Total Pageviews

Monday 21 March 2011

இதோ இன்னும் ஒருத்தன் கிளம்பிட்டாண்டா...

சோரம் போன வடிவேலு
இன்று காமெடி நடிகர் வடிவேலு அறிவாலயத்திற்கு சென்று மு க ஸ்டாலின், மு க அழகிரி சந்தித்து தான் தி மு க கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவித்து மாலை, பொன்னாடை போன்ற சம்ப்ரதாய மரியாதைகளை பெற்று கொண்டார். பெட்டியை பின்னர் வாங்கிகொள்வார் என்று நினைக்கிறேன். ஒருவேளை சிங்கமுத்து மீது தன்னை ஏமாற்றி விட்டாதாக கலைஞர் காலை பிடித்து கதறிய பொழுது ஆப் தி ரெகார்ட் ஆக கைமாறிய தொகைக்கு நன்றி விசுவாசமாக இப்போது பிரச்சாரம் செய்வதாகவும் இருக்கலாம்.

இதை நீதான் பக்கத்துல இருந்து பார்த்தியா? அந்த சிங்கமுத்து செஞ்சது எல்லாம் அசிங்க முத்து வேலை. இதுல வடிவேலு கலைஞர் கால்ல விழுந்ததை நீ பார்த்தியா? போடாங்...

\\அதை விட முக்கியமான விஷயம் கேப்டனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு, தகராறு காரணமாகவும் இருக்கலாம். ஒருவேளை தி மு காவோடு கேப்டன் கை கோர்திருந்தால் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பாரா...இல்லை அம்மாவோடு இணைந்து தி மு க கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்திருப்பார தெரியவில்லை\\.

டேய் கேப்டன் கேப்டன்னு சொல்றியலே... அப்பன்னா மேஜர் சுந்தர்ராஜனை மேஜர்ன்னு சொல்லி கட்சி ஆரம்பிக்க வேண்டியது தானே. இதல்லாம் உங்க தப்பில்லை, நம்ம மிலிட்டரி நடவடிக்கை எடுக்காதௌ தான் குத்தம். இவனை கொண்டு போய் பாகிஸ்தான் பார்டர்ல விடனும். அப்ப கூட மிலிட்டரி ரம் இருக்குதான்னு தான் கேட்பான்.

\\பெரியார், காமராசர், அண்ணா, எம் ஜி யாரின் மொத்த உருவமாக தலைவர் கலைஞரை பார்க்கிறாராம் வடிவேல். கருமம் கருமம் இதைவிட ஒரு பெரிய அவமானத்தை இந்த மாபெரும் தலைவர்களுக்கு தந்துவிட முடியாது. வந்தமா, வாயை மூடிட்டு மாலையை, பொன்னாடையை வாங்கிவிட்டு போகவேண்டியது தானே மூதேவி.\\

எலேய் மூதேவி உனக்கு முதல்ல பெரியாரை பத்தி தெரியுமா? அண்ணாவை பத்தி தெரியுமா? பேச வந்துட்டானுங்க...

\\திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என ஒட்டுமொத்த திரையுலகம் இவர்களால் படும் பாடு சொல்ல முடியாத வேதனை. இந்த நிலையில் கர்ண பிரபு, மகராசன் என் சாமி என் கலைஞரை எப்படி இவரால் புகழ முடிகிறது என தெரியவில்லை.\\

ஆமாம்டா உங்க ஜெயா ஆட்சில தானே தியேட்டர் எல்லாம் மூடினீங்க. எல்லாம் குடோனா மாத்துனீங்க. இப்ப கொஞ்சமாவது பொழைச்சு போங்கன்னு எதுனா செஞ்சா உடனே குத்துதா?

\\பிரபலம்னு எவன் வந்தாலும் சரி, அவனுக்கு பட்டுக்குஞ்சம் வைத்து, அலங்கரித்து பிரசாரத்திற்கு அனுப்பிவிட வேண்டியது. அவனுக்கு கழக வரலாறு தெரியுமா..?, தமிழக வரலாறு தெரியுமா..? குறைந்தபட்சம் இன்று மக்களின் மனோ நிலை என்ன..? கடந்த ஆட்சியில் சாதனைகள் என்ற பெயரில் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன..? மனவேதனை என்ன..? எதுவும் தெரிந்திருக்க அவசியமில்லை. \\

எலேய் சிம்ரனை கொண்டு வந்து வச்சு ஓட்டு கேட்க வச்சது நீங்களா? இல்லை நாங்களா? போன தபா நீங்க களத்திலே வுட்ட லிஸ்ட் தரவா? நல்லா வாயில வருது... பேசாம ஓடி போயிடு.... நான் உண்மைதமிழன், டுபாக்கூர் தமிழன், சதீஷ்குமார்ன்னு எத்தன எழவுக்குடா பதில் சொல்லிகிட்டு இருப்பேன். இப்ப நீ வேறயா? ஏண்சா சாவடிக்கிறீங்க?

4 comments:

Jegan said...

Something Different.

பொன் மாலை பொழுது said...

:)))))))

VJR said...

ஹா ஹா ஹா ஹா....

Anonymous said...

நான் உண்மைதமிழன், டுபாக்கூர் தமிழன், சதீஷ்குமார்ன்னு எத்தன எழவுக்குடா பதில் சொல்லிகிட்டு இருப்பேன். இப்ப நீ வேறயா? ஏண்சா சாவடிக்கிறீங்க?//
என்னை கேவலமா திட்டி இருந்தாலும்,உண்மையிலியே சிரிச்சிட்டேன்..-;)).