Total Pageviews

Tuesday 15 March 2011

திமுக தோல்வியை உணர்ந்து விட்டதாம். உண்மைதமிழன் சொல்றாருங்கோவ்....

அண்ணே! நான் உங்க எழுத்துக்கு அடிமைண்ணே! எப்படித்தான் இம்புட்டு நீளமா அடிக்கிறீங்களோன்னு எனக்கு பிரம்மிப்பா இருக்கும். நீங்க அடிப்படையிலே ஒரு டைப்பிஸ்ட்ன்னு தெரியும். அத்தோட சினிமா சம்மந்தப்பட்ட தொழில்னும் வாசிச்சு இருக்கென். பிரபல பதிவர் என்பது இந்த உலகமே அறியும். ஆனா நீங்க அரசியல்ல ஒரு கட் பேஸ்ட்ன்னு எனக்கு மட்டும் தான் அண்ணே தெரியும். நல்லா கூர்ந்து கவனிச்சா அது சிலருக்கு புரியும். நீங்க ஒரு இட்லிவடை, துக்ளக் ஆதரவாளர். அப்படி இருக்கும் போது உண்மைதமிழன்னு பேர் வச்சிகிட்டதே கொஞ்சம் முரண் தான். அவங்களுக்கும் தமிழனுக்கும் என்னா சம்மந்தம்னு தெரியலை. ஆனாலும் அப்பப்ப ஈழத்தமிழர்களுக்காக வக்காலத்து வாங்குகிறேன் பேர்வழின்னு அந்த அப்பாவிகளையும் உங்க பதிவு சூடக்கிக்க வேண்டி சேர்த்துகுறீங்க. பாவம் அவங்களுக்கு என்னா தெரியும். யாராவது நமக்காக குரல் கொடுத்தா சரின்னு உங்களை ஆதரிச்சுகிட்டு இருக்காங்க. நீங்க உண்மையான துக்ளக் விசுவாசின்னு தெரிஞ்சா பாவம் மனசு உடைஞ்சு போயிடுவாங்க. அடிப்படையில் நீங்க ஒரு அதிமுக என்றும் அதை விட தீவிர பழுத்த கருணாநிதி விரோதி என்பதும் எல்லாருக்கும் வெளிப்படையா தெரியும். பின்ன அப்படி இருந்தும் ஏன் நடுநிலைவாதின்னு சொல்லிகிட்டு அலையுறீங்க?

அதல்லாம் விடுங்க. இப்ப சமீபத்துல எழுதின கட்டுரைக்கு வருவோம். என்னாது அது "தோல்வியை உணர்ந்துவிட்ட திமுக" தலைப்பு அருமைண்ணே. சென்னையை விட்டு திமுக த்லைவர்கள் எல்லாம் ஓடிகிட்டு இருக்காங்கன்னு எழுதி இருக்கீங்க. அதுக்கு காரணம் கேட்டா காங்கிரசுக்கு 5 சீட்டும், பாமக்வுக்கு ஒரு சீட்டும், முஸ்லீம்லீக்குக்கு ஒரு சீட்டும் குடுத்துட்டாங்களாம். கருணாநிதி திருவாரூர் ஓடிப்போறாராம். சரி ஓடட்டும். ஆனா அதுல ஒரு லாஜிக் இருக்குதே. அவரு சொந்த ஊரு அது. கடைசி காலத்தில் அங்க போகனும்னு ஆசைப்படுகின்றார்ன்னு ஒரு லாஜிக் இருக்குது. ஆனா ஜெயலலிதா பர்கூர்ல நின்னு ஜெயிச்சு முதல்வரா வந்ததை பத்தி ஏன் நினைச்சு பார்க்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க. பர்கூர் அந்தம்மா சொந்த ஊரா? ஆண்டிப்பட்டி அவங்க சொந்த ஊரா? எம் ஜி ஆருக்கு ஆண்டிப்பட்டி சொந்த ஊரா? நெடுஞ்செழியனுக்கு சேடப்பட்டி சொந்த ஊரா? அவங்க எல்லாம் தமிழ்நாட்டிலே எங்க வேண்டுமானாலும் நிக்கலாம். அப்ப அவங்க பயந்து போய் சென்னையை விட்டு போனதா நினைக்க மாட்டீங்க. ஆனா திமுக தலைவர் போனா மாத்திரம் உங்களுக்கு புசு புசுன்னு எரியும்.

சரி உங்க வாதத்துகே வருவோம். திமுக சென்னையை விட்டு பயந்து போய் ஓடுதுன்னா, அங்க ஸ்பெக்ட்ரம் பிரச்சனை தலைவிரிச்சு ஆடுதுன்னா அங்க உங்க த்லைவி ஜெயலலிதா நிக்க வேண்டியது தானே? இதுக்கு உங்க பதில் என்னான்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு அண்ணாச்சி.

காங்கிரஸ்ல என்னவோ விடியல் சேகரும், ஞானசேகரும் தான் தீவிர திமுக ஆதரவாளர்ன்னு சொல்றீங்க. ஆனா பீட்டர் அல்போன்ஸ் எல்லாம் ஜாக்கிரதையா மறந்து போயிட்டீங்க. இப்ப இருக்கும் சிட்டிங் எம் எல் ஏ எல்லாருமே திமுக அரசால் பயன் அடைந்தவர்கள் என்கிற ரீதியில் திமுக ஆதரவாளர்கள் தான். அதை எல்லாம் விடுங்க. அது திமுக-காங்கிரஸ் பிரச்ச்னைன்னு போகாம உடனே ரெண்டுத்துக்கும் பிரச்சனைன்னு சண்டை மூட்ட பார்க்குறீங்க. அதுக்கு உடனே ஈழத்தமிழர் போர்வையை எடுத்து போர்த்திக்கிட்டு வர்ரீங்க. அட போங்கண்ணே, நீங்க அரசியலுக்க்கு லாயக்கு இல்லை. சினிமாதான் உங்க தொழில். சீசன் பிசினஸ் பண்ணாதீங்க. அது எப்போதும் எடுபடாது. காமடியனா ஆகிடுவீங்க. உங்க மேல இருக்கும் அன்பினாலதான் சொல்றேன்.

\\தி.மு.க., காங்கிரஸைவிடவும் ஓட்டுப் போடக் காத்திருக்கும் மக்களாகிய நாம் இன்னமும் அதீத புத்திசாலித்தனத்துடன், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு இத்தேர்தலில் பட்டை நாமம் போட வேண்டியது நமது கடமையாகும்..\\

அடிக்கடி நாம் நாம்னு சொல்லிகிட்டு இருக்கீங்களே அண்ணே, அது என்ன ஒட்டு மொத்த தமிழகமுமா? இல்லாட்டி உங்க ரசிகர் கூட்டம் மட்டுமா? ரசிகர் கூட்டம்னு சொன்னா அவங்க எல்லாம் டொரண்டோ, நார்வேன்னு தானே இருககங்க. அவங்க எப்படி உங்க எழுத்தில் மயங்கி திமுக காங்கிரஸ்க்கு எதிர்ப்பா ஓட்டு போடுவாங்க. கொஞ்சம் சிந்திச்சு பாருங்க அண்ணே!

2 comments:

Manivannan Kamaraj said...

வணக்கம் விருச்சிககாந்த், இது தான் எனது முதல் பதிவு. முதல் முதலாக ஒரு வலை பதிவை பின் தொடர்கிறேன்.

திமுக / அதிமுக இரண்டுமே தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றினார்கள், ஏமாற்றுகிறார்கள், ஏமாற்றுவார்கள். இவர்கள் இரண்டு பேருக்கும் துதி பாடுவது தவறு.

இந்த இரண்டு திருடர்களில், அவர்கள் அடித்த கொள்ளை அளவை மதிப்பிட்டு மக்கள் ஓட்டு போடுவார்கள்.

Senthil said...

gud analysis!!!!!!!!

senthil,doha