர்கள்,  அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை தீர்மானிப்பதில்  ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள் என்றும் நான் நம்புகிறேன்.


எனது நம்பிக்கைக்கு இன்னுமொரு காரணம்.. முதல் பட்டியல் வெளியானதற்கு மறுநாள் காலையில் நான் சந்தித்த ஒரு கார்டன் வட்டாரத்து அரசியல் பிரமுகர், அன்றைய நாளில் என்ன நடந்தது என்று சொன்னார்.


சசிகலாவின் சொந்த பந்தங்கள் அடங்கிய கிச்சன் கேபினட் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலைத் தயார் செய்து ஜெயலலிதாவிடம் கொடுத்துள்ளது. ஜெயலலிதா அதில் இருந்து 70 தொகுதிகளை மட்டும் டிக் செய்து “இந்தப் பட்டியலை மட்டும் வெளியிட்டுவிடுங்கள். மீதியை இன்னும் இரண்டொரு நாட்களில் இரண்டு பட்டியல்களாக வெளியிடலாம்” என்று அங்கேயிருந்த நடராசனின் சகோதரர் ராமச்சந்திரனிடம் சொல்லியுள்ளார்.


அந்த நேரத்தில் அங்கேயிருந்த சசிகலாவின் கிச்சன் கேபினட்டோ “ஒட்டு மொத்தமாகவே ரிலீஸ் செய்துவிடலாம்.. தாமதமானால் நமக்குத்தான் கஷ்டம்..” என்று சொல்லியிருக்கிறார்கள். “கூட்டணிப் பேச்சுவார்த்தையே இன்னும் முடியலையே.. அதுக்குள்ள எப்படி நாம மொத்தமா ரிலீஸ் செய்ய முடியும்..?” என்று கேட்டிருக்கிறார் ஜெயலலிதா.


அப்போது ராமச்சந்திரன் தன் கையில் வைத்திருந்த ஒட்டு மொத்த லிஸ்ட்டை ஜெயலலிதாவிடம் நீட்டி “நீங்க சரின்னு சொன்னீங்கன்னா இதையே வெளியிட்டுவிடலாம். கூட்டணி கட்சிக்காரங்க கேட்டாங்கன்னா சொல்லிக்கலாம். இன்னிக்கு நிலைமைக்கு இதுனால யாரும் நம்ம கூட்டணியைவிட்டு விலக மாட்டாங்க. கடைசி நேரம்ன்றதால நாம கொடுக்குற தொகுதிகளை வாங்கிக்கிட்டுப் போயிருவாங்க..” என்று கூறியிருக்கிறார். இதற்கு கிச்சன் கேபினட்டும் ஒத்து ஊதி பேசியிருக்கிறார்கள்..!


இது தொடர்பான சசிகலா குடும்பம், ஜெயலலிதா பேச்சுவார்த்தையில் முற்றிப் போன கோபத்துடன் தன் கையில் இருந்த 70 தொகுதி பட்டியலையும் வீசியெறிந்துவிட்டு “என்னமோ பண்ணித் தொலைங்க.. டூர் லிஸ்ட் போட்டுட்டு கூப்பிட்டீங்கன்னா வந்து தொலையறேன்” என்று கோபத்துடன் கத்திவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாராம்..!


முன்னரே சொல்லி வைத்திருந்தாற்போல 70 தொகுதி வேட்பாளர் பட்டியலை பெற்றுக் கொள்ள ஜெயா டிவியில் இருந்து ஆட்களும் வந்துவிட.. ராமச்சந்திரன் தானாகவே ஒரு முடிவெடுத்து ஜெயலலிதா டிக் செய்திருந்த 70 தொகுதி வேட்பாளர் பட்டியலை ஒதுக்கிவிட்டு தன் கையில் வைத்திருந்த 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பத்திரிகைகளுக்கு வெளியிடும்படி சொல்லிக் கொடுத்துவிட்டார்.


இதுதான் கார்டனில் அன்றைக்கு நடந்ததாக நான் விசாரித்தவரையில் தெரிந்தது. நான்கூட ஜெயலலிதாவுக்குத் தெரிந்துதான் பட்டியல் வெளியானது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்\\

உண்மை தமிழன் அண்ணே, இதல்லாம் மூன்று நாட்கள் முன்னதாக ஜூவியில் வந்துவிட்டது. ஏன் அண்ணே உனக்கு இந்த வேலை. ஏற்கனவே உனக்கு காபி பேஸ்ட் கந்தசாமின்னு பேர் இருக்கு. இதிலே இப்படி எழுதினா காப்பி அடிக்கும் கந்தசாமின்னு பேர் மாத்திட மாட்டாங்களா? நீ எழுதுவதில் ஒரு கிரியேட்டிவிட்டி இல்லை என்றும் சினிமா விமர்சனம் என்கிற பெயரில் அப்படியே அப்பட்டமாக கதையை எழுதுவதாகவும், எல்லா பேப்பரும் படித்து தொலைந்துவிட்டு அதை உன் டைப்பிங் திறமையால் வேகமாக டைப் அடிக்கின்றாய் என்றும் ஒரு பேச்சு இருக்கின்றது. நான் சொல்வது உண்மையா பொய்யா என நீயே உன்னை கேட்டுக்கொள்.

எங்க டைரக்டர் சொல்வது போல உன் கிட்ட இருந்து இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறேன். இப்ப பாரு இன்றைக்கு வந்த ரிப்போர்ட்டர். ஜெ அந்த லிஸ்ட் விடவில்லை என உன் குருநாதர் "சோ"மாறி ஆசைப்படுவதை நிறைவேற்ற வேறு ஒரு அழகான கோணத்தில் சிந்தித்து எழுதியிருக்கின்றது. ஐ லைக் இட். அதாவது ஜெ அப்பாவியாம். உளவுதுறை தான் எல்லாம் செஞ்சுதாம். ஜெ வெளியிட் சொன்ன லிஸ்ட்டுல 70 பேரோடு சேர்த்து மீதி 90 பேர் கூட்டணி கட்சிக்கு கொடுத்த பெயர்களையும் சேர்த்து ஜெ கையெழுத்தை ஸ்கேன் செஞ்சு அதன் அடியிலே போட்டு அதிமுக லெட்டர் பேடில் ஜெயா டிவிக்கு அனுப்பி அதாவது சைபர் கிரைம் போலீசை வைத்து போயஸ்கார்டன் நம்பர் அதிலே தெரிவது போல செய்து அனுப்பி அதை ஜெயா டிவி வெளியிட்டதாம். இத்தனை செய்யும் உளவுதுறை அதை முதலில் சன் டிவிக்கு அனுப்பி அவங்க வெளியிட்ட பின்ன தான் ஜெயா டிவி வெளியிட்டதாம். இப்படியாக போகின்றது அந்த கதை. தவிர "பக்" என்னும் கருவியை ஜெ ரூம்ல வச்சு ஜெ பேசுவதை எல்லாம் உளவுதுறை ரூம்ல இருந்து ஸ்பீக்கர்ல கேட்கலாமாம். அட... இவனுங்களுக்கே தெரிஞ்ச அந்த பக் இன்னும் அந்த பச்ச குழந்தை ஜெவுக்கு தெரியலையாம். பட் ஐ லைக் இட்.. அந்த கிரியேட்டிவிட்டி எனக்கு புடிச்சு இருக்கு. ஆனா நீ தெரு முனையிலே இருக்கும் டீக்கடைகார்னையே தெரியாத உனக்கு போயஸ்கார்டன்ல இருந்து நியூஸ் வந்துச்சுன்னு புரூடா விட்டு ஜூனியர் விகடன் எழுதியதையே எழுதி தொலைச்சி இருக்கே.

நான் திரும்ப திரும்ப சொல்கின்றேன். உனக்கு அரசியல் வராது விட்டுடு. ஆனா நீ எங்க கேட்க போகின்றாய்?

இந்த பத்திரிக்கை தர்மம் என்பதே செத்து போச்சு. இன்று வந்த நக்கீரனில் கூட பொள்ளாச்சி ஜெயராமன் தன் கையிலேயே அதிமுக தேர்தல் அறிக்கையை வச்சுகிட்டு அலைவதாகவும் அதை இவங்க ஆளுங்க போட்டோ எடுத்து ஜூம் பண்ணி பார்த்து விட்டதாகவும் ஒரு இலவச லிஸ்ட் கொடுத்து இருக்காங்க. அதுவும் தினமலர்ல 2 நாள் முன்னதாக வந்து விட்டது. அதை கூட உன்னைப்போல ஒருவன் சதீஷ்குமாரு காபிபேஸ்ட் அடிச்சுட்டான். அண்ணே உனக்கு சரியான போட்டி அண்ணே அவன். உனக்கு முன்னாலயே காபிபேஸ்ட் அடிக்கிறான். அவன் கதை பெரிய கதை. திமுக அறிக்கையை பார்த்து இதல்லாம் ஒரு பொழைப்பான்னு கட்டுரை எழுதி அது காயும் முன்னமே அதிமுக தேர்தல் அறிக்கை அதிரடின்னு அடிச்சுவிடுறான். அதாவது திமுக செஞ்சா அது இதல்லாம் ஒரு பொழைப்பா? அதுவே அதிமுக செஞ்சா அதிரடி?
 நானே உங்க ரெண்டு பேருக்கும் விளம்பரம் கொடுத்து கொடுத்து கெடுக்கின்றேனோ என வருத்தமாக இருந்தாலும் வேறு வழி இல்லை. நீங்க திருந்தும் வரை நான் இப்படியாக செய்து தான் ஆக வேண்டும்.

Monday, 21 March 2011

உனா தானாவும் அனா வானா வாவன்னாவும்... புரியலைன்னா உள்ள வந்து படிங்க...

அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அண்ணே, இலவசம் வேண்டாம் சரி உங்களுக்கு என்ன தான் வேணும்


பொய் தமிழன் : 24 மணி நேரமும் கரெண்ட் வேணும்


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : நீங்க ஒரு ஜெனரேட்டர் வாங்கி டீசல் போட்டு உங்க வீட்ல வச்சிக்கிட்டா என்ன


பொய் தமிழன் : அதுக்கு நிறைய காசு ஆகுமே


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : எவ்வளவு ஆகும்


பொய் தமிழன் : 2 லைட்டும், ஒரு பேனும் ஓட 3 மணி நேரம் ஜெனரேட்டர் ஓடினா, 10 ரூபாய் ஆகும், ஆனா கரெண்டுனா 3 ரூபா தான் ஆகும்


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அப்ப நீங்க 100 ரூபாய் கொடுத்து வாங்கும் கரெண்ட கவர்மெண்ட் 3 ரூபாய்க்கு தரனும், அதாவது 97 ரூபாய் இலவசமா தரணும். அப்படியா


பொய் தமிழன் :ஆமா


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அது இலவசம் இல்லையா


பொய் தமிழன் : டேய், எனக்கு தேவையானத அரசு தந்தா அது வளர்ச்சி, எனக்கு தேவையில்லை, என்னை விட ஏழைகளுக்கு தேவை யானத தந்தா இலவசம். தெரியுதா


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அண்ணே, இது அநியாயமுன்னா



பொய் தமிழன் : எனக்கும் தெரியும், ஆனா எப்படியாவது கலைஞரை திட்டனுமே. அதுக்குத்தால் இலவசமுன்னு திட்டுறேன்


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : ஏன்னே கலைஞரே திட்டுற


பொய் தமிழன் : அதுவா, கலைஞரை திட்டுனாத்தானே என்ன புத்திசாலின்னு ஒத்துக்குவாங்க

=============================================

அண்ணே உண்மை தமிழன் அண்ணே, நீ புத்திசாலின்னு நினைச்சுகிட்டு இருக்கும் முட்டாள் அண்ணே, இனியாவது அரசியல் பதிவு போடாம எதுனா சினிமா யாரு யாரை வச்சிருந்தாங்கன்னு எழுது அண்ணே, உனக்கு வராததை கட்டிகிட்டு அழுவாத அண்ணே. கலைஞரை திட்டுவதால உனக்கு எதும் கிடைக்க போவது இல்லை அண்ணே. ஜெயா உனக்கு எதும் தள்ளிட மாட்டா அண்ணே. இப்ப வைகோவை பார்த்தியா சீந்த ஆள் இல்லாம கார்த்திக்கும், பிஜேபியும் வாங்க எங்க தலைமையிலே கூட்டணி வச்சுக்கலாம்னு கூப்பிடுறான். போற போக்கை பார்த்தா உன்னை அந்த சதீஷ்குமாரு கூட கழட்டி விட்டுட்டு அவன் தொழிலை கிளிசோசியம் பார்க்க கிளி பொட்டிய தூக்கிகிட்டு போயிடுவான் அண்ணே, நீ இனிமே சினிமா மாத்திரம் எழுது அண்ணே!

Saturday, 19 March 2011

சோ, மைத்ரேயன், சுனாசாமிக்கு ஒரு நீதி, சசிகலாவுக்கு ஒரு நீதி? போடாங்.... போக்கத்த பய புள்ள டுர்ர்ர்ர்ர் கே சதீசுகொமாரு...

சோ, மைத்ரேயன், சுனாசாமிக்கு ஒரு நீதி, சசிகலாவுக்கு ஒரு நீதி? போடாங்....

இந்த ஜூவிபயலுங்க வர வர தம்ப்ரி சத்தீசுகொமாரு, அண்ணன் உண்மைதமிழன் ரேஞ்சுக்கு ஆகி தொலைச்சுபுட்டானுங்க. இந்தம்மா ஜெயலலிதா நம்ம விஜயகாந்து மாதிரியே பகல் ராவுன்னு ன்னு பார்க்காம ராவா உள்ளவுட்டுக்கும் பார்ட்டின்னு ஊரே அறிஞ்ச ரகசியம். அது காங்கிரசை இழுக்க பார்த்துதுன்னா ராஜதந்திரம, அது ஸ்ரீரங்கத்து பஸ்டாண்டுல நின்னுச்சுன்னா அது ராஜதந்திரம், அது ஸ்பெக்ட்ரம் பத்தி பேசினா, அறிக்கை விட்டா அது ராஜதந்திரம், அழகிரி விஜயகாந்தை பார்த்து மானம் உள்ளவர், ரோசம் உள்ளவர்ன்னு சொன்னா உடனே கூப்பிட்டு 41 சீட்டு குடுத்து கூட்டணில கையெழுத்து வாங்கினா அது ராஜதந்திரம், அது கூட்டணி கட்சிகளுக்கு சீட்டை குறைச்சு குடுத்தா அது ராஜதந்திரம், அது லிஸ்ட்டு குடுத்து அனுப்பிட்டு 160 சீட்டுக்கு உடனே வேட்பாளரை அறிவிச்சா உலகமகாதைரிய லெட்சுமி. அதுவும் ராஜதந்திரம். இத்தனையும் ஜெயலலிதா செய்வதுக்கு காரணமே சோ, மைத்ரேயன், சுனாசாமின்னு ராஜகுருவா இருக்கும் அவா தான். இப்படித்தான் ஜூனியர்விகடன் தன் ஆரிய விதையை சூடாக்கிக்கிட்டே இருக்கும். ஏன்னா ஜெயலலிதாவுக்கு பாவம் எதுவுமே தெரியாது பாருங்க. வாயிலே கையை வச்சாகூட கடிக்க தெரியாது.

ஆனா இதோ முந்தாநாள் சாதிக்பாட்சா செத்து போயிட்டாராம். உடனே ஜெயாடிவில சூட்டோட சூட்டா அதை வச்சு ஓன்னு அழுது புலம்பி தீர்த்துட்டு இனி கருணாநிதிய தூக்கி உள்ள போட வேண்டியது தான் பாக்கி. நாம இனி தனிக்காட்டு ராணி தான்னு நினைச்சுகிட்டு கூட்டணி கட்சியை எல்லாம் இப்போதே கசக்கி பிழிந்து தன் காலடியில் போட்டு வைக்கனும் என்கிற ரீதியில் தேமுதிக, கம்யூனிஸ்ட்டுகள், புதியதமிழகம் எல்லாத்துக்கும் ஒதுக்கிய சீட்டை எல்லாம் தன் கட்சி வேட்பாளர்களை அறிவிச்சுட்டு ஹாயா அடுத்த ரவுண்டு அடிக்க ஆரம்பிச்ச போது தான் முதல் ரவுண்டு வுட்டுகிட்டு இருந்த விஜயகாந்துக்கு இது தெரியவர கண்கள் சிவக்க சிவப்பு துண்டுகாரர்களையும் கூட்டு ஒப்பாரிக்கு அழைத்த்து கொண்டு பொங்கு பொங்குன்னு பொங்க இதுதான் சாக்குன்னு சன் டிவிகாரன் கூடவே அங்க நின்னுகிட்டு பச்சைகலர் கட்டிய ஜெயலைதாவை தீ வைத்து கொளுத்துவ்தை திரும்ப திரும்ப ஒளிபரப்பி விட்டு நிம்மதி மூச்சை இழுத்து விட்டான்.

அப்ப கூட கலைஞர்கிட்டே கேட்ட போது "அடுத்த வீட்டை எட்டிபார்கும் பழக்கம் எனக்கு இல்லை"ன்னு சொன்னாரு.அவருக்கு தான் நல்லா தெரியுமே. அங்க தா. பாண்டியன் இருக்கான். எப்படியும் அடிமைகளை கொண்டுவந்து பட்டியில் அடைத்து விடுவான் என்று. ஸ்டாலினோ "அடுத்தவர் சோகத்தை சந்தோசமாக கொண்டாடும் வழக்கம் அந்தம்மா மாதிரி எங்களுக்கு இல்லை"ன்னு சொன்னாங்க. பின்ன இல்லியா முரசொலி மாறன் இறந்த போது வெடிவெடிச்சு கொண்டாடின கூட்டம் தானே அது. இந்தம்மா போட்ட போடுல தமிழக மக்கள் சாதிக்பாட்சா செத்து போனதை சாதிக்கை புதைத்த மாதிரியே மனதில் இருந்து புதைச்சுட்டாங்க. ஆனா அங்க விஜயகாந்து & கோ அடிச்ச ரகளை எல்லாம் நேரிடையாக சன் டிவில ஒளிபரப்பு ஆகிகிட்டே இருக்க தமிழகம் முழுவதும் ஒரே காட்டு கூச்சல்.

நிலைமையை நன்கு புரிஞ்சுகிட்ட அந்த ராஜகுருக்கள் எல்லாம் சும்மா இருபபனுங்களா? இந்தமா தன் தலையிலேயே மண்ணை அள்ளிகிட்டு
இருப்பதை பார்த்து சும்மா இருப்பானுங்களா? உடனே தா. பாண்டியை கூப்பிட்டு எல்லாம் சொல்லிகுடுத்து உடனே பேச்சுவார்த்தை அது இதுன்னு செஞ்சுட்டானுங்கன்னு வச்சுகுங்க. அதல்லாம் விஷயம் இல்லை. ஜெயலலிதா எது செஞ்சாலும் ரைட்டு, ராஜதந்திரம், சோ, மைத்து(மைத்து என்றால் பிணம்ன்னு அர்த்தம் பாய்வூட்டுல) சுனாசாமி இவாள்ளாம் சொல்லுவா, இவா அட்வைஸ் படி தான் ஜெ நடந்துப்பான்னு சொல்லும் ஜூனியர் விகடன் இப்ப என்னா எழுதுறான்னா... இந்த லிஸ்ட் எல்லாமே சசிகலா தயாரிச்சதாம். ஒருகட்டத்துல ஜெயலலிதா நான் பிரச்சாரம் மாத்திரம் செஞ்சுக்கரேன். நீங்க எதுவேணா செஞ்சுகுங்கன்னு சொல்லுச்சாம். தவிர 70 பேர் தான் முதல் லிச்ட்டுல விட இருந்துச்சாம். இந்த சசிகலா என்னும் தேவர் ஜாதி பார்ட்டிதன் எல்லாத்தையும் வெளியிட்டுச்சாம்.

என்னட கன்றாவி இதல்லாம். ராஜதந்திரம்ன்னு நீ நினைப்பது எல்லாம் செஞ்சா மாத்திரம் மைத்து, சோ, சுனாசாமி குருப் குடுத்த ஆலோசனை. அபத்தமா செஞ்சா அது மாத்திரம் சசிகலா & பேமிலியா? இது எந்த ஊர் ஞாயம்டா சாமீ. அவா என்ன கிரவுண்டிலே நின்னுகிட்டு சிக்சர் அடிக்கிறா பாருங்கோ. ஜூவியை, ரிப்போர்டரை வச்சுகிட்டு அரசியல் காலம் ஓட்டும் சோசியக்காரன் தம்பி சதீசு கூட இதலலாம் படிக்க மாட்டான். ஆனா சாதிக்கு சாவை பத்தி மாத்திரம் பிரமாதமா பேசுவான்.

இன்னும் உண்மை தமிழன் அண்ணன் மாத்திரம் வாயையும் அதையும் மூடிகிட்டு இருக்குறாரு. அவாளுக்கு ஒரு நீதி, சசிகலாவுக்கு ஒரு நீதியா? இதை கேட்க வேண்டியது தானே இவாள்ளாம். கேட்க மாட்டாங்க. இப்பவும் கருணாநிதி எதுனா கோமணத்தை காயப்போட்டிருந்தா அதை எடுத்து வச்சுகிட்டு கிழிச்சுகிட்டு இருப்பாய்ங்க.

போங்கய்யா போங்கு ஆட்டம் ஆடும் ஆட்டுமந்தைகளா....

Tuesday, 15 March 2011

திமுக தோல்வியை உணர்ந்து விட்டதாம். உண்மைதமிழன் சொல்றாருங்கோவ்....

அண்ணே! நான் உங்க எழுத்துக்கு அடிமைண்ணே! எப்படித்தான் இம்புட்டு நீளமா அடிக்கிறீங்களோன்னு எனக்கு பிரம்மிப்பா இருக்கும். நீங்க அடிப்படையிலே ஒரு டைப்பிஸ்ட்ன்னு தெரியும். அத்தோட சினிமா சம்மந்தப்பட்ட தொழில்னும் வாசிச்சு இருக்கென். பிரபல பதிவர் என்பது இந்த உலகமே அறியும். ஆனா நீங்க அரசியல்ல ஒரு கட் பேஸ்ட்ன்னு எனக்கு மட்டும் தான் அண்ணே தெரியும். நல்லா கூர்ந்து கவனிச்சா அது சிலருக்கு புரியும். நீங்க ஒரு இட்லிவடை, துக்ளக் ஆதரவாளர். அப்படி இருக்கும் போது உண்மைதமிழன்னு பேர் வச்சிகிட்டதே கொஞ்சம் முரண் தான். அவங்களுக்கும் தமிழனுக்கும் என்னா சம்மந்தம்னு தெரியலை. ஆனாலும் அப்பப்ப ஈழத்தமிழர்களுக்காக வக்காலத்து வாங்குகிறேன் பேர்வழின்னு அந்த அப்பாவிகளையும் உங்க பதிவு சூடக்கிக்க வேண்டி சேர்த்துகுறீங்க. பாவம் அவங்களுக்கு என்னா தெரியும். யாராவது நமக்காக குரல் கொடுத்தா சரின்னு உங்களை ஆதரிச்சுகிட்டு இருக்காங்க. நீங்க உண்மையான துக்ளக் விசுவாசின்னு தெரிஞ்சா பாவம் மனசு உடைஞ்சு போயிடுவாங்க. அடிப்படையில் நீங்க ஒரு அதிமுக என்றும் அதை விட தீவிர பழுத்த கருணாநிதி விரோதி என்பதும் எல்லாருக்கும் வெளிப்படையா தெரியும். பின்ன அப்படி இருந்தும் ஏன் நடுநிலைவாதின்னு சொல்லிகிட்டு அலையுறீங்க?

அதல்லாம் விடுங்க. இப்ப சமீபத்துல எழுதின கட்டுரைக்கு வருவோம். என்னாது அது "தோல்வியை உணர்ந்துவிட்ட திமுக" தலைப்பு அருமைண்ணே. சென்னையை விட்டு திமுக த்லைவர்கள் எல்லாம் ஓடிகிட்டு இருக்காங்கன்னு எழுதி இருக்கீங்க. அதுக்கு காரணம் கேட்டா காங்கிரசுக்கு 5 சீட்டும், பாமக்வுக்கு ஒரு சீட்டும், முஸ்லீம்லீக்குக்கு ஒரு சீட்டும் குடுத்துட்டாங்களாம். கருணாநிதி திருவாரூர் ஓடிப்போறாராம். சரி ஓடட்டும். ஆனா அதுல ஒரு லாஜிக் இருக்குதே. அவரு சொந்த ஊரு அது. கடைசி காலத்தில் அங்க போகனும்னு ஆசைப்படுகின்றார்ன்னு ஒரு லாஜிக் இருக்குது. ஆனா ஜெயலலிதா பர்கூர்ல நின்னு ஜெயிச்சு முதல்வரா வந்ததை பத்தி ஏன் நினைச்சு பார்க்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க. பர்கூர் அந்தம்மா சொந்த ஊரா? ஆண்டிப்பட்டி அவங்க சொந்த ஊரா? எம் ஜி ஆருக்கு ஆண்டிப்பட்டி சொந்த ஊரா? நெடுஞ்செழியனுக்கு சேடப்பட்டி சொந்த ஊரா? அவங்க எல்லாம் தமிழ்நாட்டிலே எங்க வேண்டுமானாலும் நிக்கலாம். அப்ப அவங்க பயந்து போய் சென்னையை விட்டு போனதா நினைக்க மாட்டீங்க. ஆனா திமுக தலைவர் போனா மாத்திரம் உங்களுக்கு புசு புசுன்னு எரியும்.

சரி உங்க வாதத்துகே வருவோம். திமுக சென்னையை விட்டு பயந்து போய் ஓடுதுன்னா, அங்க ஸ்பெக்ட்ரம் பிரச்சனை தலைவிரிச்சு ஆடுதுன்னா அங்க உங்க த்லைவி ஜெயலலிதா நிக்க வேண்டியது தானே? இதுக்கு உங்க பதில் என்னான்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு அண்ணாச்சி.

காங்கிரஸ்ல என்னவோ விடியல் சேகரும், ஞானசேகரும் தான் தீவிர திமுக ஆதரவாளர்ன்னு சொல்றீங்க. ஆனா பீட்டர் அல்போன்ஸ் எல்லாம் ஜாக்கிரதையா மறந்து போயிட்டீங்க. இப்ப இருக்கும் சிட்டிங் எம் எல் ஏ எல்லாருமே திமுக அரசால் பயன் அடைந்தவர்கள் என்கிற ரீதியில் திமுக ஆதரவாளர்கள் தான். அதை எல்லாம் விடுங்க. அது திமுக-காங்கிரஸ் பிரச்ச்னைன்னு போகாம உடனே ரெண்டுத்துக்கும் பிரச்சனைன்னு சண்டை மூட்ட பார்க்குறீங்க. அதுக்கு உடனே ஈழத்தமிழர் போர்வையை எடுத்து போர்த்திக்கிட்டு வர்ரீங்க. அட போங்கண்ணே, நீங்க அரசியலுக்க்கு லாயக்கு இல்லை. சினிமாதான் உங்க தொழில். சீசன் பிசினஸ் பண்ணாதீங்க. அது எப்போதும் எடுபடாது. காமடியனா ஆகிடுவீங்க. உங்க மேல இருக்கும் அன்பினாலதான் சொல்றேன்.

\\தி.மு.க., காங்கிரஸைவிடவும் ஓட்டுப் போடக் காத்திருக்கும் மக்களாகிய நாம் இன்னமும் அதீத புத்திசாலித்தனத்துடன், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு இத்தேர்தலில் பட்டை நாமம் போட வேண்டியது நமது கடமையாகும்..\\

அடிக்கடி நாம் நாம்னு சொல்லிகிட்டு இருக்கீங்களே அண்ணே, அது என்ன ஒட்டு மொத்த தமிழகமுமா? இல்லாட்டி உங்க ரசிகர் கூட்டம் மட்டுமா? ரசிகர் கூட்டம்னு சொன்னா அவங்க எல்லாம் டொரண்டோ, நார்வேன்னு தானே இருககங்க. அவங்க எப்படி உங்க எழுத்தில் மயங்கி திமுக காங்கிரஸ்க்கு எதிர்ப்பா ஓட்டு போடுவாங்க. கொஞ்சம் சிந்திச்சு பாருங்க அண்ணே!